search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்திய பந்து வீச்சாளர்கள் மிரட்டல்- 191 ரன்னில் சுருண்டது பாகிஸ்தான்
    X

    இந்திய பந்து வீச்சாளர்கள் மிரட்டல்- 191 ரன்னில் சுருண்டது பாகிஸ்தான்

    • பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.
    • இந்தியா தரப்பில் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை 2023 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் அப்துல்லா ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும், இவர்கள் முறையே 20 மற்றும் 36 ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினர். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் அசத்தலாக விளையாடி அரைசதம் அடித்தார். எனினும், 50 ரன்களில் ஆடிய போது முகமது சிராஜ் வீசிய பந்தில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

    இவருடன் ஆடிய முகமது ரிஸ்வான் தன் பங்கிற்கு 49 ரன்களை எடுத்த போது, பும்ரா வீசிய பந்தில் போல்ட் ஆகி நடையை கட்டினார். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை சேர்த்தது.

    இந்தியா சார்பில் பும்ரா, சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    Live Updates

    Next Story
    ×