என் மலர்
இஸ்லாம்
அல்லாஹ் தன்னை நம்பியவர்களுக்கு வாரி வழங்கும் நன்மைகள் எவை என்பதையும் யூனூஸ் நபிகளின் சரித்திரம் நமக்கு விளக்குகிறது.
அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களை அகில உலகத்திற்கும் அருட்கொடையாக, தனது தூதராக, உலகத்தினர் அனைவருக்குமான நபியாக, அல்லாஹ் அனுப்பி வைத்தான். ஆனால் அவர்கள் காலத்திற்கு முன்பு உலகின் ஒரு ஊருக்கோ, நாட்டிற்கோ அல்லது ஒரு கூட்டத்திற்கோ தான் நபிமார்கள் அனுப்பப்பட்டனர்.
ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரம் நபிமார்களை அனுப்பியதாக அல்லாஹ் தன் அருள்மறையிலே ஓர் இடத்தில் குறிப்பிட்டுள்ளான். ஆனால் அவர்களில் சிலரைப் பற்றிய குறிப்புகள் பல அத்தியாயங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இடம்பெற்றுள்ளது.
அப்படி குறிப்பிடப்பட்டுள்ள நபிகளில் யூனூஸ் நபியும் ஒருவர். ஒரு ஊருக்கான இறைத்தூதராக அவர் அனுப்பி வைக்கப்பட்டார். பல ஆண்டுகள் அல்லாஹ்வின் ஆற்றலை எடுத்துச் சொன்ன போதும் அந்த மக்கள் அதை நம்ப மறுத்து சிலைகளை வணங்கி வந்தார்கள். அதோடு யூனூஸ் நபிகளுக்கும் பலவகைகளில் துன்பங்கள் இழைத்து வந்தனர்.
யூனூஸ் நபிகள் பொறுமையின் எல்லையை அடைந்ததும் இறைவனிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்: “இறைவா, இந்த மக்களுக்கு இத்தனை ஆண்டு காலங்கள் உன் ஆற்றலை எடுத்துச் சொல்லியும், உன்னைத் தவிர்த்து வேறு யாரையும் வணங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியும் அவர்கள் ஏற்கவில்லை. இனிமேலும் இவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. எனவே இவர்களுக்கான முடிவு என்ன என்பதை நீ நிர்ணயம் செய்திருக்கிறாயோ அதனைக் கொண்டு இவர்களை தண்டித்து விடு”.
அல்லாஹ்வும் இந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான். “நபியே! நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். என் தூதுச் செய்தியை எடுத்துச் சொல்வது மட்டுமே உங்கள் கடமை. அவர்களை நேர்வழியில் நடத்துவதோ, இல்லை அவர்களுக்கான தண்டனையை தருவதோ என்னைச் சார்ந்தது. இன்று மாலை பெரும் சூறாவளி மழையால் அவர்களை அழித்து விடுவேன். நீங்கள் அதற்குள் இந்த ஊர் எல்லையை விட்டு சென்று விடுங்கள்” என்று ‘வஹி’ (இறைச்செய்தி) மூலம் யூனூஸ் நபிகளுக்கு இறைவன் அறிவித்தான்.
யூனூஸ் நபிகள், தன் மக்கள் கூட்டத்தை நோக்கி “நீங்கள் அல்லாஹ்வை ஏக இறைவனாக ஏற்றுக்கொள்ள மறுத்ததின் காரணத்தால் இன்று இரவுக்குள் உங்களை பெரும் சூறாவளி மழையினால் தண்டித்து அழித்து விடுவான்” என்று எச்சரிக்கை செய்து விட்டு அந்த ஊரை விட்டு சென்று விட்டார்கள்.
அல்லாஹ் விதித்த கட்டளை இறங்க ஆரம்பித்தது. வானில் அடர்ந்த கருமேகங்கள் சூழத்தொடங்கின. அந்த ஊர் மக்கள் தங்களுக்கு வரப்போகும் ஆபத்தை உணர்ந்து கொண்டார்கள்.
‘இது நிச்சயமாக யூனூஸ் நபிகள் சொன்ன இறைவனின் கோபப்பார்வை தான். இன்னும் சிறிது நேரத்தில் நாம் எல்லோரும் அழிந்து போவோம். எனவே எல்லோரும் ஊருக்கு வெளியே உள்ள மைதானத்தில் ஒன்று கூடுங்கள். நாம் செய்த பாவங்களுக்காக மன்னிப்பு கோருவோம். அல்லாஹ் ஒருவனையே நாம் வணங்கும் இறைவனாக ஏற்றுக்கொள்வோம்’ என்று சொல்லியவாறு ஒன்று திரண்டார்கள்.
அனைவரும் ஒன்றிணைந்து, உள்ளத்தால் உண்மையை உணர்ந்து அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடினார்கள்.
கருணையின் பிறப்பிடமான அல்லாஹ் உடனே மனம் இரங்கினான். ‘மக்களுக்கு எந்தவித தீங்கும் செய்ய வேண்டாம், கலைந்து செல்லுங்கள்’ என்று இறைவன் கட்டளையிட, மேகங்கள் கலைந்தன, வேதனையும் நிறுத்தப்பட்டது.
ஏக இறைவன் இந்த சம்பவத்தை திருக்குர்ஆனிலே குறிப்பிடும் போது, யூனூஸ் நபியின் கூட்டத்தார் போன்று மற்ற நபிகளின் கூட்டத்தாரும் மனம் திருந்தி வேதனையிலிருந்து தப்பித்திருக்க வேண்டாமா? என்ற தன் ஆசையையும் அதில் இவ்வாறு வெளிப்படுத்துகிறான்:
“தங்களுடைய நம்பிக்கை பலனளிக்கக்கூடிய விதத்தில் (வேதனை வருவதற்கு முன்னர் வேதனையின் அறிகுறியைக் கண்டதும், நம்பிக்கை கொண்டு வேதனையில் இருந்து தப்பித்துக் கொண்ட) ‘யூனூஸ்’ உடைய மக்களைப்போல மற்றொரு ஊரார் இருக்க வேண்டாமா?. அவர்கள் (வேதனையின் அறிகுறியைக் கண்டதும் வேதனை வருவதற்கு முன்னதாகவே) நம்பிக்கை கொண்டதனால், இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டு நாம் நீக்கிவிட்டோம். அன்றி, சிறிது காலம் சுகம் அனுபவிக்கவும் அவர்களை நாம் விட்டு வைத்தோம்.” (திருக்குர்ஆன் 10:98)
அந்த ஊர் இன்னும் சிறிது நேரத்தில் அழிந்து விடும் என்று எதிர்பார்த்திருந்த யூனூஸ் நபிகள், மேகங்கள் கலைந்து சென்றதும் கவலை கொண்டார்கள். தனக்கு அல்லாஹ் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையே என்ற ஆதங்கம் அவர்கள் மனதில் மேலோங்கியது.
அல்லாஹ்வைப் பொறுத்தவரை நபிமார்கள் அவன் தூதுவர்கள் மட்டும் தான். தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இறைவனை அவர்கள் நிர்பந்திக்க முடியாது. இறைவன் நாடியதே நடக்கும் என்பதற்கும் இது ஒரு பாடமாக அமைந்தது.
ஆனால், மனதில் கோபம் கொண்ட யூனூஸ் நபிகள், கடற்கரைக்குச் சென்று அங்கு நின்றிருந்த கப்பலில் ஏறி அந்த ஊரை விட்டே செல்ல முயன்றார். இந்த செயல் பிடிக்காத காரணத்தினால், யூனூஸ் நபியை சோதிக்க அல்லாஹ் முடிவு செய்தான்.
அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க அந்தக்கப்பல் நகர மறுத்தது. அக்கால வழக்கப்படி திருவுள சீட்டு போட்டு அதில் யார் பெயர் வருகிறதோ அவரை கடலில் தூக்கி எறிந்து விடுவார்கள். ‘கடலுக்கு பலி கொடுத்து விட்டால் கப்பல் நகர்ந்து விடும்’ என்ற மூட நம்பிக்கை மக்களிடம் இருந்தது. இதன்படி மூன்று முறை சீட்டு எழுதிப்போட்டும், அதில் யூனூஸ் நபிகளின் பெயரே தொடர்ந்து வந்தது. எனவே எல்லோரும் முடிவு செய்து யூனூஸ் நபியை கடலில் எறிந்தனர்.
அப்போது கடலில் உள்ள ஒரு மீனுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான், “என் தூதர் யூனூஸ் நபியை நீ விழுங்கி விடு. பாதுகாப்பாக அவரை நீ உன் வயிற்றில் சுமந்து கொள். என் கட்டளை வரும் போது நீ கரைக்குச் சென்று அவரை உயிரோடு விட்டுவிடு”.
இறைக்கட்டளைப்படி யூனூஸ் நபிகளை மீன் ஒன்று விழுங்கியது. மீன் வயிற்றில் அடைக்கலமான யூனூஸ் நபிகள் தன் தவறை உணர்ந்தவர்களாக அல்லாஹ்விடம் இறைஞ்சினார்.
இந்த நிகழ்வுகள் அத்தனையும் திருக்குர்ஆனிலே இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது:
“நிச்சயமாக யூனூசும் நம் தூதர்களின் ஒருவர் தான். மக்களால் நிறைந்த கப்பலின் பக்கம் அவர் தப்பி ஓடிய சமயத்தில் அதில் ஏறிக்கொண்டார். அக்கப்பலில் உள்ளவர்கள் சீட்டு குலுக்கி போட்டதில் இவர் கடலில் எறியப்பட வேண்டியவரானார். அவ்வாறு இவர்கள் எறியவே, மீன் அவரை விழுங்கி விட்டது. அச்சமயம் அவர் தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டிருந்தார். நிச்சயமாக அவர் நம்மை துதி செய்பவர்களில் ஒருவராக இல்லாதிருந்தால் மறுமையில் எழுப்பப்படும் நாள் வரை அவர் அதன் வயிற்றில் தங்கி இருந்திருப்பார். அவர் துதி செய்ததின் காரணமாக வெட்ட வெளியான பூமியில் மீன் வயிற்றிலிருந்து அவரை நாம் எறியச் செய்தோம்.” (திருக்குர்ஆன் 37:139-145)
“அவர் கோபமாக சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக் கொள்ள மாட்டோம் என்று எண்ணிக்கொண்டார். ஆதலால் அவரை ஒரு மீன் விழுங்கும்படி செய்து மீன் வயிற்றில் இருள்களிலிருந்த அவர் நம்மை நோக்கி, “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிக பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன். என்னை மன்னித்து அருள் புரிவாயாக” என்று பிரார்த்தனை செய்தார்.” (திருக்குர்ஆன் 21:87)
அல்லாஹ் அந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு யூனூஸ் நபிகளை காப்பாற்றினான். அதன்பின் நபியவர்களை “நூறாயிரம் அல்லது அதற்கும் அதிகமான மக்களிடம் தூதுவராக அனுப்பி வைத்தான்”. (திருக்குர்ஆன் 37:147).
இவ்வாறு யூனூஸ் நபியின் சரித்திரத்தை திருக்குர்ஆனில் பல அத்தியாயங்களில் அழகுற அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.
சாதாரண மக்கள் மட்டுமல்ல, இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபிகளும் இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை இந்த நிகழ்வு மூலம் நாம் அறியலாம். மேலும் அல்லாஹ் தன்னை நம்பியவர்களுக்கு வாரி வழங்கும் நன்மைகள் எவை என்பதையும் யூனூஸ் நபிகளின் சரித்திரம் நமக்கு விளக்குகிறது.
ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரம் நபிமார்களை அனுப்பியதாக அல்லாஹ் தன் அருள்மறையிலே ஓர் இடத்தில் குறிப்பிட்டுள்ளான். ஆனால் அவர்களில் சிலரைப் பற்றிய குறிப்புகள் பல அத்தியாயங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இடம்பெற்றுள்ளது.
அப்படி குறிப்பிடப்பட்டுள்ள நபிகளில் யூனூஸ் நபியும் ஒருவர். ஒரு ஊருக்கான இறைத்தூதராக அவர் அனுப்பி வைக்கப்பட்டார். பல ஆண்டுகள் அல்லாஹ்வின் ஆற்றலை எடுத்துச் சொன்ன போதும் அந்த மக்கள் அதை நம்ப மறுத்து சிலைகளை வணங்கி வந்தார்கள். அதோடு யூனூஸ் நபிகளுக்கும் பலவகைகளில் துன்பங்கள் இழைத்து வந்தனர்.
யூனூஸ் நபிகள் பொறுமையின் எல்லையை அடைந்ததும் இறைவனிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்: “இறைவா, இந்த மக்களுக்கு இத்தனை ஆண்டு காலங்கள் உன் ஆற்றலை எடுத்துச் சொல்லியும், உன்னைத் தவிர்த்து வேறு யாரையும் வணங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியும் அவர்கள் ஏற்கவில்லை. இனிமேலும் இவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. எனவே இவர்களுக்கான முடிவு என்ன என்பதை நீ நிர்ணயம் செய்திருக்கிறாயோ அதனைக் கொண்டு இவர்களை தண்டித்து விடு”.
அல்லாஹ்வும் இந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான். “நபியே! நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். என் தூதுச் செய்தியை எடுத்துச் சொல்வது மட்டுமே உங்கள் கடமை. அவர்களை நேர்வழியில் நடத்துவதோ, இல்லை அவர்களுக்கான தண்டனையை தருவதோ என்னைச் சார்ந்தது. இன்று மாலை பெரும் சூறாவளி மழையால் அவர்களை அழித்து விடுவேன். நீங்கள் அதற்குள் இந்த ஊர் எல்லையை விட்டு சென்று விடுங்கள்” என்று ‘வஹி’ (இறைச்செய்தி) மூலம் யூனூஸ் நபிகளுக்கு இறைவன் அறிவித்தான்.
யூனூஸ் நபிகள், தன் மக்கள் கூட்டத்தை நோக்கி “நீங்கள் அல்லாஹ்வை ஏக இறைவனாக ஏற்றுக்கொள்ள மறுத்ததின் காரணத்தால் இன்று இரவுக்குள் உங்களை பெரும் சூறாவளி மழையினால் தண்டித்து அழித்து விடுவான்” என்று எச்சரிக்கை செய்து விட்டு அந்த ஊரை விட்டு சென்று விட்டார்கள்.
அல்லாஹ் விதித்த கட்டளை இறங்க ஆரம்பித்தது. வானில் அடர்ந்த கருமேகங்கள் சூழத்தொடங்கின. அந்த ஊர் மக்கள் தங்களுக்கு வரப்போகும் ஆபத்தை உணர்ந்து கொண்டார்கள்.
‘இது நிச்சயமாக யூனூஸ் நபிகள் சொன்ன இறைவனின் கோபப்பார்வை தான். இன்னும் சிறிது நேரத்தில் நாம் எல்லோரும் அழிந்து போவோம். எனவே எல்லோரும் ஊருக்கு வெளியே உள்ள மைதானத்தில் ஒன்று கூடுங்கள். நாம் செய்த பாவங்களுக்காக மன்னிப்பு கோருவோம். அல்லாஹ் ஒருவனையே நாம் வணங்கும் இறைவனாக ஏற்றுக்கொள்வோம்’ என்று சொல்லியவாறு ஒன்று திரண்டார்கள்.
அனைவரும் ஒன்றிணைந்து, உள்ளத்தால் உண்மையை உணர்ந்து அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடினார்கள்.
கருணையின் பிறப்பிடமான அல்லாஹ் உடனே மனம் இரங்கினான். ‘மக்களுக்கு எந்தவித தீங்கும் செய்ய வேண்டாம், கலைந்து செல்லுங்கள்’ என்று இறைவன் கட்டளையிட, மேகங்கள் கலைந்தன, வேதனையும் நிறுத்தப்பட்டது.
ஏக இறைவன் இந்த சம்பவத்தை திருக்குர்ஆனிலே குறிப்பிடும் போது, யூனூஸ் நபியின் கூட்டத்தார் போன்று மற்ற நபிகளின் கூட்டத்தாரும் மனம் திருந்தி வேதனையிலிருந்து தப்பித்திருக்க வேண்டாமா? என்ற தன் ஆசையையும் அதில் இவ்வாறு வெளிப்படுத்துகிறான்:
“தங்களுடைய நம்பிக்கை பலனளிக்கக்கூடிய விதத்தில் (வேதனை வருவதற்கு முன்னர் வேதனையின் அறிகுறியைக் கண்டதும், நம்பிக்கை கொண்டு வேதனையில் இருந்து தப்பித்துக் கொண்ட) ‘யூனூஸ்’ உடைய மக்களைப்போல மற்றொரு ஊரார் இருக்க வேண்டாமா?. அவர்கள் (வேதனையின் அறிகுறியைக் கண்டதும் வேதனை வருவதற்கு முன்னதாகவே) நம்பிக்கை கொண்டதனால், இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டு நாம் நீக்கிவிட்டோம். அன்றி, சிறிது காலம் சுகம் அனுபவிக்கவும் அவர்களை நாம் விட்டு வைத்தோம்.” (திருக்குர்ஆன் 10:98)
அந்த ஊர் இன்னும் சிறிது நேரத்தில் அழிந்து விடும் என்று எதிர்பார்த்திருந்த யூனூஸ் நபிகள், மேகங்கள் கலைந்து சென்றதும் கவலை கொண்டார்கள். தனக்கு அல்லாஹ் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையே என்ற ஆதங்கம் அவர்கள் மனதில் மேலோங்கியது.
அல்லாஹ்வைப் பொறுத்தவரை நபிமார்கள் அவன் தூதுவர்கள் மட்டும் தான். தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இறைவனை அவர்கள் நிர்பந்திக்க முடியாது. இறைவன் நாடியதே நடக்கும் என்பதற்கும் இது ஒரு பாடமாக அமைந்தது.
ஆனால், மனதில் கோபம் கொண்ட யூனூஸ் நபிகள், கடற்கரைக்குச் சென்று அங்கு நின்றிருந்த கப்பலில் ஏறி அந்த ஊரை விட்டே செல்ல முயன்றார். இந்த செயல் பிடிக்காத காரணத்தினால், யூனூஸ் நபியை சோதிக்க அல்லாஹ் முடிவு செய்தான்.
அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க அந்தக்கப்பல் நகர மறுத்தது. அக்கால வழக்கப்படி திருவுள சீட்டு போட்டு அதில் யார் பெயர் வருகிறதோ அவரை கடலில் தூக்கி எறிந்து விடுவார்கள். ‘கடலுக்கு பலி கொடுத்து விட்டால் கப்பல் நகர்ந்து விடும்’ என்ற மூட நம்பிக்கை மக்களிடம் இருந்தது. இதன்படி மூன்று முறை சீட்டு எழுதிப்போட்டும், அதில் யூனூஸ் நபிகளின் பெயரே தொடர்ந்து வந்தது. எனவே எல்லோரும் முடிவு செய்து யூனூஸ் நபியை கடலில் எறிந்தனர்.
அப்போது கடலில் உள்ள ஒரு மீனுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான், “என் தூதர் யூனூஸ் நபியை நீ விழுங்கி விடு. பாதுகாப்பாக அவரை நீ உன் வயிற்றில் சுமந்து கொள். என் கட்டளை வரும் போது நீ கரைக்குச் சென்று அவரை உயிரோடு விட்டுவிடு”.
இறைக்கட்டளைப்படி யூனூஸ் நபிகளை மீன் ஒன்று விழுங்கியது. மீன் வயிற்றில் அடைக்கலமான யூனூஸ் நபிகள் தன் தவறை உணர்ந்தவர்களாக அல்லாஹ்விடம் இறைஞ்சினார்.
இந்த நிகழ்வுகள் அத்தனையும் திருக்குர்ஆனிலே இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது:
“நிச்சயமாக யூனூசும் நம் தூதர்களின் ஒருவர் தான். மக்களால் நிறைந்த கப்பலின் பக்கம் அவர் தப்பி ஓடிய சமயத்தில் அதில் ஏறிக்கொண்டார். அக்கப்பலில் உள்ளவர்கள் சீட்டு குலுக்கி போட்டதில் இவர் கடலில் எறியப்பட வேண்டியவரானார். அவ்வாறு இவர்கள் எறியவே, மீன் அவரை விழுங்கி விட்டது. அச்சமயம் அவர் தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டிருந்தார். நிச்சயமாக அவர் நம்மை துதி செய்பவர்களில் ஒருவராக இல்லாதிருந்தால் மறுமையில் எழுப்பப்படும் நாள் வரை அவர் அதன் வயிற்றில் தங்கி இருந்திருப்பார். அவர் துதி செய்ததின் காரணமாக வெட்ட வெளியான பூமியில் மீன் வயிற்றிலிருந்து அவரை நாம் எறியச் செய்தோம்.” (திருக்குர்ஆன் 37:139-145)
“அவர் கோபமாக சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக் கொள்ள மாட்டோம் என்று எண்ணிக்கொண்டார். ஆதலால் அவரை ஒரு மீன் விழுங்கும்படி செய்து மீன் வயிற்றில் இருள்களிலிருந்த அவர் நம்மை நோக்கி, “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிக பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன். என்னை மன்னித்து அருள் புரிவாயாக” என்று பிரார்த்தனை செய்தார்.” (திருக்குர்ஆன் 21:87)
அல்லாஹ் அந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு யூனூஸ் நபிகளை காப்பாற்றினான். அதன்பின் நபியவர்களை “நூறாயிரம் அல்லது அதற்கும் அதிகமான மக்களிடம் தூதுவராக அனுப்பி வைத்தான்”. (திருக்குர்ஆன் 37:147).
இவ்வாறு யூனூஸ் நபியின் சரித்திரத்தை திருக்குர்ஆனில் பல அத்தியாயங்களில் அழகுற அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.
சாதாரண மக்கள் மட்டுமல்ல, இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபிகளும் இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை இந்த நிகழ்வு மூலம் நாம் அறியலாம். மேலும் அல்லாஹ் தன்னை நம்பியவர்களுக்கு வாரி வழங்கும் நன்மைகள் எவை என்பதையும் யூனூஸ் நபிகளின் சரித்திரம் நமக்கு விளக்குகிறது.
ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. #EidMubarak #EidCelebration #EidNamaz
சென்னை:
ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதிலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. முப்பது நாட்கள் நோன்பிருந்து வழிபாடுகளில் ஈடுபட்டு, தான தர்மங்களை வழங்கி திருமறை ஓதி இறை உணர்வோடு கழித்த நிலையில், நிறைவாக இந்த நோன்புப் பெருநாள் இன்று கொண்டாடப்படுகிறது.


டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜும்மா மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள ரதபோராவில் நடைபெற்ற சிறப்பு தொழுகை, மும்பை மினரா மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகை என அனைத்து பகுதிகளிலும் நடைபெற்ற தொழுகைகளில் ஏராளமானோர் பங்கேற்று தொழுகை நடத்தினர்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஈத்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள காந்தி முனிசிபல் ஸ்டேடியத்தில் நடந்த தொழுகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டார். #EidMubarak #EidCelebration #EidNamaz
ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதிலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. முப்பது நாட்கள் நோன்பிருந்து வழிபாடுகளில் ஈடுபட்டு, தான தர்மங்களை வழங்கி திருமறை ஓதி இறை உணர்வோடு கழித்த நிலையில், நிறைவாக இந்த நோன்புப் பெருநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
ஒரு மாத காலம் கட்டுப்பாடாக வாழ உதவியதற்காகவும் இம்மாதத்தில் இறைமறையாம் திருக்குர்ஆனை அருளியதற்காகவும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் நாள் இது. இந்த பெருநாளை முன்னிட்டு அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. ‘ஈத்கா’ எனும் திறந்தவெளி தொழுகையும் நடைபெற்றது.

இந்த பெருநாளில் இஸ்லாமிய பெருமக்கள் காலையில் எழுந்தவுடன் குளித்து, புத்தாடையோ அல்லது தங்களிடம் இருப்பவற்றில் சிறந்த ஆடையையோ அணிந்து தொழுகைக்கு சென்றனர். தொழுகை நிறைவுற்றதும் மக்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜும்மா மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள ரதபோராவில் நடைபெற்ற சிறப்பு தொழுகை, மும்பை மினரா மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகை என அனைத்து பகுதிகளிலும் நடைபெற்ற தொழுகைகளில் ஏராளமானோர் பங்கேற்று தொழுகை நடத்தினர்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஈத்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள காந்தி முனிசிபல் ஸ்டேடியத்தில் நடந்த தொழுகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டார். #EidMubarak #EidCelebration #EidNamaz
கடந்த முப்பது நாட்களை நம்பிக்கையாளர்கள் நோன்பிருந்து, தான தர்மங்களை வழங்கி திருமறை ஓதி இறை உணர்வோடு கழித்தனர். இதன் நிறைவாக கொண்டாடப்படுவதே ஈகைத் திருநாள்.
கடந்த முப்பது நாட்களை நம்பிக்கையாளர்கள் நோன்பிருந்து வழிபாடுகளில் ஈடுபட்டு, தான தர்மங்களை வழங்கி திருமறை ஓதி இறை உணர்வோடு கழித்தனர். இதன் நிறைவாக கொண்டாடப்படுவதே ஈகைத் திருநாள் எனும் நோன்புப் பெருநாள் (அரபியில் ஈதுல் பித்ர்).
ஈகைத் திருநாள் ஒரு வெற்றித் திருநாள். பசி, தாகம், இச்சை போன்ற தேவைகளை விலக்கியும் தீமைகளைச் செய்யா வண்ணம் உடல் உறுப்புகளைக் கட்டுப்படுத்தியும் தன்னைத்தானே வெற்றி கொண்ட நாள். எதிரியை வெற்றிகொள்வதைவிட தன்னைத் தானே வெற்றிகொள்வதே மிகப் பெரும் வெற்றியாகும்.
இந்நாள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் நாள். ஒரு மாத காலம் கட்டுப்பாடாக வாழ உதவியதற்காகவும் இம்மாதத்தில் இறைமறையாம் திருக்குர்ஆனை அருளியதற்காகவும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் நாள். இறைவனை வணங்கியும் இறைவனுடைய படைப்புகளுக்கு வழங்கியும் நன்றி தெரிவிக்கும் நாள்.
இந்நாள் இறைவனை நினைவுகூரும் நாள். மிகவும் மகிழ்ச்சிகரமான நாட்களிலே இறைவனை மனிதன் மறந்துவிடுவான். இந்த நாளில் இறைவனை நமக்கு புரிந்த அருட்கொடைகளை நினைத்து தொழுகை, தியானம், நலிவுற்றவர்களுக்கும் துயருற்றவர்களுக்கும் உதவி செய்து இறைவனை நினைவுகூர வேண்டும்.
இது ஒரு அறுவடை நாள். நாம் செய்த வழிபாடுகளுக்காகவும், அறக்கொடைகளுக்காகவும் இறைவன் தனது கருணையை, மன்னிப்பை, அருளை வாரி வழங்கும் நாள். நாமும் அதே கருணையை சக மனிதர்களுக்கும் அன்பு, பொருள் உதவி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் மூலம் வழங்க வேண்டும்.
இந்நாள் மன்னிப்பு அளிக்கும் நாள். நாம் செய்த நற்செயல்களை நமது தவறுகளை இறைவன் மன்னிக்கும் நாள். மனம் திருந்தி, மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கோரினால் இறைவன் நமது பாவங் களை மன்னிப்பதாக வாக்களித்துள்ளான். இறைவன் நம்மை மன்னிப்பதைப் போலவே இந்நாளில் நாமும் நமக்கு தீங்கிழைத்தவர்களை மன்னிப்போம்.
“இறைவன் உங்களை மன்னிக்கவிருப்பது போல நீங்களும் மற்றவர்களை மன்னிக்க வேண்டாமா” என்று கேள்வி எழுப்புகிறது குர்ஆன் (24:22).
மன்னிப்பதன் மூலம் பழிவாங்கும் எண்ணத்திலிருந்து உள்ளம் விடுதலை பெற்று மனம் அமைதி பெறுகிறது. இதனால் சமூகமும் அமைதி பெறுகிறது.
இது அமைதிக்கான திருநாள். இறைவன் வழங்கிய இறைக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் இறைவனோடு அமைதி பெறுகின்றீர்கள். சமூகத்தோடும் அமைதி பெறுகின்றீர்கள். உங்களோடும் அமைதி பெறுகின்றீர்கள்.
ஈகைத் திருநாளை சமூகத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் தொழுகைக்கு செல்லும் முன்னரே ‘சதகத்துல் பித்ர்’ எனும் தான தர்மத்தை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

“பெருநாளன்று குளித்து, இருப்பவற்றில் சிறந்த ஆடையை அணிந்து ‘ஈத்கா’ எனும் திறந்தவெளிக்கு தொழுகைக்குச் செல்ல வேண்டும். (பள்ளிவாசல்களிலும் தொழுகை நடத்தலாம்) அங்கு தொழுகைக்குப் பின் பெருநாள் உரை நிகழ்த்தப்படும். அதிலும் கலந்துகொள்ள வேண்டும்.
தொழுகை நிறைவுற்றதும் மக்கள் ஒருவரையருவர் ஆரத்தழுவி தமது வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வார்கள். பெருநாளின்போது வீண் விரயத்திற்கும் கேளிக்கைகளுக்கும் இடமில்லை.
ஈகைத் திருநாள் ஒரு வெற்றித் திருநாள். பசி, தாகம், இச்சை போன்ற தேவைகளை விலக்கியும் தீமைகளைச் செய்யா வண்ணம் உடல் உறுப்புகளைக் கட்டுப்படுத்தியும் தன்னைத்தானே வெற்றி கொண்ட நாள். எதிரியை வெற்றிகொள்வதைவிட தன்னைத் தானே வெற்றிகொள்வதே மிகப் பெரும் வெற்றியாகும்.
இந்நாள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் நாள். ஒரு மாத காலம் கட்டுப்பாடாக வாழ உதவியதற்காகவும் இம்மாதத்தில் இறைமறையாம் திருக்குர்ஆனை அருளியதற்காகவும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் நாள். இறைவனை வணங்கியும் இறைவனுடைய படைப்புகளுக்கு வழங்கியும் நன்றி தெரிவிக்கும் நாள்.
இந்நாள் இறைவனை நினைவுகூரும் நாள். மிகவும் மகிழ்ச்சிகரமான நாட்களிலே இறைவனை மனிதன் மறந்துவிடுவான். இந்த நாளில் இறைவனை நமக்கு புரிந்த அருட்கொடைகளை நினைத்து தொழுகை, தியானம், நலிவுற்றவர்களுக்கும் துயருற்றவர்களுக்கும் உதவி செய்து இறைவனை நினைவுகூர வேண்டும்.
இது ஒரு அறுவடை நாள். நாம் செய்த வழிபாடுகளுக்காகவும், அறக்கொடைகளுக்காகவும் இறைவன் தனது கருணையை, மன்னிப்பை, அருளை வாரி வழங்கும் நாள். நாமும் அதே கருணையை சக மனிதர்களுக்கும் அன்பு, பொருள் உதவி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் மூலம் வழங்க வேண்டும்.
இந்நாள் மன்னிப்பு அளிக்கும் நாள். நாம் செய்த நற்செயல்களை நமது தவறுகளை இறைவன் மன்னிக்கும் நாள். மனம் திருந்தி, மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கோரினால் இறைவன் நமது பாவங் களை மன்னிப்பதாக வாக்களித்துள்ளான். இறைவன் நம்மை மன்னிப்பதைப் போலவே இந்நாளில் நாமும் நமக்கு தீங்கிழைத்தவர்களை மன்னிப்போம்.
“இறைவன் உங்களை மன்னிக்கவிருப்பது போல நீங்களும் மற்றவர்களை மன்னிக்க வேண்டாமா” என்று கேள்வி எழுப்புகிறது குர்ஆன் (24:22).
மன்னிப்பதன் மூலம் பழிவாங்கும் எண்ணத்திலிருந்து உள்ளம் விடுதலை பெற்று மனம் அமைதி பெறுகிறது. இதனால் சமூகமும் அமைதி பெறுகிறது.
இது அமைதிக்கான திருநாள். இறைவன் வழங்கிய இறைக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் இறைவனோடு அமைதி பெறுகின்றீர்கள். சமூகத்தோடும் அமைதி பெறுகின்றீர்கள். உங்களோடும் அமைதி பெறுகின்றீர்கள்.
ஈகைத் திருநாளை சமூகத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் தொழுகைக்கு செல்லும் முன்னரே ‘சதகத்துல் பித்ர்’ எனும் தான தர்மத்தை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

தொழுகை நிறைவுற்றதும் மக்கள் ஒருவரையருவர் ஆரத்தழுவி தமது வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வார்கள். பெருநாளின்போது வீண் விரயத்திற்கும் கேளிக்கைகளுக்கும் இடமில்லை.
அனைவருக்கும் ஈத் முபாரக் - ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்.
- டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
உலகம் முழுவதும் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த பண்டிகையின் சிறப்புகளைப் பார்ப்போம்.
ஒரே பண்டிகையை வெவ்வேறு நாடுகளில் பல்வேறு விதமாகக் கொண்டாடுவார்களென்றால் அது ஈகைத் திருநாளாகத்தான் இருக்கமுடியும்.
ஈகைத் திருநாளை இல்லாதவர்களுக்கு வாரிக் கொடுத்துக் கொண்டாடுவர். தங்களது புலன்களின் கட்டுப்பாட்டை முழுமைப்படுத்திவிட்ட மகிழ்ச்சியில் கொண்டாடுவர். தங்களால் நோன்பு ஏற்க முடிந்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டாடுவர். பல நாட்கள் மனஸ்தாபங்களை மகிழ்ச்சியான தினத்தில் மறந்துவிட வேண்டுமென்று நட்பு பாராட்டும், உறவை மேம்படுத்தும் தினமாகக் கொண்டாடுவர். தனது மகிழ்ச்சியில் மற்றவர்களைப் பங்கேற்க அழைத்துச் சகோதர சமுதாய நண்பர்களை வீட்டிற்கு அழைத்து அகம் மகிழ்ந்து விருந்து படைத்துக் கொண்டாடுவர். அக்கம் பக்கத்து வீட்டு நண்பர்களைத் தமது சந்தோஷத்தில் இணைத்துக் கொண்டு கொண்டாடுவர்.
மனம் மற்றும் உடல் கட்டுப்பாட்டுக்கான முப்பது நாள் நோன்பு பயிற்சி முடிந்து தொழுகைக்கு முன்பு கட்டாயமாக ஃபித்ராவை அதாவது தான் சாப்பிடும் ஒருநாளுக்குத் தேவையான அளவு (சராசரியாக இரண்டரை கிலோ) அரிசியையோ, கோதுமையையோ தானமாகத் தந்த பிறகே ஈகைத் திருநாளுக்கான தொழுகையை நிறைவேற்ற வேண்டும். பெருநாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே இந்த வகையான தானத்தை ஆரம்பிக்கலாம். இது ஒவ்வொருவருக்கும் கடமை. ஆதலால் ஒரு குடும்பத்தில் நான்கு நபர்கள் இருந்தால் ஃபித்ரா அரிசியையும் நான்கு மடங்காகவே தர வேண்டும். அதாவது ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியமாகும். இவ்வகைத் தர்மம் ஏழைகளுக்கு உணவாகும், நோன்பாளிகளைத் தூய்மைப்படுத்தவும், நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாகவும் அமையும். நோன்பு நோற்க முடியாதவர்கள் சார்பில் கொடுக்கப்படும் ஃபித்ரா ஏழைகளுக்கு உணவளித்த நன்மை கிடைக்கும்.
இந்தத் தானத்தை மிகவும் வசதிப் படைத்தவர்கள்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. தனக்கு ஒருவேளை உணவு இருந்தால் அதில் பங்கு வைத்துத் தானம் செய்ய இயன்றாலும் செய்யலாம். கடன் இல்லாதவர்கள் இவ்வகையான தானம் செய்வது சிறப்பானது. ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில், ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றார் பாரதி, அதையே பல்லாண்டுகளுக்கு முன்பாக வலியுறுத்தும் விதமாக, இருப்பதைப் பகிர்ந்து உண்ணுதலை வலியுறுத்தி ஏற்படுத்தப்பட்டதுதான் ஸகாத்தும், ஹதியாவும், ஃபித்ராவும்.

“அல்லாஹ் வட்டியை (அதில் எந்தப் பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; தன் கட்டளையை நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை” என்ற திருக்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயத்தின் 276-வது வசனம் வட்டியால் அழிவும், தர்மத்தால் நன்மையும் ஏற்படும் என்று நமக்குத் தெளிவுப்படுத்துகிறது.
ஸகாத்தைப் பொறுத்தவரையில் ஒரு வருடம் பூர்த்தியானால் வழங்க வேண்டும். பெரும்பாலும் ஈகைத் திருநாளின் போதே அந்த வருடத்திற்கான ஸகாத்தை செலுத்திவிடுவதே வழக்கத்தில் உள்ளது. நூற்றுக்கு இரண்டரை சதவீதம் என ஸகாத் கணக்குப் பார்த்து வழங்கப்பட வேண்டும். ஃபித்ராவும் ஹதியாவும் கையேந்துபவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் ஸகாத் என்பது சுய கௌரவமுள்ள, அதே வேளை ஸகாத்தைப் பெற தகுதியுள்ள, அடுத்தவனிடம் கையேந்தக் கூடாது என்று தன்மானத்துடன் வாழ்பவர்கள் வறுமையில் தொடர்ந்து வாழும் நிலை அல்லது தமது நிலையிலிருந்து மேலும் தாழ்ந்து செல்லும் துர்பாக்கியம் நிகழ்வதைக் காக்கும் கவசமாகிறது ஸகாத்.
ஈகைத்திருநாள் கொண்டாட்டம் என்பது கொடுப்பதும் குதூகலிப்பதும்.
ஈகைத் திருநாளை இல்லாதவர்களுக்கு வாரிக் கொடுத்துக் கொண்டாடுவர். தங்களது புலன்களின் கட்டுப்பாட்டை முழுமைப்படுத்திவிட்ட மகிழ்ச்சியில் கொண்டாடுவர். தங்களால் நோன்பு ஏற்க முடிந்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டாடுவர். பல நாட்கள் மனஸ்தாபங்களை மகிழ்ச்சியான தினத்தில் மறந்துவிட வேண்டுமென்று நட்பு பாராட்டும், உறவை மேம்படுத்தும் தினமாகக் கொண்டாடுவர். தனது மகிழ்ச்சியில் மற்றவர்களைப் பங்கேற்க அழைத்துச் சகோதர சமுதாய நண்பர்களை வீட்டிற்கு அழைத்து அகம் மகிழ்ந்து விருந்து படைத்துக் கொண்டாடுவர். அக்கம் பக்கத்து வீட்டு நண்பர்களைத் தமது சந்தோஷத்தில் இணைத்துக் கொண்டு கொண்டாடுவர்.
மனம் மற்றும் உடல் கட்டுப்பாட்டுக்கான முப்பது நாள் நோன்பு பயிற்சி முடிந்து தொழுகைக்கு முன்பு கட்டாயமாக ஃபித்ராவை அதாவது தான் சாப்பிடும் ஒருநாளுக்குத் தேவையான அளவு (சராசரியாக இரண்டரை கிலோ) அரிசியையோ, கோதுமையையோ தானமாகத் தந்த பிறகே ஈகைத் திருநாளுக்கான தொழுகையை நிறைவேற்ற வேண்டும். பெருநாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே இந்த வகையான தானத்தை ஆரம்பிக்கலாம். இது ஒவ்வொருவருக்கும் கடமை. ஆதலால் ஒரு குடும்பத்தில் நான்கு நபர்கள் இருந்தால் ஃபித்ரா அரிசியையும் நான்கு மடங்காகவே தர வேண்டும். அதாவது ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியமாகும். இவ்வகைத் தர்மம் ஏழைகளுக்கு உணவாகும், நோன்பாளிகளைத் தூய்மைப்படுத்தவும், நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாகவும் அமையும். நோன்பு நோற்க முடியாதவர்கள் சார்பில் கொடுக்கப்படும் ஃபித்ரா ஏழைகளுக்கு உணவளித்த நன்மை கிடைக்கும்.
இந்தத் தானத்தை மிகவும் வசதிப் படைத்தவர்கள்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. தனக்கு ஒருவேளை உணவு இருந்தால் அதில் பங்கு வைத்துத் தானம் செய்ய இயன்றாலும் செய்யலாம். கடன் இல்லாதவர்கள் இவ்வகையான தானம் செய்வது சிறப்பானது. ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில், ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றார் பாரதி, அதையே பல்லாண்டுகளுக்கு முன்பாக வலியுறுத்தும் விதமாக, இருப்பதைப் பகிர்ந்து உண்ணுதலை வலியுறுத்தி ஏற்படுத்தப்பட்டதுதான் ஸகாத்தும், ஹதியாவும், ஃபித்ராவும்.
ஸகாத் என்பது எல்லா முஸ்லிம்களுக்கும் கடமையான தர்மமாகும். இஸ்லாத்தில் மூன்றாவது தூணாக ஸகாத் கருதப்படுகிறது. ஸகாத் என்றால் தூய்மையடைதல் என்ற பொருளையும் தருகிறது. இது உளத்தூய்மையைக் குறிக்கிறது. பொருளீட்டும் நபருக்கு அந்தப் பொருளின் மீதான காதலை முறியடித்து, தன் சம்பாத்தியத்திலிருந்து ஒரு பங்கை தானமாகக் கொடுத்து அதில் கிடைக்கும் மனநிறைவை ஏற்படுத்துவதே ஸகாத்தின் நோக்கமாகும்.

ஸகாத்தைப் பொறுத்தவரையில் ஒரு வருடம் பூர்த்தியானால் வழங்க வேண்டும். பெரும்பாலும் ஈகைத் திருநாளின் போதே அந்த வருடத்திற்கான ஸகாத்தை செலுத்திவிடுவதே வழக்கத்தில் உள்ளது. நூற்றுக்கு இரண்டரை சதவீதம் என ஸகாத் கணக்குப் பார்த்து வழங்கப்பட வேண்டும். ஃபித்ராவும் ஹதியாவும் கையேந்துபவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் ஸகாத் என்பது சுய கௌரவமுள்ள, அதே வேளை ஸகாத்தைப் பெற தகுதியுள்ள, அடுத்தவனிடம் கையேந்தக் கூடாது என்று தன்மானத்துடன் வாழ்பவர்கள் வறுமையில் தொடர்ந்து வாழும் நிலை அல்லது தமது நிலையிலிருந்து மேலும் தாழ்ந்து செல்லும் துர்பாக்கியம் நிகழ்வதைக் காக்கும் கவசமாகிறது ஸகாத்.
ஈகைத்திருநாள் கொண்டாட்டம் என்பது கொடுப்பதும் குதூகலிப்பதும்.
ரமலான் ஏற்படுத்திய தாக்கத்தை ஆயுள்வரை காப்போம். ரமலானில் கடைப்பிடித்த நல்லறங்களை ஆயுள்வரை நீட்டிப்போம். ரமலானில் கைவிட்ட பாவங்களை ஆயுள்வரை விட்டொழிப்போம்.
இந்த வருடத்தின் ரமலான் மாதம் அனைத்து விதங்களிலும் சிறப்பாக களைகட்டி இருந்தது. இந்த மாதத்தில் நோன்பு நோற்று, ஐங்காலத் தொழுகைகளை பேணுதலாகத் தொழக்கூடியவர்களின் முகங்களும் களைகட்டியது.
புனித ரமலானில் முஸ்லிம்களிடம் வெளிப்பட்ட ஈகைத்தன்மையால் ஏழை, எளியோர், வழிப்போக்கர், நலிவுற்றோர், யாசிப்போர் ஆகியோரின் முகங்களிலும் களைகட்டிக் கொண்டிருக்கிறது.
உறவினர்களை நலம் விசாரித்ததில் உறவினர்களின் முகங்கள் களைகட்டிக் கொண்டிருக்கிறது. நட்பு வட்டாரத்தை நேரடியாகவோ, அலைபேசியிலோ தொடர்பு கொண்டு நட்பு பாராட்டும்போதும் நண்பர்களின் முகங்களும் களைகட்டிக் கொண்டிருக்கிறது.
பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதினால் அவர்களின் முகங்களும் களைகட்டியது. சிறியவர்களுக்கு இரக்கம் காட்டு வதினால் அவர்களின் முகங்களும் களைகட்டியது. பெற்றோருக்கு பணிவிடை செய்வதினால் அவர்களின் முகங்களும் களைகட்டியது.
சாதி, மத பேதமின்றி சமூக நல்லுறவை புனித ரமலானில் பேணுவதால் நாடே களை கட்டியது. வயிற்றைப் பேணி, கண்களைப் பேணி, காதுகளைப் பேணி, மூக்கைப் பேணி, நாவைப் பேணி, கை, கால்களைப் பேணி, மறைவிடத்தைப் பேணி ஐம்புலன்களை அடக்கி ஆளுவது ரமலானில் நடந்தது.
மனிதகுலம் வளர, மானுட வசந்தம் தளைக்க, மனித ஒழுக்கம் மேம்பட, நற்குணம் பெற, ஈகை அளித்திட, ஆன்மிகம் உயர, சமநீதி, சமதர்மம், சமஉரிமை, சமூக நல்லிணக்கம், வளமான வாழ்வு, வளமான தேசம், ஆரோக்கியமான சமுதாயம், உலக அமைதி பெற்றிட நோன்பு உறுதுணையாக உடன் இருந்தது.

இந்த ரமலான் கற்றுத்தந்த மற்றொரு பாடம் ஐந்து நேர ஜமாஅத் தொழுகைகளில் தவறாது கலந்து கொண்டோம். இரவு நேரத் தொழுகையிலும், நடுநிசித் தொழுகையிலும் பாவமன்னிப்புக் கோருவதிலும், பிரார்த்தனை புரிவதிலும் இன்முகத்துடன் கலந்து கொண்டோம்.
ஐங்காலத் தொழுகைகளில் முஸ்லிம்கள் இறையில்லங்களை நோக்கி சாரை சாரையாக, அணி அணியாக ரமலானில் படையெடுத்துவந்த காட்சி ஒரு அபூர்வ காட்சியாகும். இறையில்லங்களை இன்னும் விரிவாக்கம் செய்ய வேண்டுமோ என்று நினைக்கும் அளவுக்கு பள்ளிவாசல்களில் மக்கள் நெருக்கம் ஏற்பட்டு, நிரம்பி வழிந்தது.
இவை யாவும் ரமலான் எனும் பள்ளிக்கூடம் கற்றுத்தந்த ஒரு அற்புதமான பாடம். புனித ரமலானின் நோன்பு தந்த இறையச்சத்தின், மனப்பக்குவத்தின் தாக்கம். ரமலான் ஏற்படுத்திய இந்த தாக்கம் பிறை பார்த்தது முதல் பெருநாள் வரை மட்டுமே இருந்து ரமலானுடன் மட்டும் மறைந்து போவது வேதனையிலும் வேதனை.
ரமலானில் கண்காணித்துக் கொண்டிருந்த அதே இறைவன் ஆயுள்வரைக்கும் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான். முஸ்லிம்களுக்கு ரமலான் ஏற்படுத்திய தாக்கம் ரமலானுடன் மட்டும் முடிந்துவிடக்கூடாது.
ரமலான் ஏற்படுத்திய தாக்கத்தை ஆயுள்வரை காப்போம். ரமலானில் கடைப்பிடித்த நல்லறங்களை ஆயுள்வரை நீட்டிப்போம். ரமலானில் கைவிட்ட பாவங்களை ஆயுள்வரை விட்டொழிப்போம். குறிப்பாக கடமையான தொழுகை விஷயத்தில் கவனம் செலுத்தி, இடைவிடாது தொழுது வருவோம். இது குறித்து இறைவன் கூறுவதைப்பார்ப்போம்:
‘உண்மையாகவே குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் இறைநம்பிக்கையாளர்கள் மீது தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது.’ (திருக்குர்ஆன் 4:103)
‘யார் தொழுகையை மறந்து விடுவாரோ, அவர் நினைவு வந்ததும் அதைத் தொழுவதே அதற்குரிய பரிகாரமாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’ (நூல் : முஸ்லிம்)
‘நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள்’ (திருக்குர்ஆன் 23:9)
‘தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக் கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும்’. (திருக்குர்ஆன் 29:45)
‘பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவீராக’ (திருக்குர்ஆன் 11:114)
எந்த ஒரு வணக்கத்தையும் வாரம் வாரம் இல்லாமல், ஆண்டுக்கு ஒருமுறை இல்லாமல் நிரந்தரமாகச் செய்வதுதான் இறைவனிடம் மதிப்பு வாய்ந்ததாகக் கருதப்படும்.
‘உறுதியானது (மரணம்) வரும் வரை உமது இறைவனை வணங்குவீராக’ (திருக்குர்ஆன் 15:99).
“ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்குப் பிறகு வேறு எவரிடமும் கேட்க முடியாத இஸ்லாமியக் கடமை ஒன்றை எனக்கு ஏவுங்கள்’ என வேண்டினார். அதற்கு நபியவர்கள் ‘நான் அல்லாஹ்வை நம்பிவிட்டேன் என்று கூறிய பிறகு அதிலேயே நீர் நிலைத்து நிற்பீராக!’ என இவ்வாறு கூறினார்கள்.” (அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் சுப்யான் ஸகபீ (ரலி), நூல் : அஹ்மது)
‘நிலைத்து நிற்பது என்றால், கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றுவது’ என அலி (ரலி) கூறுகிறார்கள்.
‘தொழுகை என்பது முஸ்லிமான ஆண்களும், பெண்களும் பருவ வயதை அடைந்ததிலிருந்து மரணம் ஏற்படும் வரைக்கும் நிறைவேற்ற வேண்டிய கடமை. இது ரமலானில் மட்டும் நிறைவேற்றும் கடமை அல்ல.
ஒரு செயலுக்கு இறைவனிடம் சிறந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டுமானால் அதை ஒழுங்காகவும், நிரந்தரமாகவும் செய்ய வேண்டும்.
‘குறைவாக செய்தாலும் நிரந்தரமாக செய்யும் காரியமே இறைவனிடம் பிரியமானதாக உள்ளது’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி), புகாரி)
தொழுகையிலும், ரமலான் கற்றுத்தந்த இதர காரியங்களிலும் நாம் நீடித்து ஆயுள்வரை செய்வோம்! பேணிக் காப்போம்! ரமலான் ஏற்படுத்திய தாக்கத்தை உயிர் உள்ளவரை தக்க வைப்போம்!!
-மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.
புனித ரமலானில் முஸ்லிம்களிடம் வெளிப்பட்ட ஈகைத்தன்மையால் ஏழை, எளியோர், வழிப்போக்கர், நலிவுற்றோர், யாசிப்போர் ஆகியோரின் முகங்களிலும் களைகட்டிக் கொண்டிருக்கிறது.
உறவினர்களை நலம் விசாரித்ததில் உறவினர்களின் முகங்கள் களைகட்டிக் கொண்டிருக்கிறது. நட்பு வட்டாரத்தை நேரடியாகவோ, அலைபேசியிலோ தொடர்பு கொண்டு நட்பு பாராட்டும்போதும் நண்பர்களின் முகங்களும் களைகட்டிக் கொண்டிருக்கிறது.
பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதினால் அவர்களின் முகங்களும் களைகட்டியது. சிறியவர்களுக்கு இரக்கம் காட்டு வதினால் அவர்களின் முகங்களும் களைகட்டியது. பெற்றோருக்கு பணிவிடை செய்வதினால் அவர்களின் முகங்களும் களைகட்டியது.
சாதி, மத பேதமின்றி சமூக நல்லுறவை புனித ரமலானில் பேணுவதால் நாடே களை கட்டியது. வயிற்றைப் பேணி, கண்களைப் பேணி, காதுகளைப் பேணி, மூக்கைப் பேணி, நாவைப் பேணி, கை, கால்களைப் பேணி, மறைவிடத்தைப் பேணி ஐம்புலன்களை அடக்கி ஆளுவது ரமலானில் நடந்தது.
மனிதகுலம் வளர, மானுட வசந்தம் தளைக்க, மனித ஒழுக்கம் மேம்பட, நற்குணம் பெற, ஈகை அளித்திட, ஆன்மிகம் உயர, சமநீதி, சமதர்மம், சமஉரிமை, சமூக நல்லிணக்கம், வளமான வாழ்வு, வளமான தேசம், ஆரோக்கியமான சமுதாயம், உலக அமைதி பெற்றிட நோன்பு உறுதுணையாக உடன் இருந்தது.
அந்த வகையில் முஸ்லிம்களை கவர்ந்திழுத்து, நற்பண்புகளை போதித்து, நல்ல பாடங்களைக் கற்றுக்கொடுத்த ஒரு பாடசாலையாக ரமலான் திகழ்கிறது.

இந்த ரமலான் கற்றுத்தந்த மற்றொரு பாடம் ஐந்து நேர ஜமாஅத் தொழுகைகளில் தவறாது கலந்து கொண்டோம். இரவு நேரத் தொழுகையிலும், நடுநிசித் தொழுகையிலும் பாவமன்னிப்புக் கோருவதிலும், பிரார்த்தனை புரிவதிலும் இன்முகத்துடன் கலந்து கொண்டோம்.
ஐங்காலத் தொழுகைகளில் முஸ்லிம்கள் இறையில்லங்களை நோக்கி சாரை சாரையாக, அணி அணியாக ரமலானில் படையெடுத்துவந்த காட்சி ஒரு அபூர்வ காட்சியாகும். இறையில்லங்களை இன்னும் விரிவாக்கம் செய்ய வேண்டுமோ என்று நினைக்கும் அளவுக்கு பள்ளிவாசல்களில் மக்கள் நெருக்கம் ஏற்பட்டு, நிரம்பி வழிந்தது.
இவை யாவும் ரமலான் எனும் பள்ளிக்கூடம் கற்றுத்தந்த ஒரு அற்புதமான பாடம். புனித ரமலானின் நோன்பு தந்த இறையச்சத்தின், மனப்பக்குவத்தின் தாக்கம். ரமலான் ஏற்படுத்திய இந்த தாக்கம் பிறை பார்த்தது முதல் பெருநாள் வரை மட்டுமே இருந்து ரமலானுடன் மட்டும் மறைந்து போவது வேதனையிலும் வேதனை.
ரமலானில் கண்காணித்துக் கொண்டிருந்த அதே இறைவன் ஆயுள்வரைக்கும் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான். முஸ்லிம்களுக்கு ரமலான் ஏற்படுத்திய தாக்கம் ரமலானுடன் மட்டும் முடிந்துவிடக்கூடாது.
ரமலான் ஏற்படுத்திய தாக்கத்தை ஆயுள்வரை காப்போம். ரமலானில் கடைப்பிடித்த நல்லறங்களை ஆயுள்வரை நீட்டிப்போம். ரமலானில் கைவிட்ட பாவங்களை ஆயுள்வரை விட்டொழிப்போம். குறிப்பாக கடமையான தொழுகை விஷயத்தில் கவனம் செலுத்தி, இடைவிடாது தொழுது வருவோம். இது குறித்து இறைவன் கூறுவதைப்பார்ப்போம்:
‘உண்மையாகவே குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் இறைநம்பிக்கையாளர்கள் மீது தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது.’ (திருக்குர்ஆன் 4:103)
‘யார் தொழுகையை மறந்து விடுவாரோ, அவர் நினைவு வந்ததும் அதைத் தொழுவதே அதற்குரிய பரிகாரமாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’ (நூல் : முஸ்லிம்)
‘நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள்’ (திருக்குர்ஆன் 23:9)
‘தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக் கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும்’. (திருக்குர்ஆன் 29:45)
‘பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவீராக’ (திருக்குர்ஆன் 11:114)
எந்த ஒரு வணக்கத்தையும் வாரம் வாரம் இல்லாமல், ஆண்டுக்கு ஒருமுறை இல்லாமல் நிரந்தரமாகச் செய்வதுதான் இறைவனிடம் மதிப்பு வாய்ந்ததாகக் கருதப்படும்.
‘உறுதியானது (மரணம்) வரும் வரை உமது இறைவனை வணங்குவீராக’ (திருக்குர்ஆன் 15:99).
“ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்குப் பிறகு வேறு எவரிடமும் கேட்க முடியாத இஸ்லாமியக் கடமை ஒன்றை எனக்கு ஏவுங்கள்’ என வேண்டினார். அதற்கு நபியவர்கள் ‘நான் அல்லாஹ்வை நம்பிவிட்டேன் என்று கூறிய பிறகு அதிலேயே நீர் நிலைத்து நிற்பீராக!’ என இவ்வாறு கூறினார்கள்.” (அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் சுப்யான் ஸகபீ (ரலி), நூல் : அஹ்மது)
‘நிலைத்து நிற்பது என்றால், கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றுவது’ என அலி (ரலி) கூறுகிறார்கள்.
‘தொழுகை என்பது முஸ்லிமான ஆண்களும், பெண்களும் பருவ வயதை அடைந்ததிலிருந்து மரணம் ஏற்படும் வரைக்கும் நிறைவேற்ற வேண்டிய கடமை. இது ரமலானில் மட்டும் நிறைவேற்றும் கடமை அல்ல.
ஒரு செயலுக்கு இறைவனிடம் சிறந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டுமானால் அதை ஒழுங்காகவும், நிரந்தரமாகவும் செய்ய வேண்டும்.
‘குறைவாக செய்தாலும் நிரந்தரமாக செய்யும் காரியமே இறைவனிடம் பிரியமானதாக உள்ளது’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி), புகாரி)
தொழுகையிலும், ரமலான் கற்றுத்தந்த இதர காரியங்களிலும் நாம் நீடித்து ஆயுள்வரை செய்வோம்! பேணிக் காப்போம்! ரமலான் ஏற்படுத்திய தாக்கத்தை உயிர் உள்ளவரை தக்க வைப்போம்!!
-மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.
மனிதநேயத்தை எங்கள் உள்ளத்தில் விதைத்த ரமலானே சென்று வா. எங்கள் பாவங்களைப் போக்கி எங்களைத் தூய்மைப்படுத்திய ரமலானே சென்றுவா.
ரமலான் நம்மைவிட்டு பிரியவிருக்கின்றது. அடுத்த ரமலானுக்காக இன்னும் ஓர் ஆண்டு காத்திருக்க வேண்டும். இம்மாதம் முழுவதும் இறைவழிபாட்டிலும், இறை தியானத்திலும், இறைமறையை ஓதுவதிலும், இறையடியார்களுக்கு வழங்குவதிலும் கழிந்தது. பகலில் பசித்திருந்து, இரவில் விழித்திருந்து இறைவனை வணங்கினோம். இத்தனை சிரமப்பட்டு நோற்ற நோன்பு வீணாகிப் போய்விடக் கூடாது அல்லவா?
நோன்பு என்பது ஒரு ஆன்மிக, ஒழுக்க, மனித நேயத்திற்கான பயிற்சியாகும். இம்மாதத்தில் பெற்ற பயிற்சியை இம்மாதத்தோடு முடித்துவிட்டு பிற மாதங்களில் எப்போதும்போல வாழ்ந்தால் இந்த நோன்பு நம்மிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று ஆகிவிடும்.
ஒரு ராணுவ வீரன் படையில் சேருமுன் பயிற்சி பெறுகிறான். பின்னர் படையில் சேர்ந்து, அந்த பயிற்சியை செயல்படுத்துகின்றான். இதுபோலவே ஒவ்வொரு தொழில் செய்வோரும் முதலில் பயிற்சி பெற்று பின்னர் அந்தப் பயிற்சியின் அடிப்படையில் தமது தொழிலை அமைத்துக் கொள்கின்றனர்.
அதுபோலவே இறைவனும் தனது அடியார்களுக்கு தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற கடமைகளின் மூலம் பயிற்சி அளிக்கின்றான். பின்னர் அந்தப் பயிற்சியில் கற்றதை, பெற்றதை வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக. ஆனால் பயிற்சிக் காலத்தில் மட்டும் கட்டுப்பாடாக இருப்பேன். பின்னர் எப்படியும் நடந்துகொள்வேன் என்றால் அந்தப் பயிற்சி அவசியமில்லையே. இத்தனை சிரமங்களையும், தியாகங்களையும் செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே?
எனவே நோன்பு உங்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் குறித்து சுயசோதனை செய்யுங்கள். ஒரு செயல் வெற்றிபெற திட்டமிடுதல், செயல்படுத்துதல், சுயமதிப்பீடு செய்தல் ஆகிய இம்மூன்றும் முக்கியமாகும். எனவே உங்கள் வழிபாடுகளையும் சுயசோதனைக்கு உள்ளாக்குங்கள். வழிபாடுகளில் ஏற்பட்ட குறைகள் பற்றியும், வழிபாடுகள் ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் சுய சோதனை செய்யுங்கள்.
பயிற்சியின்போது பெற்றதை பழக்கமாக, இயல்பாக மாற்றுங்கள். ரமலானில் தொழுதது போலவே பிற மாதங்களில் தவறாது தொழுது வாருங்கள். ரமலானில் தீமைகளை பார்க்க, கேட்க, செய்ய அஞ்சியது போலவே பிற மாதங்களிலும் தீமைகளை கண்டால் விலகி ஓடுங்கள். ரமலானில் இல்லாதவருக்கு வழங்கியதுபோலவே என்றும் வழங்கி வாருங்கள்.
ரமலானில் குர்ஆனை ஓதியது போல தொடர்ந்து குர்ஆனை ஓதி வாருங்கள். பள்ளிவாசல்களிலும் திருக்குர்ஆன் விரிவுரை வகுப்புகளை தொடங்க முயற்சி செய்யுங்கள்.
உங்கள் பள்ளிவாசலில் ஏழைகளுக்கு நிரந்தரமாக எப்போதும் உதவி செய்யும் வகையில் பொதுநிதியை (பைத்துல்மால்) தொடங்குங்கள்.
ரமலானே! சென்றுவா. எங்களுக்கு ஆன்மிகப் பயிற்சி அளித்த ரமலானே சென்றுவா. மனிதநேயத்தை எங்கள் உள்ளத்தில் விதைத்த ரமலானே சென்று வா. எங்கள் பாவங்களைப் போக்கி எங்களைத் தூய்மைப்படுத்திய ரமலானே சென்றுவா.
டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
நோன்பு என்பது ஒரு ஆன்மிக, ஒழுக்க, மனித நேயத்திற்கான பயிற்சியாகும். இம்மாதத்தில் பெற்ற பயிற்சியை இம்மாதத்தோடு முடித்துவிட்டு பிற மாதங்களில் எப்போதும்போல வாழ்ந்தால் இந்த நோன்பு நம்மிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று ஆகிவிடும்.
ஒரு ராணுவ வீரன் படையில் சேருமுன் பயிற்சி பெறுகிறான். பின்னர் படையில் சேர்ந்து, அந்த பயிற்சியை செயல்படுத்துகின்றான். இதுபோலவே ஒவ்வொரு தொழில் செய்வோரும் முதலில் பயிற்சி பெற்று பின்னர் அந்தப் பயிற்சியின் அடிப்படையில் தமது தொழிலை அமைத்துக் கொள்கின்றனர்.
அதுபோலவே இறைவனும் தனது அடியார்களுக்கு தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற கடமைகளின் மூலம் பயிற்சி அளிக்கின்றான். பின்னர் அந்தப் பயிற்சியில் கற்றதை, பெற்றதை வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக. ஆனால் பயிற்சிக் காலத்தில் மட்டும் கட்டுப்பாடாக இருப்பேன். பின்னர் எப்படியும் நடந்துகொள்வேன் என்றால் அந்தப் பயிற்சி அவசியமில்லையே. இத்தனை சிரமங்களையும், தியாகங்களையும் செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே?
எனவே நோன்பு உங்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் குறித்து சுயசோதனை செய்யுங்கள். ஒரு செயல் வெற்றிபெற திட்டமிடுதல், செயல்படுத்துதல், சுயமதிப்பீடு செய்தல் ஆகிய இம்மூன்றும் முக்கியமாகும். எனவே உங்கள் வழிபாடுகளையும் சுயசோதனைக்கு உள்ளாக்குங்கள். வழிபாடுகளில் ஏற்பட்ட குறைகள் பற்றியும், வழிபாடுகள் ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் சுய சோதனை செய்யுங்கள்.
பயிற்சியின்போது பெற்றதை பழக்கமாக, இயல்பாக மாற்றுங்கள். ரமலானில் தொழுதது போலவே பிற மாதங்களில் தவறாது தொழுது வாருங்கள். ரமலானில் தீமைகளை பார்க்க, கேட்க, செய்ய அஞ்சியது போலவே பிற மாதங்களிலும் தீமைகளை கண்டால் விலகி ஓடுங்கள். ரமலானில் இல்லாதவருக்கு வழங்கியதுபோலவே என்றும் வழங்கி வாருங்கள்.
ரமலானில் குர்ஆனை ஓதியது போல தொடர்ந்து குர்ஆனை ஓதி வாருங்கள். பள்ளிவாசல்களிலும் திருக்குர்ஆன் விரிவுரை வகுப்புகளை தொடங்க முயற்சி செய்யுங்கள்.
உங்கள் பள்ளிவாசலில் ஏழைகளுக்கு நிரந்தரமாக எப்போதும் உதவி செய்யும் வகையில் பொதுநிதியை (பைத்துல்மால்) தொடங்குங்கள்.
ரமலானே! சென்றுவா. எங்களுக்கு ஆன்மிகப் பயிற்சி அளித்த ரமலானே சென்றுவா. மனிதநேயத்தை எங்கள் உள்ளத்தில் விதைத்த ரமலானே சென்று வா. எங்கள் பாவங்களைப் போக்கி எங்களைத் தூய்மைப்படுத்திய ரமலானே சென்றுவா.
டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
இம்மை ஒரு சோதனைக்களம். நற்செயல் புரிபவர்கள் யார் என்பதை கண்டறிவதற்காகவே வாழ்வும் மரணமும் படைக்கப்பட்டது(67:20) எனக் குர்ஆன் கூறுகிறது.
இம்மை ஒரு சோதனைக்களம். நற்செயல் புரிபவர்கள் யார் என்பதை கண்டறிவதற்காகவே வாழ்வும் மரணமும் படைக்கப்பட்டது(67:20) எனக் குர்ஆன் கூறுகிறது.
இம்மை வாழ்வில் நற்செயல் புரிந்து தீயசெயல் தவிர்த்து அறத்துடன் வாழ்ந்தவர்கள் நேர்மையாக உழைத்தவர்கள், நேர்மையாக வாழ்ந்ததற்காக பல இழப்புகளை சந்தித்தவர்கள், மனித சமூகத்திற்கு சேவை ஆற்றியவர்கள் ஆகியோருக்கு சுவனம் எனும் வெகுமதி வழங்கப்படும்.
மாறாக அம்மையில் அறக்கட்டளைகளுக்கு மாறுசெய்து தீமைகளை செய்தவர்கள், பிறர் உரிமைகள் பறித்தவர்கள், அநீதிகள், கொடுமைகள் இழைத்தவர்கள் ஆகியோருக்கு நரகம் எனும் தண்டனை வழங்கப்படும்.
தீமைகளைச் செய்தவர்களையும், இறை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களையும் இருசாராரின் வாழ்வும் மரணமும் சமமாகும் விதத்தில் ஒன்று போல் ஆக்கி விடுவோம் என்று எண்ணிக்கொண்டார்களா என்ன? இவர்கள் செய்யும் முடிவு எவ்வளவு கெட்டது. அல்லாஹ் வானங்களையும் பூமியையும் சத்தியத்துடன் படைத்திருக்கிறான். ஒவ்வொரு மனிதனுக்கு அவனவன் சம்பாதித்த கூலி வழங்கப்பட வேண்டும். மக்கள் மீது சிறிதும் வழங்கப்பட வேண்டும். மக்கள் மீது சிறிதும் அநீதி இழைக்கப்படக்கூடாது என்பதற்காக (45:21-22) என்ற இறைவசனம் இந்த உண்மையை நமக்கு வெளிப்படுத்துகிறது.
இறைவனின் விவேகம், கருணை, நீதி ஆகியவற்றை மறுமை வெளிப்படுத்துகிறது. நல்லவர்களுக்கும், தீயவர்களுக்கும் ஒரே முடிவு என்பது விவேகமுல்ல, கருணையுமல்ல, நீதியுமல்ல. தண்டனையும் வெகுமதியும் உரிய விசாரணைக்கு பின் சாட்சியாளர்களோடு நிரூபிக்கப்பட்ட பின்னர் வழங்கப்படும். இதுகுறித்து திருக்குர் ஆன் இவ்வாறு கூறுகிறது.
மனிதர்கள் செய்த ஒவ்வொன்றையும் ஒரு தெளிவான பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றது (36:12)
மறுமையில் அவனுடைய கரங்களில் அவன் செய்த வினைகள் பதிவு செய்யப்பட்ட சுவடி வழங்கப்பட்டு அதனை அவன் படிக்கும்படி கோரப்படுவான். (17:13-14)
அதைக்கண்ட மனிதன் அலறுவான்.
அந்தோ...எங்கள் துர்பாக்கியமே. இது என்ன பதிவேடு. எங்கள் செயல்களில் சிறிதோ பெரிதோ எதையும் பதிக்காமல் இது விட்டு வைக்கவில்லையே. தாங்கள் செய்தவை அனைத்தும் தம் முன்னால் இருப்பதை அவர்கள் காண்பார்கள். (18:49)
அவர்களின் காதுகளும், கண்களும், தோல்களும் உலகில் அவை என்வென்ன வேலைகளை செய்து கொண்டிருந்தன என்று மனிதனுக்கு எதிராகச் சாட்சி கூறும். (41:20,21)
அந்த மறுமை நாளில் எவரும் மற்றவர்களுக்கு கொடுத்து உதவ முடியாது. எந்தப் பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. யாரிடமிருந்தும் மீட்புப்பணம் பெற்று யாரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள். (குற்றவாளிகளான) அவர்களுக்கு எந்த உதவியும் செய்யப்பட மாட்டாது (2:48)
எனவே இம்மையை புறக்கணிக்காமல் இம்மையில் அனுமதிக்கப்பட்ட இன்பங்களை அனுபவித்து கொண்டே மறுமையில் வெற்றிக்காக உழையுங்கள். இம்மையில் சுகபோகங்களில் மூழ்கி நிலையான மறுமை வாழ்வை இழந்துவிடாதீர்கள்.
டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மது, சென்னை.
இம்மை வாழ்வில் நற்செயல் புரிந்து தீயசெயல் தவிர்த்து அறத்துடன் வாழ்ந்தவர்கள் நேர்மையாக உழைத்தவர்கள், நேர்மையாக வாழ்ந்ததற்காக பல இழப்புகளை சந்தித்தவர்கள், மனித சமூகத்திற்கு சேவை ஆற்றியவர்கள் ஆகியோருக்கு சுவனம் எனும் வெகுமதி வழங்கப்படும்.
மாறாக அம்மையில் அறக்கட்டளைகளுக்கு மாறுசெய்து தீமைகளை செய்தவர்கள், பிறர் உரிமைகள் பறித்தவர்கள், அநீதிகள், கொடுமைகள் இழைத்தவர்கள் ஆகியோருக்கு நரகம் எனும் தண்டனை வழங்கப்படும்.
தீமைகளைச் செய்தவர்களையும், இறை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களையும் இருசாராரின் வாழ்வும் மரணமும் சமமாகும் விதத்தில் ஒன்று போல் ஆக்கி விடுவோம் என்று எண்ணிக்கொண்டார்களா என்ன? இவர்கள் செய்யும் முடிவு எவ்வளவு கெட்டது. அல்லாஹ் வானங்களையும் பூமியையும் சத்தியத்துடன் படைத்திருக்கிறான். ஒவ்வொரு மனிதனுக்கு அவனவன் சம்பாதித்த கூலி வழங்கப்பட வேண்டும். மக்கள் மீது சிறிதும் வழங்கப்பட வேண்டும். மக்கள் மீது சிறிதும் அநீதி இழைக்கப்படக்கூடாது என்பதற்காக (45:21-22) என்ற இறைவசனம் இந்த உண்மையை நமக்கு வெளிப்படுத்துகிறது.
இறைவனின் விவேகம், கருணை, நீதி ஆகியவற்றை மறுமை வெளிப்படுத்துகிறது. நல்லவர்களுக்கும், தீயவர்களுக்கும் ஒரே முடிவு என்பது விவேகமுல்ல, கருணையுமல்ல, நீதியுமல்ல. தண்டனையும் வெகுமதியும் உரிய விசாரணைக்கு பின் சாட்சியாளர்களோடு நிரூபிக்கப்பட்ட பின்னர் வழங்கப்படும். இதுகுறித்து திருக்குர் ஆன் இவ்வாறு கூறுகிறது.
மனிதர்கள் செய்த ஒவ்வொன்றையும் ஒரு தெளிவான பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றது (36:12)
மறுமையில் அவனுடைய கரங்களில் அவன் செய்த வினைகள் பதிவு செய்யப்பட்ட சுவடி வழங்கப்பட்டு அதனை அவன் படிக்கும்படி கோரப்படுவான். (17:13-14)
அதைக்கண்ட மனிதன் அலறுவான்.
அந்தோ...எங்கள் துர்பாக்கியமே. இது என்ன பதிவேடு. எங்கள் செயல்களில் சிறிதோ பெரிதோ எதையும் பதிக்காமல் இது விட்டு வைக்கவில்லையே. தாங்கள் செய்தவை அனைத்தும் தம் முன்னால் இருப்பதை அவர்கள் காண்பார்கள். (18:49)
அவர்களின் காதுகளும், கண்களும், தோல்களும் உலகில் அவை என்வென்ன வேலைகளை செய்து கொண்டிருந்தன என்று மனிதனுக்கு எதிராகச் சாட்சி கூறும். (41:20,21)
அந்த மறுமை நாளில் எவரும் மற்றவர்களுக்கு கொடுத்து உதவ முடியாது. எந்தப் பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. யாரிடமிருந்தும் மீட்புப்பணம் பெற்று யாரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள். (குற்றவாளிகளான) அவர்களுக்கு எந்த உதவியும் செய்யப்பட மாட்டாது (2:48)
எனவே இம்மையை புறக்கணிக்காமல் இம்மையில் அனுமதிக்கப்பட்ட இன்பங்களை அனுபவித்து கொண்டே மறுமையில் வெற்றிக்காக உழையுங்கள். இம்மையில் சுகபோகங்களில் மூழ்கி நிலையான மறுமை வாழ்வை இழந்துவிடாதீர்கள்.
டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மது, சென்னை.
ரமலானில் ஓர் இரவு உள்ளது. அது ஆயிரம் மாதங்களை விட மேன்மையானது என திருக்குர்ஆனும் (97:1-3), நபிமொழியும் கூறுகின்றன.
ரமலானில் ஓர் இரவு உள்ளது. அது ஆயிரம் மாதங்களை விட மேன்மையானது என திருக்குர்ஆனும் (97:1-3), நபிமொழியும் கூறுகின்றன.
அந்த சிறப்பான நாளை ‘லைலத்துல் கத்ர்’ என்று கூறுகிறோம். அதன் பொருள் “கண்ணியமிக்க இரவு” என்பதாகும்.
இது ரமலானின் கடைசி பத்து தினங்களில் ஒற்றைப்படை நாட்களில் ஏதாவது ஒரு நாளில் வரும்.
ஆயிரம் மாதங்களை விட சிறந்தது என்று சொல்லப்படுவதற்கான காரணம் என்ன?
அந்நாளில் தான் அருள் மறையாம் திருக்குர்ஆன் அருளப்பட்டது. மனிதகுலத்திற்கு வழிகாட்டியாகவும், நேர்வழியை தெளிவாக அறிவிக்கக்கூடியதாகவும், நன்மை, தீமையை பிரித்தறியக்கூடியதுமான ஒரு வேதம் அருளப்பட்டது இந்த நாளில் தான். எனவே இந்த நாளைவிட உலகில் வேறு எந்த நாள் சிறப்புக்குரியதாக இருக்க முடியும்?
கண்ணிய மிக்க இரவை எப்படி கழிக்க வேண்டும்?
வழிகாட்டும் வான் மறையை அருளிய இறைவனுக்கு நன்றி செலுத்தும்விதமாக அந்நாளில் நாம் அதிக பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும்.
ரமலானின் கடைசி பத்து நாட்கள் வந்து விட்டால் பெருமானார் தம் இடுப்பில் உள்ள கச்சையை இறுக்கிக்கட்டிக் கொண்டு இரவெல்லாம் நின்று வணங்குவார்கள். தமது குடும்பத்தாரையும் விழித்து வணங்கச் சொல்வார்கள்.
எனவே இந்த இரவை வணக்கங்களால் நிரப்ப வேண்டும். அதோடு அதிகமாக பாவமன்னிப்பு கோரிக்கைகளில் ஈடுபட வேண்டும். பாவமன்னிப்பிற்காக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு நாட்களில் அதுவும் ஒன்றாகும்.
“இறைவனின் தூதரே! கண்ணியமிக்க இரவில் நான் என்ன செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டபோது இறைவனிடம் இவ்வாறு பிரார்த்திக்குமாறு நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“இறைவா, நிச்சயமாக நீயே மன்னிப்பவன்! மன்னிப்பை விரும்புபவன்! எனவே என்னை மன்னிப்பாயாக!
இந்த ஓர் இரவில் மட்டும் வணங்கி விட்டு, இதர நாட்களில் எப்படியும் நடந்து கொண்டு, ‘இறைவன் கூலி வழங்கிவிடுவான்’ என்று முடிவு செய்து செயல்படுபவர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாவர்கள்.
லைலத்துல் கத்ரில் கிட்டும் நன்மை ஒரு ஊக்கத்தொகை (போனஸ்) போன்றது. ஒரு அலுவலகத்தில் தொடர்ந்து சிறப்பாக வேலை செய்பவர்களுக்குத்தான் ஊக்கத் தொகை தருவார்கள். பிற நாட்களில் வேலை செய்யாமல் ஊக்கத்தொகை கொடுக்கும் நாளில் மட்டும் வருபவர்களுக்கு எவரும் ஊக்கத் தொகை அளிக்கமாட்டார்கள்.
“யார் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் புரிந்தார்களோ, அவர்கள் தாம் திண்ணமாக, படைப்பினங்களில் மிகவும் மேன்மை வாய்ந்தவர்கள்” என்று திருக்குர்ஆன் (98:7) குறிப்பிடுகிறது.
எனவே ஆண்டில் எல்லா நாட்களிலும் இறைவழிகாட்டல்களுக்கு பணிந்து வாழ்ந்து, கண்ணியமிக்க இரவிலும் வணங்குவோருக்கே அதிக கூலி கிட்டும்.
டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
அந்த சிறப்பான நாளை ‘லைலத்துல் கத்ர்’ என்று கூறுகிறோம். அதன் பொருள் “கண்ணியமிக்க இரவு” என்பதாகும்.
இது ரமலானின் கடைசி பத்து தினங்களில் ஒற்றைப்படை நாட்களில் ஏதாவது ஒரு நாளில் வரும்.
ஆயிரம் மாதங்களை விட சிறந்தது என்று சொல்லப்படுவதற்கான காரணம் என்ன?
அந்நாளில் தான் அருள் மறையாம் திருக்குர்ஆன் அருளப்பட்டது. மனிதகுலத்திற்கு வழிகாட்டியாகவும், நேர்வழியை தெளிவாக அறிவிக்கக்கூடியதாகவும், நன்மை, தீமையை பிரித்தறியக்கூடியதுமான ஒரு வேதம் அருளப்பட்டது இந்த நாளில் தான். எனவே இந்த நாளைவிட உலகில் வேறு எந்த நாள் சிறப்புக்குரியதாக இருக்க முடியும்?
கண்ணிய மிக்க இரவை எப்படி கழிக்க வேண்டும்?
வழிகாட்டும் வான் மறையை அருளிய இறைவனுக்கு நன்றி செலுத்தும்விதமாக அந்நாளில் நாம் அதிக பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும்.
ரமலானின் கடைசி பத்து நாட்கள் வந்து விட்டால் பெருமானார் தம் இடுப்பில் உள்ள கச்சையை இறுக்கிக்கட்டிக் கொண்டு இரவெல்லாம் நின்று வணங்குவார்கள். தமது குடும்பத்தாரையும் விழித்து வணங்கச் சொல்வார்கள்.
எனவே இந்த இரவை வணக்கங்களால் நிரப்ப வேண்டும். அதோடு அதிகமாக பாவமன்னிப்பு கோரிக்கைகளில் ஈடுபட வேண்டும். பாவமன்னிப்பிற்காக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு நாட்களில் அதுவும் ஒன்றாகும்.
“இறைவனின் தூதரே! கண்ணியமிக்க இரவில் நான் என்ன செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டபோது இறைவனிடம் இவ்வாறு பிரார்த்திக்குமாறு நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“இறைவா, நிச்சயமாக நீயே மன்னிப்பவன்! மன்னிப்பை விரும்புபவன்! எனவே என்னை மன்னிப்பாயாக!
இந்த ஓர் இரவில் மட்டும் வணங்கி விட்டு, இதர நாட்களில் எப்படியும் நடந்து கொண்டு, ‘இறைவன் கூலி வழங்கிவிடுவான்’ என்று முடிவு செய்து செயல்படுபவர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாவர்கள்.
லைலத்துல் கத்ரில் கிட்டும் நன்மை ஒரு ஊக்கத்தொகை (போனஸ்) போன்றது. ஒரு அலுவலகத்தில் தொடர்ந்து சிறப்பாக வேலை செய்பவர்களுக்குத்தான் ஊக்கத் தொகை தருவார்கள். பிற நாட்களில் வேலை செய்யாமல் ஊக்கத்தொகை கொடுக்கும் நாளில் மட்டும் வருபவர்களுக்கு எவரும் ஊக்கத் தொகை அளிக்கமாட்டார்கள்.
“யார் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் புரிந்தார்களோ, அவர்கள் தாம் திண்ணமாக, படைப்பினங்களில் மிகவும் மேன்மை வாய்ந்தவர்கள்” என்று திருக்குர்ஆன் (98:7) குறிப்பிடுகிறது.
எனவே ஆண்டில் எல்லா நாட்களிலும் இறைவழிகாட்டல்களுக்கு பணிந்து வாழ்ந்து, கண்ணியமிக்க இரவிலும் வணங்குவோருக்கே அதிக கூலி கிட்டும்.
டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள், இறைவனின் படைப்புகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள், நமக்கு நாமே செய்ய வேண்டிய கடமைகள் என மூன்று வகை கடமைகள் நம் முன் உள்ளன.
இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள், இறைவனின் படைப்புகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள், நமக்கு நாமே செய்ய வேண்டிய கடமைகள் என மூன்று வகை கடமைகள் நம் முன் உள்ளன.
‘ஐந்து விஷயங்களுக்கு முன் ஐந்து விஷயங்களை அரிதாகக் கருதுங்கள்’ என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
“முதுமைக்கு முன் இளமையையும், நோய்க்கு முன் உடல் நலத்தையும், வறு மைக்கு முன் செல்வத்தையும், வேலைக்கு முன் ஓய்வையும், மரணத்திற்கு முன் வாழ்வையும் அரிதாகக் கருதி அவற்றை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.” (மிஷ்காத்)
இளமை ஓர் அருட்கொடை. நற்செயல் அதிகம் புரிவதற்கு ஏற்ற பருவம். உடல் வலிமையும், மன வலிமையும், சிந்திக்கும் ஆற்றலும் உள்ள பருவம். இதனை வீணாக்கலாமா? எனவே, உடல் ஆரோக்கியம் இருக்கும்போதே நல்லவற்றை செய்துவிடு. நோய் எப்போது தாக்கும் என்று யாருக்கும் தெரியாது.
செல்வம் உன்னிடத்தில் உள்ளபோதே அறக்கொடைகளை வழங்கிவிடு, நெருக்கடி எப்போதும் வரலாம். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு நற்செயலில் ஈடுபடு. ஓய்வை வீணான செயல்களிலும், கேளிக்கைகளிலும் கழித்துவிட்டு பின்னர் வருந்தாதே.
இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம். இழந்த ஆரோக்கியத்தையும் பெறலாம். ஆனால் இழந்த நேரத்தை மீண்டும் பெற முடியாது.
இறைவன் நிர்ணயித்துள்ள கால அவகாசத்தை யாராலும் நீட்டிக்க முடியாது. எனவே நற்செயல் புரிவதை தள்ளிப்போடாதே.
“நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நீங்கள் செலவு செய்யுங்கள், உங்களில் எவருக்கேனும் மரண நேரம் வருவதற்கு முன்பாக. மேலும், அந்த நேரத்தில் அவர் கூறுவார்: “என் அதிபதியே! நீ எனக்கு இன்னும் சிறிதுகாலம் அவகாசம் அளிக்கக்கூடாதா, நான் தானதர்மம் செய்வேனே, நல்லோர்களில் ஒருவனாகி விடுவேனே. ஆனால், ஒருவருக்கு அவர் செயல்படுவதற்கான அவகாசம் முடிவடையும் நேரம் வந்துவிட்டாலோ எந்த மனிதனுக்கும் மேலும் கால அவகாசத்தை அல்லாஹ் கண்டிப்பாக அளிப்பதில்லை.” (63: 10-11)
இன்னும் சிலர் மரணத்திற்கு பின்னும் இப்படிப் புலம்புவார்களாம்.
“...என் இறைவனே! நான் விட்டு வந்துள்ள உலகுக்கு என்னைத் திரும்ப அனுப்புவாயாக! அங்கு நான் நற்செயல் புரிவேனே!” என்று கூறத் தொடங்குவான். அவ்வாறு ஒருபோதும் நடக்காது. இது அவன் பிதற்றிக் கொண்டிருக்கின்ற வெறும் வார்த்தைகள்தாம்”. (23:99-100)
நன்றே செய்க! இன்றே செய்க!
டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
‘ஐந்து விஷயங்களுக்கு முன் ஐந்து விஷயங்களை அரிதாகக் கருதுங்கள்’ என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
“முதுமைக்கு முன் இளமையையும், நோய்க்கு முன் உடல் நலத்தையும், வறு மைக்கு முன் செல்வத்தையும், வேலைக்கு முன் ஓய்வையும், மரணத்திற்கு முன் வாழ்வையும் அரிதாகக் கருதி அவற்றை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.” (மிஷ்காத்)
இளமை ஓர் அருட்கொடை. நற்செயல் அதிகம் புரிவதற்கு ஏற்ற பருவம். உடல் வலிமையும், மன வலிமையும், சிந்திக்கும் ஆற்றலும் உள்ள பருவம். இதனை வீணாக்கலாமா? எனவே, உடல் ஆரோக்கியம் இருக்கும்போதே நல்லவற்றை செய்துவிடு. நோய் எப்போது தாக்கும் என்று யாருக்கும் தெரியாது.
செல்வம் உன்னிடத்தில் உள்ளபோதே அறக்கொடைகளை வழங்கிவிடு, நெருக்கடி எப்போதும் வரலாம். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு நற்செயலில் ஈடுபடு. ஓய்வை வீணான செயல்களிலும், கேளிக்கைகளிலும் கழித்துவிட்டு பின்னர் வருந்தாதே.
இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம். இழந்த ஆரோக்கியத்தையும் பெறலாம். ஆனால் இழந்த நேரத்தை மீண்டும் பெற முடியாது.
இறைவன் நிர்ணயித்துள்ள கால அவகாசத்தை யாராலும் நீட்டிக்க முடியாது. எனவே நற்செயல் புரிவதை தள்ளிப்போடாதே.
“நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நீங்கள் செலவு செய்யுங்கள், உங்களில் எவருக்கேனும் மரண நேரம் வருவதற்கு முன்பாக. மேலும், அந்த நேரத்தில் அவர் கூறுவார்: “என் அதிபதியே! நீ எனக்கு இன்னும் சிறிதுகாலம் அவகாசம் அளிக்கக்கூடாதா, நான் தானதர்மம் செய்வேனே, நல்லோர்களில் ஒருவனாகி விடுவேனே. ஆனால், ஒருவருக்கு அவர் செயல்படுவதற்கான அவகாசம் முடிவடையும் நேரம் வந்துவிட்டாலோ எந்த மனிதனுக்கும் மேலும் கால அவகாசத்தை அல்லாஹ் கண்டிப்பாக அளிப்பதில்லை.” (63: 10-11)
இன்னும் சிலர் மரணத்திற்கு பின்னும் இப்படிப் புலம்புவார்களாம்.
“...என் இறைவனே! நான் விட்டு வந்துள்ள உலகுக்கு என்னைத் திரும்ப அனுப்புவாயாக! அங்கு நான் நற்செயல் புரிவேனே!” என்று கூறத் தொடங்குவான். அவ்வாறு ஒருபோதும் நடக்காது. இது அவன் பிதற்றிக் கொண்டிருக்கின்ற வெறும் வார்த்தைகள்தாம்”. (23:99-100)
நன்றே செய்க! இன்றே செய்க!
டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
தவறிழைத்தவர்கள் மன்னிப்புக் கோர வேண்டும். மனம் திருந்தி மன்னிப்பு கோருபவர்களை பாதிக்கப்பட்டவர்கள் மன்னிக்க வேண்டும். இவ்விரண்டும் மனிதனின் உயர்ந்த பண்புகளாகும்.
தவறிழைத்தவர்கள் மன்னிப்புக் கோர வேண்டும். மனம் திருந்தி மன்னிப்பு கோருபவர்களை பாதிக்கப்பட்டவர்கள் மன்னிக்க வேண்டும். இவ்விரண்டும் மனிதனின் உயர்ந்த பண்புகளாகும்.
பலவீனமான ஒருவன் மன்னிப்பது பெரிய விஷயமல்ல. ஆனால் வலிமை மிக்கவர்கள், தண்டிக்கும் அதிகாரம், ஆற்றல் பெற்றவர்கள் மன்னிப்பது மிகவும் உயர்ந்த செயலாகும்.
“(தண்டிக்கும்) சக்தி பெற்ற நிலையிலும் மன்னிப்பவரே இறைவனிடத்தில் கண்ணியத்திற்குரியவர்” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (நூல் : பைஹகி)
அவர் சொன்ன சொல்லுக்கு அவரே முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியவர்.
13 ஆண்டு காலம் மக்காவில் குறைஷிகள் நபிகளாருக்கு, சொல்ல முடியாத தாக்குதல்களையும் அவமானங்களையும், கொடுமைகளையும் இழைத்தார்கள். தமது தாயகமான மக்காவைத் துறந்து மதீனாவில் குடியேறும் நிலையை உருவாக்கினார்கள். 10 ஆண்டுகள் கழித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெற்றி வீரராக 10 ஆயிரம் பேர் கொண்ட படையோடு மக்காவிற்குள் நுழைகிறார்கள்.
குறைஷிகள் அச்சத்துடனும் பீதியுடனும் அவரது வருகையை எதிர்நோக்குகின்றார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் குறைஷிக் கூட்டத்தினரை நோக்கி “நீங்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கின்றீர்கள்” எனக் கேட்டார்.
குறைஷிகள்: “நீங்கள் எங்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்வீர்கள். நீங்கள் எங்களுக்கு சிறந்த சகோதரராய், எங்களில் சிறந்த சகோதரரின் மகனாகவும் இருக்கின்றீர்கள்” என்றார்கள்.
பெருமானார் குறைஷிகளை நோக்கி, “இன்றைய தினம் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. இறைவன் உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவான். அவன் கருணையாளர்களில் எல்லாம் கருணையாளன்” என்ற இறைவசனத்தை ஓதி (12:92) குறைஷிகளை மன்னித்தார்கள்.
மன்னிக்க மன உறுதியும், வீரமும் தேவை. பழிவாங்குவது சாதாரண மனிதர்களின் இயல்பு. மன்னிப்பவர்களே மனிதர்களில் மாணிக்கமாகத் திகழ்கின்றார்கள்.
“யார் பொறுமையை மேற்கொள்ளவும், மன்னித்துவிடவும் செய்கின்றார்களோ அவர்களின் இந்த செயல் உறுதிமிக்க (வீரச்) செயலைச் சார்ந்ததாகும்” என்று கூறுகிறது திருக்குர்ஆன் (42:43).
மன்னிப்பு அளிப்பதால் அவர்களின் மாண்பு உயர்கின்றதே தவிர குறைவதில்லை. ஒருவன் (பிறரை) மன்னிக்கும்போது இறைவன் அவனின் கண்ணியத்தையும், மாண்பையும் அதிகரித்துவிடுகின்றான் என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (முஸ்லிம்: 5047)
தவறு செய்த அனைவரையும் மன்னித்தால் குற்றவாளிகளின் எண்ணிக்கை பெருகிவிடுமே என்ற கேள்வி எழுவது இயற்கை. இதற்கும் பெருமானார் வழிகாட்டுகிறார்கள். தனக்குத் தனிப்பட்ட முறையில் அநீதிகளை இழைத்தோரை மன்னித்தார்கள். அதே வேளையில் அரசுக்கு, பொது மக்களுக்கு எதிராக குற்றங்கள் இழைத்தோரை தண்டிக்கவும் செய்தார்கள். அவ்வாறு செய்யாவிடில் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது.
தவறு செய்பவர்களை தண்டிக்கலாம், மன்னிக்கலாம், தீமை செய்தவர்களுக்கு நன்மையும் செய்யலாம், இம்மூன்றிற்கும் மனித வாழ்வில் இடமுண்டு.
அல்லாஹ் மாபெரும் கிருபையாளன். அவன் நம் பாவங்களை மன்னித்து நம்மை நல்வழிப்படுத்தவே விரும்புகின்றான். மனம் திருந்தி வரும் அடியார்களை இறைவன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றான்.
இஸ்லாம் என்றாலே அமைதி என்றும் கீழ்ப்படிதல் என்றும் பொருள். இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படியும் போதே அமைதி கிட்டும். இறைவனின் ஒரு கட்டளையை ஏற்று இன்னொரு கட்டளையை புறக்கணித்தால் அமைதி கிட்டாது.
எந்தப்செயலையும் முழுமையாகவும், நிறைவாகவும் அழிகாகவும் ஈடுபாட்டோடும், தூய எண்ணத்தோடும் செய்யும் போதுதான் அச்செயல் வெற்றி பெறும். அரைகுறை மனதோடு அரைவேக்காட்டுத்தனமாகச் செய்யப்படும் செயல்கள் பயனற்றதாக இருக்கும்.
வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் முழுமையான தெளிவான வழிபாட்டுதலை இஸ்லாம் தருகிறது. இது நடைமுறை சார்ந்தது. முழுமையான மார்க்கத்தை முழுமையாக பின்பற்றுவது சரியானது.
இறைநம்பிக்கை கொண்டோரே, நீங்கள் முழுக்க முழுக்க இஸ்லாத்தில் நுழைந்து விடுங்கள். மேலும் ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் நிச்சயமாக அவன் உங்களுக்கு வெளிப்படையான பகைவனாவான் (திருக்குர்ஆன் 2:208)
நீங்கள் வேதத்தின் ஒரு பகுதியை நம்பி மறுபகுதியை நிராகரிக்கின்றீர்களா?(திருக்குர்ஆள் 2:85)
மேற்கூறப்பட்ட இறைவசனங்கள் இறைமார்க்கத்தை கூறுபோட்டு பின்பற்ற வேண்டாம் என்பதை வலியுறுத்துகிறது.
இம்மையில் மூழ்சி மறுமையை மறந்து விடுபவர்கள் செய்யும் செயல்களின் பட்டியல் இது :
தொழுபவர்களாக இருப்பவர்கள் - ஜகாத் கொடுக்க மாட்டார்க்ள். ரமலானில் பக்தியாக இருப்பவர்கள் - ரமலான் முடிந்ததும் பழைய நிலைக்கு திரும்பிவிடுவார்கள்.
ஜாகத் கொடுப்பார்கள் - தொழ மாட்டார்கள். தடை செய்யப்பட்ட உணவை உண்ணமாட்டார்கள் - ஆனால் தடைசெய்யப்பட்ட வியாபாரத்தை செய்வார்கள்.
வணக்கங்களில் உறுதியாக இருப்பார்கள் - வணக்கத்தின் நோக்கமான ஒழுக்கத்ததை (தக்வாவை) பெறுவதில் உறுதியாக இருக்க மாட்டார்கள். படைத்தவனுக்குரிய கடமைகளை செய்வார்கள். படைப்புக்களுக்குரிய கடமைகளை விட்டு விடுவார்கள்.
இறைவனுடைய உரிமைகளை (அதாவது வழிபாடுகள்) நிறைவேற்றுவார்கள் - ஆனால் மனித உரிமைகளை பறிப்பார்கள். அறப்பணிகளுக்கு எளிதில் பொருள் வழங்க மாட்டார்கள் - ஆனால் விழாக்களை ஆடம்பரமாக நடத்தி வீண் விரயம் செய்வார்கள்.
இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவ்வாறு செய்பவர்கள், ஒன்று மார்ககத்தை சரியாகத் புரிந்து கொள்ளவில்லை. அல்லது புரிந்தும் தங்கள் மன இச்சைகளுக்கு கீழ்ப்படிகிறார்கள். சூழ்நிலைகளில் தாக்கங்களுக்கு பலியாகின்றனர். நேர்வழியை விட்டு விலகி விடுகின்றார்கள்.
இந்த நிலையில் நீடிப்பது அவர்களுக்கு நல்லதல்ல. அப்படிப்பட்டவர்கள் உடனே இறைவனின் பக்கம் திரும்பிட வேண்டும். இதுவரை செய்த தவறுகளுக்கு இறைவனிடம் மன்றாடி மன்னிப்புக்கோரி அவனிடமே மீள வேண்டும்.
எங்கள் இறைவனே எங்களுக்கு நாங்களே அக்கிரமம் செய்து கொண்டோம். எங்களை நீ மன்னித்து எங்களுக்கு கிருபை செய்யாவிடில் நிச்சயமாக நாங்கள் இழப்பிற்குரியவர்களாகி விடுவோம்.(திருக்குர்ஆன் 7:23)
அல்லாஹ் மாபெரும் கிருபையாளன். அவன் நம் பாவங்களை மன்னித்து நம்மை நல்வழிப்படுத்தவே விரும்புகின்றான். மனம் திருந்தி வரும் அடியார்களை இறைவன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றான்.
- டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
எந்தப்செயலையும் முழுமையாகவும், நிறைவாகவும் அழிகாகவும் ஈடுபாட்டோடும், தூய எண்ணத்தோடும் செய்யும் போதுதான் அச்செயல் வெற்றி பெறும். அரைகுறை மனதோடு அரைவேக்காட்டுத்தனமாகச் செய்யப்படும் செயல்கள் பயனற்றதாக இருக்கும்.
வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் முழுமையான தெளிவான வழிபாட்டுதலை இஸ்லாம் தருகிறது. இது நடைமுறை சார்ந்தது. முழுமையான மார்க்கத்தை முழுமையாக பின்பற்றுவது சரியானது.
இறைநம்பிக்கை கொண்டோரே, நீங்கள் முழுக்க முழுக்க இஸ்லாத்தில் நுழைந்து விடுங்கள். மேலும் ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் நிச்சயமாக அவன் உங்களுக்கு வெளிப்படையான பகைவனாவான் (திருக்குர்ஆன் 2:208)
நீங்கள் வேதத்தின் ஒரு பகுதியை நம்பி மறுபகுதியை நிராகரிக்கின்றீர்களா?(திருக்குர்ஆள் 2:85)
மேற்கூறப்பட்ட இறைவசனங்கள் இறைமார்க்கத்தை கூறுபோட்டு பின்பற்ற வேண்டாம் என்பதை வலியுறுத்துகிறது.
இம்மையில் மூழ்சி மறுமையை மறந்து விடுபவர்கள் செய்யும் செயல்களின் பட்டியல் இது :
தொழுபவர்களாக இருப்பவர்கள் - ஜகாத் கொடுக்க மாட்டார்க்ள். ரமலானில் பக்தியாக இருப்பவர்கள் - ரமலான் முடிந்ததும் பழைய நிலைக்கு திரும்பிவிடுவார்கள்.
ஜாகத் கொடுப்பார்கள் - தொழ மாட்டார்கள். தடை செய்யப்பட்ட உணவை உண்ணமாட்டார்கள் - ஆனால் தடைசெய்யப்பட்ட வியாபாரத்தை செய்வார்கள்.
வணக்கங்களில் உறுதியாக இருப்பார்கள் - வணக்கத்தின் நோக்கமான ஒழுக்கத்ததை (தக்வாவை) பெறுவதில் உறுதியாக இருக்க மாட்டார்கள். படைத்தவனுக்குரிய கடமைகளை செய்வார்கள். படைப்புக்களுக்குரிய கடமைகளை விட்டு விடுவார்கள்.
இறைவனுடைய உரிமைகளை (அதாவது வழிபாடுகள்) நிறைவேற்றுவார்கள் - ஆனால் மனித உரிமைகளை பறிப்பார்கள். அறப்பணிகளுக்கு எளிதில் பொருள் வழங்க மாட்டார்கள் - ஆனால் விழாக்களை ஆடம்பரமாக நடத்தி வீண் விரயம் செய்வார்கள்.
இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவ்வாறு செய்பவர்கள், ஒன்று மார்ககத்தை சரியாகத் புரிந்து கொள்ளவில்லை. அல்லது புரிந்தும் தங்கள் மன இச்சைகளுக்கு கீழ்ப்படிகிறார்கள். சூழ்நிலைகளில் தாக்கங்களுக்கு பலியாகின்றனர். நேர்வழியை விட்டு விலகி விடுகின்றார்கள்.
இந்த நிலையில் நீடிப்பது அவர்களுக்கு நல்லதல்ல. அப்படிப்பட்டவர்கள் உடனே இறைவனின் பக்கம் திரும்பிட வேண்டும். இதுவரை செய்த தவறுகளுக்கு இறைவனிடம் மன்றாடி மன்னிப்புக்கோரி அவனிடமே மீள வேண்டும்.
எங்கள் இறைவனே எங்களுக்கு நாங்களே அக்கிரமம் செய்து கொண்டோம். எங்களை நீ மன்னித்து எங்களுக்கு கிருபை செய்யாவிடில் நிச்சயமாக நாங்கள் இழப்பிற்குரியவர்களாகி விடுவோம்.(திருக்குர்ஆன் 7:23)
அல்லாஹ் மாபெரும் கிருபையாளன். அவன் நம் பாவங்களை மன்னித்து நம்மை நல்வழிப்படுத்தவே விரும்புகின்றான். மனம் திருந்தி வரும் அடியார்களை இறைவன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றான்.
- டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
இஸ்லாமியக் கோட்பாடுகளை பின்பற்றும் சமூகத்தை “உம்மத்தன் வஸத்தன்” என்று குர்ஆன் (2:143) வர்ணிக்கிறது. அதன் பொருள் நடுநிலைச் சமுதாயம்-சமநிலைச் சமுதாயம் என்பதாகும்.
இஸ்லாமியக் கோட்பாடுகளை பின்பற்றும் சமூகத்தை “உம்மத்தன் வஸத்தன்” என்று குர்ஆன் (2:143) வர்ணிக்கிறது. அதன் பொருள் நடுநிலைச் சமுதாயம்-சமநிலைச் சமுதாயம் என்பதாகும்.
இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் எதிலும் நடுநிலை பேண வேண்டும். ஒரு பக்கமாகச் சாய்ந்து விடக்கூடாது. உண்ணுதல், பருகுதல், செலவிடுதல், வணங்குதல் என எல்லாவற்றிலும் இது கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
“அவர்கள் செலவு செய்யும்போது வீண் விரயமும் கஞ்சத்தனமும் செய்வதில்லை. மாறாக, அவர்களுடைய செலவுகள் இந்த மிதமிஞ்சிய இரு நிலைகளுக்கிடையில் மிதமானதாக இருக்கும்.” (திருக்குர்ஆன் 25 : 67)
“உமது கையை கழுத்தோடு சேர்த்துக் கட்டி விடாதீர்; முற்றிலும் அதனை விரித்து விடாதீர். அப்படிச் செய்தால் பழிப்புக்குரியவராகவும் இயலாதவராகவும் நீர் ஆகிவிடுவீர்.” (திருக்குர்ஆன் 17 : 29)
கஞ்சத்தனமும் வேண்டாம், வீண்விரயமும் வேண்டாம். இரண்டுக்கும் இடையில் ஒரு நடு நிலையைக் கடைப்பிடிக்குமாறு குர்ஆன் கூறுகிறது. ஓர் அடியான் இம்மையின் இன்பத்தில் மூழ்கி விடவேண்டாம், அதே இம்மையை முற்றிலுமாக துறந்துவிடவும் வேண்டாம், என்பதை கீழ்க்கண்ட வசனம் உணர்த்துகின்றது.
“(மக்களில்) சிலர் “எங்கள் இறைவனே! உலகத்திலேயே எங்களுக்கு எல்லாவற்றையும் தந்து விடு!” என்று பிரார்த்திக்கின்றனர். அத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற் பேறும் இல்லை.
இன்னும் சிலர் “எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக; மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும் நரக வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக!” எனப் பிரார்த்திக்கின்றனர்.”
“இத்தகையவர்களுக்கு அவர்கள் எதனைச் சம்பாதித்தார்களோ அதற்கேற்ப (ஈருலகிலும்) நற்பேறு உண்டு.” (திருக்குர்ஆன் 2 : 200- 202)
இம்மைக்கும் மறுமைக்கும் இடையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு நடு நிலைப்போக்கு எப்படி இருக்க வேண்டும் என்பது இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது.
“உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால் விரயம் செய்யாதீர்கள். திண்ணமாக அல்லாஹ் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை.” (திருக்குர்ஆன் 7 : 31)
உண்ணுவதிலும், பருகுவதிலும் நடுநிலை தேவை என்பது இங்கு உணர்த்தப்படுகிறது.
“உமது தொழுகையில் உமது குரலை மிகவும் உயர்த்த வேண்டாம்; மிகத்தாழ்த்தவும் வேண்டாம். இவ்விரண்டுக்கும் இடையில் மிதமான தொனியைக் கடைப்பிடியும்.” (திருக்குர்ஆன் 17 : 110)
“உனது நடையில் மிதமான நிலையை மேற்கொள். உன்னுடைய குரலைச் சற்று தாழ்த்திக்கொள்.” (திருக்குர்ஆன் 31 : 19) தன்னை வருத்திக் கொள்ளும் அளவு தொழுதவர்களையும், நோன்பு நோற்பவர்களையும் பெருமானார் கண்டித்தார்கள்.
ஆன்மாவிற்கும் உடலுக்கும் இடையில் நடுநிலை, தனிமனித நலனுக்கும், சமூக நலனுக்கும் இடையில் நடுநிலை, இறைவனுக்கு செய்யவேண்டிய கடமைகளுக்கும், மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளுக்கு இடையில் நடுநிலை என்று ஒவ்வொரு துறையிலும் நடுநிலை பேணப்பட வேண்டும். நடுநிலையோடு செய்யப்படும் செயல்களையே நிலையாகச் செய்ய முடியும்.
“உங்கள் மார்க்கத்தில் அநியாயமாக எதையும் மிகைப்படுத்தாதீர்கள்” என்ற திருக்குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் நாம் அனைவரும் செயல்படுவோம்.
டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் எதிலும் நடுநிலை பேண வேண்டும். ஒரு பக்கமாகச் சாய்ந்து விடக்கூடாது. உண்ணுதல், பருகுதல், செலவிடுதல், வணங்குதல் என எல்லாவற்றிலும் இது கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
“அவர்கள் செலவு செய்யும்போது வீண் விரயமும் கஞ்சத்தனமும் செய்வதில்லை. மாறாக, அவர்களுடைய செலவுகள் இந்த மிதமிஞ்சிய இரு நிலைகளுக்கிடையில் மிதமானதாக இருக்கும்.” (திருக்குர்ஆன் 25 : 67)
“உமது கையை கழுத்தோடு சேர்த்துக் கட்டி விடாதீர்; முற்றிலும் அதனை விரித்து விடாதீர். அப்படிச் செய்தால் பழிப்புக்குரியவராகவும் இயலாதவராகவும் நீர் ஆகிவிடுவீர்.” (திருக்குர்ஆன் 17 : 29)
கஞ்சத்தனமும் வேண்டாம், வீண்விரயமும் வேண்டாம். இரண்டுக்கும் இடையில் ஒரு நடு நிலையைக் கடைப்பிடிக்குமாறு குர்ஆன் கூறுகிறது. ஓர் அடியான் இம்மையின் இன்பத்தில் மூழ்கி விடவேண்டாம், அதே இம்மையை முற்றிலுமாக துறந்துவிடவும் வேண்டாம், என்பதை கீழ்க்கண்ட வசனம் உணர்த்துகின்றது.
“(மக்களில்) சிலர் “எங்கள் இறைவனே! உலகத்திலேயே எங்களுக்கு எல்லாவற்றையும் தந்து விடு!” என்று பிரார்த்திக்கின்றனர். அத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற் பேறும் இல்லை.
இன்னும் சிலர் “எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக; மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும் நரக வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக!” எனப் பிரார்த்திக்கின்றனர்.”
“இத்தகையவர்களுக்கு அவர்கள் எதனைச் சம்பாதித்தார்களோ அதற்கேற்ப (ஈருலகிலும்) நற்பேறு உண்டு.” (திருக்குர்ஆன் 2 : 200- 202)
இம்மைக்கும் மறுமைக்கும் இடையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு நடு நிலைப்போக்கு எப்படி இருக்க வேண்டும் என்பது இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது.
“உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால் விரயம் செய்யாதீர்கள். திண்ணமாக அல்லாஹ் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை.” (திருக்குர்ஆன் 7 : 31)
உண்ணுவதிலும், பருகுவதிலும் நடுநிலை தேவை என்பது இங்கு உணர்த்தப்படுகிறது.
“உமது தொழுகையில் உமது குரலை மிகவும் உயர்த்த வேண்டாம்; மிகத்தாழ்த்தவும் வேண்டாம். இவ்விரண்டுக்கும் இடையில் மிதமான தொனியைக் கடைப்பிடியும்.” (திருக்குர்ஆன் 17 : 110)
“உனது நடையில் மிதமான நிலையை மேற்கொள். உன்னுடைய குரலைச் சற்று தாழ்த்திக்கொள்.” (திருக்குர்ஆன் 31 : 19) தன்னை வருத்திக் கொள்ளும் அளவு தொழுதவர்களையும், நோன்பு நோற்பவர்களையும் பெருமானார் கண்டித்தார்கள்.
ஆன்மாவிற்கும் உடலுக்கும் இடையில் நடுநிலை, தனிமனித நலனுக்கும், சமூக நலனுக்கும் இடையில் நடுநிலை, இறைவனுக்கு செய்யவேண்டிய கடமைகளுக்கும், மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளுக்கு இடையில் நடுநிலை என்று ஒவ்வொரு துறையிலும் நடுநிலை பேணப்பட வேண்டும். நடுநிலையோடு செய்யப்படும் செயல்களையே நிலையாகச் செய்ய முடியும்.
“உங்கள் மார்க்கத்தில் அநியாயமாக எதையும் மிகைப்படுத்தாதீர்கள்” என்ற திருக்குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் நாம் அனைவரும் செயல்படுவோம்.
டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.






