என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா 8-ந்தேதி தொடங்குகிறது
    X

    தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா 8-ந்தேதி தொடங்குகிறது

    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா வருகிற 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் புகழ்பெற்றது ஆகும்.

    இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    விழாவின் முதல்நாளான 8-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடியேற்றமும், 6.30 மணிக்கு திருப்பலியும் நடைபெகிறது.
    இதில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். விழாநாட்களில் தினமும் மாலை ஜெபமாலையும், திருப்பலியும் நடைபெறுகிறது.

    விழாவில் 16-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலியும், 8 மணிக்கு திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, 10.30 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்புத் திருப்பலியை மேல ராமன்புதூர் பங்குதந்தை அருட்பணியாளர் ஆனந்த் தலைமை தாங்குகிறார். இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை, 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத்தேர் பவனி நடைபெறுகிறது.

    17-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேர் திருப்பலி நடக்கிறது. இதில் கோட்டாறு மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர்ரெமிஜியுஸ் தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். தொடர்ந்து காலை 9 மணிக்கு இரு தங்கத்தேர் பவனி, பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு திருக்கொடி இறக்கமும் நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குதந்தை அருட்பணியாளர் ஜோசப்ரொமால்டு, இணை பங்குதந்தையர்கள் கிளாசின், ஜெனிஸ், இளங்கோ, பங்குபேரவை துணைத் தலைவர் லியோன், செயலாளர் பிரபா, துணை செயலாளர் கசின்ராய், பொருளாளர் மரியஜான், மற்றும் பங்குமக்கள், பங்குபேரவையினர், அருட்சகோதரிகள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×