என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
என் முன்னாள் காதலனை தான் அலியா பட் மணக்கிறார் - தீபிகா படுகோனே
Byமாலை மலர்28 Nov 2019 5:19 AM GMT (Updated: 28 Nov 2019 5:19 AM GMT)
தொலைகாட்சி நிகழ்ச்சியில் பேசிய தீபிகா படுகோனே, எனது முன்னாள் காதலனை அலியா பட் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறினார்.
மும்பையில் நடந்த திரைப்பட நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க கணவர் ரன்வீர் சிங்குடன் தீபிகா படுகோனே சென்று இருந்தார். இதில் விஜய் தேவரகொண்டா, அலியாபட் உள்பட மேலும் சில நட்சத்திரங்கள் பங்கேற்றனர். தீபிகா படுகோனேவும், ரன்பீர் கபூரும் ஏற்கனவே காதலித்தனர். ஜோடியாகவும் சுற்றினார்கள். திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறி இருந்தனர்.
காதல் நினைவாக ஆர்.கே என்ற இன்ஷியலையும் கழுத்துக்கு கீழே தீபிகா படுகோனே பச்சை குத்தி இருந்தார். அதன்பிறகு இந்த காதல் முறிந்தது. பின்னர் மன அழுத்தத்துக்கு ஆளாகி சிகிச்சை பெற்று பிறகு ரன்வீர் சிங்கை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இந்த நிலையில் டி.வி. நேர்காணலில் தீபிகா படுகோனே கூறும்போது, “ரன்பீர் கபூரை காதலித்தேன். ஆனால் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டேன்.
அதேமாதிரி ரன்பீர் கபூர் என்னை காதலித்து இப்போது அலியா பட்டை மணக்க போகிறார் என்று கூறினார். இது அலியா பட்டுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதை ஏன் இப்போது இங்கே சொல்கிறீர்கள் என்று தீபிகா படுகோனேவை பார்த்து கோபமாக கேட்டார். ரன்வீர் சிங்குக்கும் தீபிகா படுகோனே பேசியது பிடிக்கவில்லை. இது மும்பை பட உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X