என் மலர்tooltip icon

    கிசுகிசு

    தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயாகியாக இருக்கும் மூன்றெழுத்து நடிகை திருமணம் செய்து கொள்ள தயாராகியுள்ளாராம்.
    பிரபல மூன்றெழுத்து நடிகை பதினைந்து வருடங்களாக நடித்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க தாயார் ஆசைப்பட்டாராம். நடிகையோ பட வாய்ப்புகளை காரணம் காட்டி, திருமணத்தை தள்ளிப்போட்டு வந்தாராம். இப்போது அவருக்கு திடீர் திருமண ஆசை வந்திருக்கிறதாம்.

    “உங்கள் ஆசைப்படி திருமணத்துக்கு நான் தயார். மாப்பிள்ளை பாருங்கள்” என்று அந்த நடிகை தாயாரிடம் கூறிவிட்டாராம். சந்தோஷப்பட்ட தாயார், மகளுக்கு பொருந்துகிற மாதிரி மாப்பிள்ளையை தேடி வருகிறாராம்.
    தமிழில் முன்னணி நடிகையின் பின்னாடி 6 பேர் கொண்டு குழு சுற்றி வருகிறார்களாம்.
    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நம்பர் நடிகை தற்போது சாமி படத்தில் நடித்து வருகிறாராம். இவருக்கு 6 பேர்களை கொண்ட பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்களாம். இவர்களுக்கு எல்லாம் மேலாக அவருடைய காதலரும் கூடவே வருகிறாராம்.

    படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வரும் விருந்தினர்களில் யாராவது அந்த நடிகையை முறைத்துப் பார்த்தால், அடுத்த நிமிடமே அவர் அந்த இடத்தில் இருந்து பாதுகாவலர்களால் அகற்றப்படுகிறாராம். நடிகை மீது மற்றவர்களின் கண்பார்வை கூட விழக் கூடாது என்பதில், கவனமாக இருக்கிறாராம் காதலர்!
    தான் நடித்த படம் ஹிட் ஆனாலும், தனக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் நடிகை ஒருவர் கிளாமருக்கு கிரீன் சிக்னல் காட்டி இருக்கிறாராம்.
    சீட்டுக்கட்டு பெயர் கொண்ட படத்தில், சாக்லேட் பாய் நடிகருக்கு ஜோடியாக நடித்த மஞ்சு நடிகை, அந்த படத்திற்கு பின் பட வாய்ப்புகள் அதிகம் வரும் என நம்பி இருந்தாராம். ஆனால் அந்த படம் வெற்றி பெற்றாலும் நடிகைக்கு வேறு பட வாய்ப்புகள் வரவில்லையாம். 

    இதனால் விரக்தி அடைந்த நடிகை வேறு ரூட்டை கையில் எடுத்துள்ளாராம். கிளாமருக்கு ஓகே சொல்லியுள்ள அந்த நடிகை, படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறாராம்.  
    இயக்குனர் ஒருவர் தன்னுடைய காதலிக்காக செய்திருக்கும் காரியம் பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறதாம்.
    நம்பர் ஒன் நடிகையும் ரவுடி இயக்குனரும் காதலித்து வருவது எல்லோருக்கும் தெரியும். ஆனால், நடிகை தற்போது ஒரு படத்திற்காக விரதம் இருந்து வருகிறாராம். இதற்காக பல கோயில்களுக்கு சென்று வழிபட்டும் வந்தார்களாம். இந்நிலையில், இயக்குனர் தன்னுடைய காதலிக்காக வேண்டி சாமிக்கு மாலை போட்டிருக்கிறாராம்.

    ஏற்கனவே காதலிக்காக படங்களை இயக்காமல் அவருடனே படப்பிடிப்பு சென்று வரும் இயக்குனர், தற்போது நடிகை நடித்து வரும் படத்திற்காக இயக்குனர் விரதம் இருந்து மாலை போட்டியிருப்பது, பலரும் காதலிக்காக இப்படியெல்லாம் செய்வாரா இயக்குனர் என்று பேசி வருகிறார்களாம்.
    தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நடிகர், அடுத்ததாக நடிக்கும் படத்தில் அந்த நடிகையுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறாராம்.
    தொடர் தோல்விகளால் பாதிக்கப்பட்டுள்ள கடவுளின் பெயரை கொண்ட கதாநாயகன் அடுத்து ஒரு வெற்றி படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாராம். அவருடைய அடுத்த படத்துக்கு கதாநாயகியாக ஏற்கனவே ஒரு படத்தில் அவருடன் நடித்த ஐந்தெழுத்து நடிகையின் பெயரை தயாரிப்பாளர் சிபாரிசு செய்தாராம்.

    இதை கேட்ட நடிகர், “அந்த நடிகை நடித்த 4 படங்கள் தொடர் தோல்விகளை தழுவி இருக்கிறது. அதனால் அவர் வேண்டவே வேண்டாம்” என்று கதாநாயகன் கூறிவிட்டாராம்!
    நீண்ட நாட்களுக்கு பின் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ள நடிகை, தான் போடும் கண்டிஷனுக்கு ஓகே சொன்னால் தான் நடிப்பேன் என கறார் காட்டுகிறாராம்.
    தென்னிந்திய திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வந்த நடிகை ஒருவர் அரசியலில் களம் கண்டதால், படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தாராம். பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ள அந்த நடிகை இயக்குனர்களுக்கு சில கண்டிஷன்களை போட்டுள்ளாராம்.

    அது என்ன வென்றால், தனக்கு சம்பளமாக ஒரு பெரிய தொகை வேண்டும் என்பது ஒரு கண்டிஷன். அக்காள் மற்றும் அண்ணி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்பது, இன்னொரு கண்டிஷனாம். இந்த இரண்டுக்கும் ஓகே சொன்னால் தான் நடிக்க ஒப்புக்கொள்கிறாராம்.
    இந்த படம் ஓடலனா, இனிமே இங்க நடிக்க மாட்டேன் என்று நடிகை ஒருவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
    தெலுங்கு படங்களில் பிசியாக நடித்த வந்த நடிகை, தமிழில் கபடி இயக்குனர் அழைத்து வந்து ஒரு படத்தில் நடிக்க வைத்தாராம். அந்த படம் சரியாக ஓடவில்லையாம். மேலும் படம் வெளியான பிறகு நடிகையின் கதாபாத்திரம் படத்திற்கு தேவை இல்லை என்று பலரும் சொன்னதால், நடிகையின் காட்சிகளை இயக்குனர் தூக்கி விட்டு மீண்டும் ரிலீஸ் செய்தாராம்.

    இதனால் கோபமடைந்த நடிகை, தமிழ் படத்தில் நடிக்காமல் இருந்தாராம். தற்போது ஒல்லி நடிகருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறாராம். அந்த படமாவது வெற்றி பெற்றால் தமிழில் தொடர்ந்து நடிக்கலாம். இல்லை என்றால் தெலுங்கு பக்கமே சென்று விடலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம்.
    என்ன பிரச்சினை வந்தாலும் சொல்லு, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நடிகையிடம் நடிகர் ஒருவர் உறுதியளித்திருக்கிறாராம்.
    கணவரை பிரிந்த அந்த மலையாள நடிகை தமிழ் பட உலகுக்கு தாமதமாகவே அறிமுகமாகி இருக்கிறாராம். இங்கே உள்ள கதாநாயகர்கள் அனைவரையுமே அவருக்கு பிடித்து இருக்கிறதாம். அதனால் அவருடைய நட்பு வட்டாரம் நாளுக்கு நாள் பெருகி வருகிறதாம்.

    “உனக்கு எந்த பிரச்சினை வந்தாலும், உடனே எனக்கு சொல்லிவிடு... நான் பார்த்துக் கொள்கிறேன்...” என்று நடிகையிடம் தன் வீர தீரங்களை ஜாடை மாடையாக காட்டி உறுதி அளித்தாராம், ஒரு பிரபல நடிகர்!
    தமிழில் சில படங்களில் நடித்து மிகவும் பிரபல நடிகையும், பாடகியுமானவர் சம்பள பணத்தை உயர்த்தி இருக்கிறாராம்.
    தமிழில் ஒரு சில படங்களில் நடித்த ரம்யமான நடிகைக்கு இனிய குரல் வளமாம். அவர் பாடிய பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டாகி விட்டதாம். இதனால், மிக குறுகிய காலத்தில் சிறந்த பாடகி என்று பெயர் வாங்கி விட்டாராம்.

    இவரை நடிக்க அழைப்பதை விட, பாடுவதற்கு நிறைய பேர் அழைக்கிறார்களாம். அதனால் பாடுவதற்கான கூலியை உயர்த்தி விட்டாராம், அந்த நடிகை!
    தமிழில் ஒன்று இரண்டு படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, ரசிகர்களின் எதிர்ப்பால் தனது மனதை மாற்றி இருக்கிறாராம்.
    ஆபாச படத்தில் நடித்து பெயர் பெற்ற நடிகை, பெரிய முதலாளி வீட்டிற்கு சென்று மிகவும் பிரபலமானாராம். வெளியே வந்த ஒரு வருட காலம் ஆகியும் பெரியதாக பட வாய்ப்புகள் அமையவில்லையாம். இதற்காக நடிகை அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்தாராம்.

    நடிகையின் கவர்ச்சி பதிவுக்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்களாம். மேலும் ஆபாச நடிகை ஒருவரை ஒப்பிட்டும் கூறிவந்தார்களாம். இதனால் மனம் மாறிய நடிகை புடவையுடன் ஒரு போட்டோ ஷூட் எடுத்து பதிவு செய்தாராம். இதற்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்களாம்.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை, அந்த படத்துக்காக மற்ற பட வாய்ப்புகளை தவிர்த்து வருகிறாராம்.
    பல நடிகர்களுக்கு ஜோடி போட்டு வந்த பால் நடிகை, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறாராம். இதனால், மற்ற ஹீரோக்களுக்கு ஜோடி சேர மறுத்து வருகிறாராம். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறதாம். ஆனால், நடிகையோ அந்த படங்களையும் மறுத்து வருகிறாராம்.

    காரணம், நடிகை தற்போது இந்தி படத்தில் நடித்து வருகிறாராம். இந்தி படங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தமிழ் பட வாய்ப்பை தவிர்த்து வருகிறாராம்.
    படங்களில் நடிக்க வாய்ப்பு குறைந்ததால் டைரக்‌ஷன் பக்கம் திரும்பியுள்ள நடிகர், நடிகையுடன் நெருங்கி பழகி வருகிறாராம்.
    நடன டைரக்டர் இந்தி பட உலகில் இரண்டாவது ரவுண்டு வரவேண்டும் என்று ஆவலுடன் மறுபிரவேசம் செய்து இருக்கிறாராம். அவர் இயக்கி சமீபத்தில் திரைக்கு வந்த இந்தி படத்தில், அவருடைய மனம் கவர்ந்த நடிகைதான் நாயகி. 

    படப்பிடிப்பின்போது இருவரும் நெருங்கி பழகுவதை பார்த்து, ‘த’ நடிகை முகம் சுளித்தாராம். நடன டைரக்டர், இந்தி நடிகையுடன் நெருக்கமாக இருப்பது, ‘த’ நடிகைக்கு பிடிக்கவில்லையாம்!
    ×