search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    தென் ஆப்பிரிக்கா- நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி: டாஸ் போடுவதில் தாமதம்
    X

    தென் ஆப்பிரிக்கா- நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி: டாஸ் போடுவதில் தாமதம்

    • தர்மசாலாவில் கடந்த 2 நாட்களாக மாலையில் லேசான மழை பெய்தது.
    • இதேபோல் இன்று பிற்பகலிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தர்மசாலா:

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

    தர்மசாலாவில் கடந்த 2 நாட்களாக மாலையில் லேசான மழை பெய்தது. இதேபோல் இன்று பிற்பகலிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு டாஸ் போடபடும் எனவும் 2.30 மணிக்கு போட்டி நடைபெறும் எனவும் முதல் கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×