என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஆனார் ஹர்திக் பாண்ட்யா
- மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வந்தார்.
- ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான அணியாக மும்பை இந்தியன்ஸ் உள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் முடியும்.
அதன்படி ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது. இதனால் குஜராத் அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். இதனை குஜராத் அணியும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டுள்ளார். இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல். தொடர்களில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது. எனினும், கடந்த ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி அரையிறுதி சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் வெளியேறியது.






