என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அவரைப் பற்றி நினைத்தது வேறு, ஆனால் நிஜத்தில் வேறு - அருண் விஜய்
Byமாலை மலர்5 Sep 2018 3:40 PM GMT (Updated: 5 Sep 2018 3:40 PM GMT)
செக்கச் சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட அருண் விஜய், அவரைப் பற்றி நினைத்து வேறு, ஆனால் நிஜத்தில் வேறு என்று பேசியுள்ளார். #CCV #ChekkaChivanthaVaanam
மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இதில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இப்படத்தின் பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் பாடி காண்பித்தார்.
இதில் அருண் விஜய் பேசும்போது, ‘செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்தது என் வாழ்க்கையில் சிறந்த அனுபவம். எல்லா நாட்களும் ஒவ்வொரு புது விஷயம் கற்றுக் கொண்டேன். மணிரத்னம் படத்தில் நடிக்க போறேன் என்று சந்தோஷம் இருந்தாலும், முதலில் டென்ஷனாக இருந்தது. ஆனால் மணி சாரை பார்த்தவுடன் அந்த டென்ஷன் போய்விட்டது. இருந்தாலும் பயம் இருந்துக் கொண்டே இருந்தது. என் பயத்தை போக்கியது அரவிந்த் சாமிதான். இந்த படத்தில் தியாகு கதாபாத்திரம் கொடுத்ததற்கு மணிரத்னம் சாருக்கு நன்றி. அவரைப் பற்றி நான் நினைத்து வேறு. கேமரா பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு ஆக்ஷன் என்று சொல்லுவார் என்று நினைத்தேன். ஆனால் வித்தியாசமாக அருகில் வந்து என்ன செய்ய வேண்டும் எப்படி என்று நிறைய விஷயங்கள் கற்றுக் கொடுத்தார்.
என்னுடன் நடித்திருக்கும் சிம்பு திறமையான நடிகர். சிறுவயதில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இப்படத்தின் மூலம் நல்ல மனிதர் என்பதை தெரிந்துக் கொண்டேன். அதுபோல், நடிகர் விஜய் சேதுபதி, நடிப்பிலும், நிஜத்திலும் யதார்த்தமானவர். எப்போது அப்படியே இருக்க வேண்டுகிறேன்’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X