என் மலர்
இஸ்லாம்

மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லா தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம்
மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லா தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம்
பள்ளப்பட்டி மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லா தர்காவில் 262-ம் ஆண்டு சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டியில் மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லா தர்கா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு ஊர்வலம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 3 ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாக விழா நடைபெறவில்லை.
இந்நிலையில் இந்தாண்டு 262-ம் ஆண்டு சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி தர்கா வளாகத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
இதையடுத்து மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லா தர்காவில் உள்ள அவரது நினைவிடத்தில் சந்தனம் பூசப்பட்டு பொதுமக்கள் அனைவரும் சென்று பிரார்த்தனை செய்தனர்.
இந்நிலையில் இந்தாண்டு 262-ம் ஆண்டு சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி தர்கா வளாகத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
இதையடுத்து மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லா தர்காவில் உள்ள அவரது நினைவிடத்தில் சந்தனம் பூசப்பட்டு பொதுமக்கள் அனைவரும் சென்று பிரார்த்தனை செய்தனர்.
Next Story






