என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
குலசேகரன்பட்டினம் அம்பாளைத் தரிசிப்பதால் தீரும் பிரச்சனைகள்
Byமாலை மலர்11 Oct 2019 6:52 AM GMT (Updated: 11 Oct 2019 6:52 AM GMT)
தசராத் திருவிழாவின் போது குலசேகரன்பட்டினம் அம்பாளைத் தரிசனம் செய்வதால் என்னென்ன பிரச்சனைகள் தீர்ந்து நன்மைகள் உண்டாகும் என்று அறிந்து கொள்ளலாம்.
தசராத் திருவிழாவின் போது குலசேகரன்பட்டினம் அம்பாளைத் தரிசனம் செய்வதால் என்னென்ன பயன்கள் உண்டாகும்?
முதல் நாள் துர்க்கை அம்மன் திருக்கோலத்தில் காட்சியளிக்கும் அம்பாளைத் தரிசிப்பதால், ராகு தோஷம் நீங்கும். கன்னிப் பெண்களுக்குத் திருமணம் நிச்சயம் நடந்தேறும்.
இரண்டாம் நாள் விசுவகர்மேசுவரர் தோற்றத்தில் காட்சி தரும் அம்பாளைத் தரிசனம் செய்வதால், தொழிலில் நல்ல வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படும்.
மூன்றாம் நாளில் பார்வதி திருக்கோலத்தில் காட்சியளிக்கும் அன்னையைத் தரிசிப்பதால், மிகுந்த நலன் உண்டாகும். உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், அது தீரும்.
நான்காம் நாளில் பாலசுப்பிரமணியர் திருக்கோலம் கொண்டிருக்கும் அம்பாளைத் தரிசனம் செய்தால் நன்மக்கட்பேறு கிடைக்கும்.
ஐந்தாம் நாள் நவநீதகிருஷ்ணர் தோற்றத்தில் காட்சியளிக்கும் அன்னையைத் தரிசித்தால் வாழ்நாள் கூடும். அதாவது உங்கள் ஆயுள் பலம் அதிகரிக்கும்.
ஆறாம் நாள் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அருள்பாலிக்கும் அம்பாளைத் தரிசனம் செய்தால், எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும்.
ஏழாம் நாளில் ஆனந்த நடராஜராகக் காட்சிதரும் அன்னையைத் தரிசித்தால், வீடு பேறு கிட்டும். சொந்த வீடு கட்டி சந்தோஷமாக வாழலாம்.
எட்டாம் நாள் அலைமகளாகக் காட்சிதரும் அம்பாளைத் தரிசனம் செய்தால் பொருள் குவியும். செல்வம் கொழிக்கும்.
ஒன்பதாம் நாள் கலைமகள் தோற்றத்தில் அருள் புரியும் அன்னையைத் தரிசித்தால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.
இது போன்ற காரணங்களால் தான் தசரா விழாவிற்குப் பக்தர்கள் கூட்டம் இங்கு திரண்டு வருகிறது.
முதல் நாள் துர்க்கை அம்மன் திருக்கோலத்தில் காட்சியளிக்கும் அம்பாளைத் தரிசிப்பதால், ராகு தோஷம் நீங்கும். கன்னிப் பெண்களுக்குத் திருமணம் நிச்சயம் நடந்தேறும்.
இரண்டாம் நாள் விசுவகர்மேசுவரர் தோற்றத்தில் காட்சி தரும் அம்பாளைத் தரிசனம் செய்வதால், தொழிலில் நல்ல வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படும்.
மூன்றாம் நாளில் பார்வதி திருக்கோலத்தில் காட்சியளிக்கும் அன்னையைத் தரிசிப்பதால், மிகுந்த நலன் உண்டாகும். உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், அது தீரும்.
நான்காம் நாளில் பாலசுப்பிரமணியர் திருக்கோலம் கொண்டிருக்கும் அம்பாளைத் தரிசனம் செய்தால் நன்மக்கட்பேறு கிடைக்கும்.
ஐந்தாம் நாள் நவநீதகிருஷ்ணர் தோற்றத்தில் காட்சியளிக்கும் அன்னையைத் தரிசித்தால் வாழ்நாள் கூடும். அதாவது உங்கள் ஆயுள் பலம் அதிகரிக்கும்.
ஆறாம் நாள் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அருள்பாலிக்கும் அம்பாளைத் தரிசனம் செய்தால், எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும்.
ஏழாம் நாளில் ஆனந்த நடராஜராகக் காட்சிதரும் அன்னையைத் தரிசித்தால், வீடு பேறு கிட்டும். சொந்த வீடு கட்டி சந்தோஷமாக வாழலாம்.
எட்டாம் நாள் அலைமகளாகக் காட்சிதரும் அம்பாளைத் தரிசனம் செய்தால் பொருள் குவியும். செல்வம் கொழிக்கும்.
ஒன்பதாம் நாள் கலைமகள் தோற்றத்தில் அருள் புரியும் அன்னையைத் தரிசித்தால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.
இது போன்ற காரணங்களால் தான் தசரா விழாவிற்குப் பக்தர்கள் கூட்டம் இங்கு திரண்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X