search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்: இந்தியா முதலில் பேட்டிங்
    X

    டாஸ் போடும் இந்திய அணியின் கேப்டன்

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்: இந்தியா முதலில் பேட்டிங்

    • இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா ஆகியோர் செயல்படுகிறார்கள்.
    • தென் ஆப்பிரிக்க அணியின் மார்க்ராமுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் களமிறங்கவில்லை

    புதுடெல்லி:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இத்தொடரின் முதல் ஆட்டம் இன்று டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

    காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் ஆகியோர் விலகி உள்ளனர். இருவரும் தொடர் முழுவதும் விளையாட முடியாத நிலையில், கேப்டனாக ரிஷப் பண்ட், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா ஆகியோர் செயல்படுகிறார்கள்.

    இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. தென் ஆப்பிரிக்க அணியின் மார்க்ராமுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவர் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை.

    இந்திய அணி: இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் பட்டேல், ஹர்ஷல் பட்டேல், புவனேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சாகல், அவேஷ் கான்.

    தென் ஆப்பிரிக்க அணி: குயின்டன் டி காக், டெம்பா பவுமா (கேப்டன்), ரீசா ஹென்றிக்ஸ், டேவிட் மில்லர், ரிடிஸ்டன் ஸ்டப்ஸ், வாய்னே பார்னெல், டிவைன் பிரிட்டோரியஸ், கேசவ் மகராஜ், டப்ரைஸ் ஷம்சி, ரபாடா, நோர்ட்ஜே.

    Next Story
    ×