என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
X
மகளின் முகத்தை வெளியிடாததற்கு நன்றி - அனுஷ்கா சர்மா நெகிழ்ச்சி
Byமாலை மலர்20 Dec 2021 5:16 AM GMT (Updated: 20 Dec 2021 5:16 AM GMT)
தன் மகளை விளம்பர வெளிச்சம் இல்லாமல் வளர்க்க நினைப்பதாக நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.
புது டெல்லி:
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மாவிற்கு கடந்த ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து இருவரும் தங்களது மகளின் முகத்தை சமூக வலைதளங்களில் வெளியிடாமலேயே ரகசியம் காத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் விராட் கோலி தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணத்திற்காக மும்பை விமான நிலையம் சென்றிருந்தபோது தனது மகள் வாமிகா, மனைவி அனுஷ்கா சர்மா இருவரையும் அழைத்து சென்றார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், கோலியின் மகளின் முகத்தை புகைப்படம் பிடித்துவிட்டார். ஆனாலும் அந்த புகைப்படம் எந்த பத்திரிக்கையிலும் வெளியாகவில்லை. இந்நிலையில் அந்த பத்திரிக்கையாளருக்கு அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
என் மகளின் புகைப்படம், வீடியோ எதையும் வெளியிடாத அந்த பத்திரிக்கையாளருக்கும், ஊடகங்களுக்கும் நன்றி. எங்கள் மகளை விளம்பர வெளிச்சம் இல்லாமல் வளர்க்க நினைக்கிறோம். அவர் வளர்ந்த பிறகு தன் விருப்பத்தை அவரே தேர்ந்தெடுக்கட்டும். அதுவரை எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்.
இவ்வாறு அனுஷ்கா சர்மா கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X