search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆசிய கோப்பை - இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று நாளில் நடைபெறும்
    X

    ஆசிய கோப்பை - இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று நாளில் நடைபெறும்

    • சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
    • இதனால் அந்தப் போட்டி மாற்று நாளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    ஆசிய கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறது.

    சூப்பர் 4 சுற்றின் தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் முதல் வெற்றியை பதிவு செய்தது.

    இன்று நடைபெற உள்ள சூப்பர் 4 சுற்றில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் மோத உள்ளன.

    நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி கொழும்புவில் பாகிஸ்தானை ச்சந்திக்கிறது. கொழும்புவில் நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதனால் லீக் சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் தடைப்பட்டது போல சூப்பர் 4 சுற்றிலும் இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் தடைபட வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர்.

    இந்நிலையில், கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நாளை (நடக்கும் இந்தியா, பாகிஸ்தான் சூப்பர்4 சுற்று ஆட்டத்திற்கு மட்டும் மாற்று நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று நாளான அடுத்த நாளில் (11-ம் தேதி) போட்டி நிறுத்தப்பட்ட நிலையில் இருந்து தொடர்ந்து நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    Next Story
    ×