search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்திய அணியின் டிரெஸ்சிங் ரூமில் பிரதமர் மோடி: ரவி சாஸ்திரி சொல்வது என்ன?
    X

    இந்திய அணியின் டிரெஸ்சிங் ரூமில் பிரதமர் மோடி: ரவி சாஸ்திரி சொல்வது என்ன?

    • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி கோப்பையைக் கைப்பற்றியது.
    • பிரதமர் மோடி இந்திய அணியின் டிரெஸ்சிங் ரூமுக்குச் சென்று வீரர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    புதுடெல்லி:

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.

    இதற்கிடையே, போட்டியை நேரில் காண வந்த பிரதமர் மோடி இந்திய அணியின் டிரெஸ்சிங் ரூமுக்குச் சென்றார். அங்கு கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலானது.

    இந்நிலையில், பிரதமர் மோடி டிரஸ்சிங் ரூம் சென்று பார்வையிட்டது வீரர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தும் என முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், டிரஸ்சிங் ரூம் எப்படி இருக்கும் என்பதை நான் அறிந்திருப்பதாலும், கிரிக்கெட் வீரராக இருந்து பல ஆண்டுகளாக இந்தியாவின் பயிற்சியாளராக 7 ஆண்டுக்கும் மேலாக அந்த டிரஸ்சிங் ரூமில் இருப்பதாலும் இது ஒரு சிறந்த விஷயம் என்று நினைக்கிறேன்.

    நாட்டின் பிரதமரைப் போன்ற ஒருவர் டிரஸ்சிங் ரூமுக்கு வந்து பார்வையிட்டால், அது மிகப்பெரிய ஒன்று. ஏனெனில் அது வீரர்களின் உற்சாகத்தை உயர்த்தும். ஒரு நாட்டின் பிரதமராக இருக்கும்போது டிரஸ்ஸிங் ரூமுக்குள் செல்வது சிறப்பு. இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்திருந்தால் உங்களுக்குத் தெரிந்ததைப் போல என்ன உணர்ந்திருப்பேன் என்று எனக்குத் தெரியும் என குறிப்பிட்டார்.

    Next Story
    ×