search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பாகிஸ்தானின் அனல் பறக்கும் பந்து வீச்சு- 10 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழந்து வங்காளதேசம் திணறல்
    X

    பாகிஸ்தானின் அனல் பறக்கும் பந்து வீச்சு- 10 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழந்து வங்காளதேசம் திணறல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    • அப்ரிடி வீசிய முதல் ஓவரை நைம் மெய்டன் செய்தார்.

    லாகூர்:

    6 அணிகள் கலந்து கொண்ட ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சூப்பர் 4 சுற்று போட்டிகளின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்காளதேசம் அணி மோதுகிறது.

    இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக நைம் - ஹசன் மிர்ஷா களமிறங்கினர். அப்ரிடி வீசிய முதல் ஓவரை நைம் மெய்டன் செய்தார். அடுத்த ஓவரை நசீம் ஷா வீசினார். இவர் வீசிய முதல் பந்தில் ஹசன் மிர்ஷா டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து நைம் மற்றும் தாஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்திருந்தது. 5-வது ஓவரை அப்ரிடி வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் லிட்டன் தாஸ் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நைம் 7-வது ஓவரில் ஹரிஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    10-வது ஓவரின் முதல் பந்தில் தௌஹித் ஹிரிடோய் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் வங்காளதேசம் அணி 10 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுப் 2 விக்கெட்டுகளையும், அப்ரிடி, நசீம் ஷா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

    Next Story
    ×