search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அடுத்த இரண்டு நாட்களுக்குள் லக்னோ அணியுடன் இணைகிறார் கே.எல். ராகுல்
    X

    அடுத்த இரண்டு நாட்களுக்குள் லக்னோ அணியுடன் இணைகிறார் கே.எல். ராகுல்

    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
    • காயம் காரணமாக கடைசி நான்கு போட்டிகளில் இருந்து விலகினார்.

    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல். ராகுல் ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் அந்த அணியின் கேப்டன் ஆவார்.

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. காயம் குறித்து வெளிநாட்டு நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் கடைசி நான்கு டெஸ்ட் போட்டிகளில் அவர் பங்கேற்வில்லை.

    பெங்களூருவில் உள்ள பிசிசிஐ கிரிக்கெட் அகாடமியில் உடற்திறன் சார்ந்த பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். ஐபிஎல் போட்டி வருகிற 22-ந்தேதி தொடங்கும் நிலையில் நாளை லக்னோ அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் 21 அல்லது 22-ந்தேதிதான் அணியுடன் இணைவார் எனத் தெரிகிறது. இன்று பெங்களூருவில் இருந்து அவர் லக்கோ அணியில் இணைவதற்காக புறப்படமாட்டார் எனத் தெரிகிறது.

    நாளைமறுதினம் ஐபிஎல் அணி கேப்டன்கள் போட்டோ எடுப்பதற்கான ஒன்று கூடுவார்கள். எனவே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன்பின் லக்னோ அணியுடன் இணைவார் எனத் தெரிகிறது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வருகிற 24-ந்தேதி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக களம் இறங்குகிறது. இந்த போட்டி ஜெய்ப்பூரில் நடக்கிறது.

    20.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட பேட் கம்மின்ஸ் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார்க் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.

    Next Story
    ×