என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஐபிஎல் 2024: சென்னை வந்தடைந்தார் சிஎஸ்கே கேப்டன் டோனி
- இது தொடர்பான படங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் X பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
- இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.டோனி சென்னை வந்தடைந்தார்.
இது தொடர்பான படங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் X பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
ThalaiVanakkam! ??#DenComing pic.twitter.com/YYsyEXPAJY
— Chennai Super Kings (@ChennaiIPL) March 5, 2024
இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் டோனி கேப்டனாக களமிறங்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
#WATCH | Tamil Nadu: Former Indian Cricket Team Captain MS Dhoni arrives at Chennai Airport. pic.twitter.com/ueWLVnNH0f
— ANI (@ANI) March 5, 2024இந்த நிலையில், துவங்க இருக்கும் 2024 ஐ.பி.எல். தொடரில் புதிய ரோலை ஏற்க இருப்பதாக மகேந்திர சிங் டோனி தெரிவித்து இருக்கிறார். மேலும் புதிய பொறுப்பை ஏற்பதில் சுவாரஸ்யமாக இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.






