என் மலர்
நெப்போலியனுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். இதில் இளைய மகன்தான் கௌதம் கார்த்திக். ஒருநாள் கௌதம் கார்த்திக் ரோட்டில் நடந்துபோய்க் கொண்டிருக்கும்போது நாயகி பிரியா ஆனந்தை பார்க்கிறார். பார்த்தவுடனேயே அவள்மீது இவருக்கு ஈர்ப்பு வந்துவிடுகிறது. அடுத்தடுத்த சந்திப்புகளில் இருவரும் நெருக்கமாகி, காதலர்களாகிறார்கள்.

இவர்களது காதலுக்கு இரண்டுபேர் வீட்டிலும் சம்மதம் கிடைக்கிறது. ஆனால், நாயகிக்கு திருமணமாகாத ஒரு அக்கா, அதேபோல் நாயகனுக்கு திருமணமாகாத ஒரு அண்ணன் இருப்பது இவர்களுடைய திருமணம் உடனே நடைபெற தடையாக இருக்கிறது. எனவே, பெரியவர்கள் அனைவரும் நாயகியின் அக்காவுக்கும், நாயகனின் அண்ணனுக்கும் திருமணம் பேசி முடிக்கின்றனர்.
இந்நிலையில், பக்கத்து ஊரில் சிலம்பம் போட்டி நடைபெறப்போவதாக அறிவிப்பு வருகிறது. அந்த போட்டிக்கு சென்றால் ஏதாவது பிரச்சினை வரும் என்பதற்காக தன்னுடைய கிராமத்தில் இருந்து யாரும் அந்த சிலம்பம் போட்டியில் கலந்துகொள்ளக்கூடாது என்று நெப்போலியன் கட்டளையிடுகிறார். ஆனால், கௌதமோ அவரது பேச்சை மீறி, தனது நண்பர்களுடன் அந்த ஊரில் நடக்கும் சிலம்பம் போட்டிக்கு போக தயாராகிறார்.

கௌதம் கார்த்திக் தங்கள் ஊருக்கு சிலம்பம் ஆடவருவதை அறியும் பெப்சி விஜயன், கௌதம் வரும் வழியிலேயே ஆட்களை வைத்து அவனை விரட்டிவிட நினைக்கிறார். அப்போது நடக்கும் சண்டையில் கௌதம் கார்த்திக் சிலபேரை தாக்கிவிடுகிறார். இதில் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்படுகிறார்கள். இது போலீசுக்கு செல்ல, பயந்துபோன நெப்போலியன், கௌதம் கார்த்திக்கை தலைமறைவாக சொல்கிறார். கௌதம் கார்த்திக்கும் தலைமறைவாகிறார்.
கௌதமை தேடி வரும் போலீஸ், அவர் தலைமறைவாக இருக்கிறார் என்பதை அறிந்ததும், நெப்போலியனை அவமானப்படுத்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்வதால் வெகுண்டெழும் கௌதம் கார்த்திக், தனது அப்பாவை அவமானப்படுத்திய போலீசாரின் கையை வெட்டி விடுகிறார். இதன்பிறகு, இந்த பிரச்சினை பெரிய அளவில் செல்ல, இதை பற்றி விசாரிப்பதற்காக போலீஸ் அதிகாரி வம்சி கிருஷ்ணா ஊருக்குள் வருகிறார்.

ஆனால், அதற்குள் அந்த ஊரில் உள்ள ஆண்கள் எல்லோரும் தலைமறைவாகிறார்கள். இறுதியில், கௌதம் கார்த்திக், நெப்போலியன் கொலை குற்றத்தில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் முத்துராமலிங்கம் என்ற வீரத்திருமகனின் பெயருடன் வலம்வரும் கௌதம் கார்த்திக், அதற்குண்டான தோற்றத்தில் அசர வைக்கிறார். ஆனால், இவருடைய நடிப்பில்தான் வீரம் எடுபடவில்லை. படத்தில் இவரது கதாபாத்திரம் மாஸாக இருப்பதால், இவருடைய குழந்தை முகத்தில் மாஸ் நடிகருக்குடான நடிப்பை வெளிக்கொண்டு வரமுடியவில்லை. இருப்பினும், சண்டைக் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறார்.
படத்திற்கு பெரிய பலம் நெப்போலியனின் தோற்றமும், அவருடைய வீரமான நடிப்பும்தான். திரையில் இவரை பார்த்தவுடனேயே கண்டிப்பாக நம்மை ஏமாற்றமாட்டார் என்ற நம்பிக்கை நமக்குள் வந்துவிடுகிறது. பிரியா ஆனந்த் பள்ளி மாணவியாக கச்சிதமாக வந்து போயிருக்கிறார். வழக்கமான கதாநாயகிபோல் இல்லாமல் இப்படத்தில் இவருக்கு நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய வலுவான கதாபாத்திரம்தான். அதை அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார். விஜி சந்திரசேகர் வழக்கம்போல் வீரப்பெண்மணியாக வந்து நம்மை கவர்கிறார்.

முதல்பாதியை கலகலப்பாக கொண்டு செல்ல சிங்கம் புலியின் காமெடி மிகப்பெரிய உதவி செய்திருக்கிறது. பிற்பாதியில் காமெடிக்கு விவேக் வந்தாலும், அவருடைய ஒருசில காமெடிகள்தான் ரசிக்க தோன்றுகிறது. போலீஸ் அதிகாரியாக வரும் வம்சி கிருஷ்ணா, மற்றொரு ஊர் தலைவராக வரும் பெப்சி விஜயன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் ராஜதுரை ஒரு சமூகம் சார்ந்தவர்களின் வீரத்தை மையப்படுத்தி இந்த படத்தை எடுத்திருக்கிறார். படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் அனைத்தும் வீரத்துடன் வெகுண்டெழுவதுபோல் வருவதால் கொஞ்சம் டல்லடிக்கிறது. வசனங்கள் படத்திற்கு பலமாக இருந்தாலும், அதை ஒருசில கதாபாத்திரங்கள் பேசும் தொனி அந்த வசனத்தின் மீதுள்ள பலத்தை சீர்குலைத்துவிடுகிறது.
இசைஞானி இளையராஜா இசையில் பாடல்களில் கிராமத்து மணம் தவழ்கிறது. பின்னணி இசையிலும் தான் ராஜா என்பதை நிரூபித்திருக்கிறார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவில் கிராமத்து அழகை அழகாக படம்பிடித்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘முத்துராமலிங்கம்’ வலுவில்லை.

`சண்டக்கோழி' படத்திற்கு பிறகு இயக்குநர் லிங்குசாமி - விஷால் கூட்டணி `சண்டக்கோழி 2'-ஆம் பாகம் மூலம் மீண்டும் இணைய உள்ளது. இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் துவங்குவற்குள்ளே பல்வேறு பிரச்சனைகளால் இப்படத்தின் பணிகள் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி இப்படத்திற்கான பணிகள் பூஜையுடன் விரைவில் துவங்க உள்ள நிலையில், இயக்குநர் லிங்குசாமி, அல்லு அர்ஜுனை வைத்து தமிழ், தெலுங்கில் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனால் `சண்டக்கோழி 2' படம் மீண்டும் தள்ளிப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில், இந்த தகவல் குறித்து லிங்குசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது,

அடுத்த படத்தில் விஷாலுடன் மீண்டும் இணைந்து `சண்டக்கோழி 2'-வை இயக்க உள்ளேன். அதன் பிறகு உடனடியாக அல்லு அர்ஜுன் படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படத்தை கே.இ.ஞானவேல்ராஜா-வின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
இயக்குநர் லிங்குசாமி இயக்கதில் சூர்யா நடித்து கடைசியாக வெளியான `அஞ்சான்' படம் போதிய வரவேற்பை பெறாததால் நீண்ட இடைவேளைக்குப் பிறகு `சண்டக்கோழி 2' படத்தை லிங்குசாமி இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படத்திற்கான டப்பிங் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது,
`பவர்பாண்டி' படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கியுள்ளன. மிகவும் சிலிர்ப்பாகவும், உற்சாகமாகவும் இருப்பதை உணர்கிறேன் என்று குறிப்பிட்டுள்ள தனுஷ், சீன் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வரும் மார்ச் 9-ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்.

`பவர்பாண்டி' படத்தில் நதியா, பிரசன்னா, சாயாசிங், வித்யூ ராமன், டெல்லி கணேஷ், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் தனுஷ், மடோனா செபாஸ்டின், கவுதம் மேனன், திவ்யதர்ஷினி நடித்துள்ளனர். இயக்குநர், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அவரது டுவிட்டர் கணக்கு யாராலும் முடக்கப்பட்டதா? என்ற சந்தேகமும் ஒருபக்கம் எழுந்தது. ஆனால், சுசித்ரா அதுவும் இல்லை என்பதுபோல் மேலும் மேலும் டுவிட்டுகளை பதிவு செய்துகொண்டே இருந்தார். இதுகுறித்து சுசித்ராவிடம் விளக்கம் கேட்க அவரை தொடர்புகொள்ள முயன்றபோது அவரது தொலைபேசி அழைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், நடிகரும், சுசித்ராவின் கணவருமான கார்த்திக், சுசித்ராவின் டுவிட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, கடந்த சில தினங்களாக சுசித்ரா பதிவு செய்ததாக சில டுவிட்டுகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது.
இது அனைத்தும் சுசித்ரா பதிவு செய்தது அல்ல. அவரது டுவிட்டர் கணக்கு சிலபேரால் முடக்கப்பட்டது. தற்போது அவருடைய டுவிட்டர் கணக்கை திரும்ப பெற்றுவிட்டோம். சுசித்ரா பதிவு செய்த டுவிட்டுகள் சிலபேருக்கு மனவலியை கொடுத்திருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் நடிகர் கருணாஸ் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொகுதி மக்கள் பலரும், ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவு தருமாறு வலியுறுத்தினர். அவர் காணவில்லை என போலீசிலும் புகார் செய்யப்பட்டது.

இந்நிலையில் நடிகர் கருணாஸ் இன்று காலை திருவாடானை தொகுதிக்கு வந்தார். பின்னர் அவர் தனது ஆதரவாளர்களுடன் திருவாடானைக்கு சென்றார். அங்குள்ள பஸ் நிலையம் பகுதிக்கு சென்றுபோது அங்கு திரண்டிருந்த தீபா பேரவையினர் திடீரென்று கருணாஸ் ஓழிக என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனே திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார், தீபா பேரவையினரிடம் பேசினர். இதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர், நடிகர் தனுஷ் எங்களுடைய மகன், எங்களுக்கு வயதாகி விட்டதால் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கு பொய்யானது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடிகர் தனுஷ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இரு தரப்பினரிடமும் உள்ள நடிகர் தனுசின் பள்ளி மாற்று சான்றிதழ்களை தாக்கல் செய்யுமாறு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இருதரப்பினரும் சான்றிதழ்களை தாக்கல் செய்தனர்.

நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றிதழ்களில் அங்க மச்சம் அடையாளம் குறிப்பிடவில்லை என எதிர்தரப்பினர் வாதிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று, நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர் தனுசின் அங்கமச்ச அடையாளம் காண அவர் வருகிற 28-ந்தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை அன்றைக்கு ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், தற்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படமும் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போகிறது. தற்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் ரிலீஸ் தேதி இன்னமும் உறுதியாகாத சூழ்நிலையில், ‘சிவலிங்கா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதன்படி, வருகிற தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 14-ந் தேதி ‘சிவலிங்கா’ படத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். ‘சிவலிங்கா’ படத்தை பிரபல இயக்குனர் பி.வாசு இயக்கியுள்ளார். ரித்திகா சிங், சக்தி, வடிவேலு, ராதாரவி, பானுப்ரியா, ஊர்வசி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இதனால் 8-வது வகுப்பிலேயே பள்ளி படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ரேடியோ மெக்கானிக்கிடம் சேர்ந்து அதில் ஆர்வம் காட்டுகிறார். புதிய கண்டுபிடிப்பில் தீவிரமாக இருக்கிறார். இந்த கால கட்டத்தில் ஊரில் கடும் மின்வெட்டு வருகிறது. தினமும் 18 மணி நேரம் மின்சாரம் இல்லை. இதற்கு மாற்று வழி என்ன என்பதை அருண் சிதம்பரம் யோசிக்கிறார். கல்வி அறிவை வளர்க்க பேராசிரியர் ஞானசம்பந்தம் நடத்தும் நூலகத்துக்கு சென்று புத்தகங்களை படிக்கிறார். மின் தட்டுப்பாட்டை போக்கும் புதிய முயற்சியில் இறங்குகிறார்.

இதற்கிடையில் என்ஜினீயரிங் படித்து விட்டு சென்னை ஐ.டி. கம்பெனியில் அதிகம் சம்பளத்துக்கு வேலை பார்க்கும் யோக்ஜேப்பி, வேலை அழுத்தம் காரணமாக அதை விட்டு விட்டு கிராமத்துக்கு வந்து விவசாயம் பார்க்கிறார். படிக்காமல் ஆராய்ச்சி ஆராய்ச்சி என்று அலையும் அருண் சிதம்பரத்தையும், ஐ.டி. கம்பெனி வேலையை விட்டு விட்டு கிராமத்தில் விவசாயம் பார்க்கும் யோக் ஜேப்பியையும் அந்த ஊர் மக்கள் ஏளனமாக பார்க்கிறார்கள். கேலி செய்கிறார்கள்.
இதையெல்லாம் மீறி விடாமுயற்சியில் ஈடுபடும் இருவரும் கடைசியில் சாதித்தது என்ன என்பது மீதிக்கதை.
நாயகன் அருண் சிதம்பரத்துக்கு இது முதல் படம். என்றாலும், கதைக்கு தேவையான யதார்த்த நடிப்பை பதிவு செய்து பாராட்டு பெறுகிறார். கிராமத்தில் சாதிக்க துடிக்கும் சாதாரண இளைஞனாக வாழ்ந்து காடடி இருக்கிறார். யோக்ஜேப்பி ஐ.டி. வேலையைவிட்டு கிராமத்தில் விவசாயம் பார்க்கும் இளைஞனாக மாறி அசத்துகிறார். இன்றைய படித்த இளைஞர்களை விவசாயம் செய்ய தூண்டும் வகையில் அற்புதமாக நடித்திருக்கிறார்.

நாயகி ஜியா சங்கர் பொருத்தமான தேர்வு. நகரத்தில் இருந்து கிராமத்துக்கு வந்து வாழும் பெண்ணாக முத்திரை பதிக்கிறார். காதல் காட்சிகளில் செயற்கைதனம் இல்லாமல் இவரது நடிப்பு யதார்த்தமாக அமைந்திருப்பது அருமை. முதல் படத்திலேயே மனதில் பதிகிறார்.
மகன் சாதனை புரிய வேண்டும் என்பதை ஊக்கப்படுத்தும் தந்தையாக வரும், இளவரசு மிகைபடுத்தாத கிராமத்து அப்பாவாகவே கண்களுக்கு தெரிகிறார். மகன் மீது அக்கறை கொண்ட பாசம் நெகிழ வைக்கிறது. பிளாக் பாண்டி படம் முழுவதும் வந்து நகைச்சுவையில் தனித்துவமாக இடம் பிடிக்கிறார். இது இவருக்கு பெயர் சொல்லும் படமாகும் என்பது மட்டும் உண்மை.

கதை, வசனம், பாடல், நடிப்பு, இயக்கம் என அருண் சிதம்பரம், நடிப்பை போலவே மற்ற விஷயங்களிலும் தனது திறமையை அருமையாக கையாண்டு இருக்கிறார். அமெரிக்காவில் அதிக சம்பளத்துக்கு பார்த்த வேலையை விட்டுவிட்டு சினிமாதுறைக்கு வந்தது சரிதான் என்பதை முதல் படத்திலேயே நிரூபித்திருக்கிறார். அவரது தந்தைக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
கிராமத்து இளைஞர்களும் முயற்சி இருந்தால் நிச்சயம் சாதனை புரியலாம் என்பதை ஏற்கும் விதமாக சொல்லி இருக்கிறார். ஐ.டியில் வேலை பார்த்தாலும் விவசாயத்தில் சாதிக்க முடியும். அதிகம் படிக்காவிட்டாலும் அறிவியலில் சாதிக்க முடியும் என்பதை அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார்.
40 சதவீத மக்களுக்கு 80 சதவீத விவசாயம் கைகொடுத்த காலம் மாறி, 80 சதவீத மக்களுக்கு 40 சதவீதமாக விவசாயம் குறைந்துவிட்டது. எனவே படித்தவர்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்டினால் தான் நாட்டை காப்பாற்ற முடியும். குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டியது அவசியம் என்ற முக்கியமாக கருத்துக்களை எடுத்துக்கூறி இளைஞர்களிடம் புதிய ஆர்வத்தை தூண்டியுள்ள இவரது முயற்சியை கைதட்டி பாராட்டலாம்.

சர்வதேச அளவில் 2 ரெமி விருது உள்பட 7 சர்வதேச விருகளையும் கவுரவங்களையும் பெற்றுள்ள ‘கனவு வாரியம்‘ நமது ரசிகர்களிடமும் நனவு வாரியமாகும் வகையில் ரசிக்கும் சிராமத்து கதையுடன் நல்ல கருத்துக்களையும் கொண்டு சேர்த்துள்ள அருண் சிதம்பரம், ‘ஆகா ஓகோ’ சிதம்பரமாகி இருக்கிறார்.
ஷியாம் பெஞ்சமின் ரசிக்கும் இசையை கொடுத்து இருக்கிறார். ரெமி விருது பெற்ற குழந்தைகள் பாடலுக்கு அருண் சிதம்பரத்தின் வரிகள் மெருகேற்றுகின்றன. பின்னணி இசை படத்துக்கு பலம். எஸ்.செல்வகுமார் தனது கேமராவால் கிராமத்து அழகை கண்முன்னே கொண்டு வந்து ரசிக்க வைத்திருக்கிறார். சினிமாத்தனம் இல்லாத இதுபோன்ற தமிழ் படங்கள் நிச்சயம் இளைஞர்களுக்கு புதிய சாதனைக்கு வழிவகுக்கும். ‘கனவு வாரியம்’ அப்துல்கலாம் இளைஞர்களுக்கு கூறிய அறிவுரையை நனவாக்கச் சொல்லும் அற்புதமான படைப்பு.
மொத்தத்தில் ‘கனவு வாரியம்’ நனவு வாரியம்

இந்நிலையில், ஆரியின் தாயார் முத்துலட்சுமி இன்று அதிகாலை 3 மணியளவில் புதுக்கோட்டையில் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான பழனிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு, அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வு நாளை காலை பழனியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆரி, தற்போது திண்டிவனம் அருகே படப்பிடிப்பில் இருந்துள்ளார். தன்னுடைய அம்மா இறந்த செய்தி கேட்டதும் நேராக பழனி விரைந்துள்ளார். ஆரியின் தாயார் மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இத்தாலியில் திருமணத்தை நடத்த முடிவு செய்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 700 பேரை அழைத்து செல்வதற்காக விமான டிக்கெட்டுகள், இத்தாலியில் நட்சத்திர ஓட்டலில் அறைகள் போன்றவற்றை முன்பதிவு செய்தனர். இந்த நிலையில் சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலிக்கும் தகவல் வெளியாகி அவர்கள் திருமண நிச்சயதார்த்தத்தையும் தடபுடலாக நடத்தி முடித்தார்கள்.

முதலில் அகில் திருமணத்தை நடத்துவது என்றும், அதன்பிறகு சில மாதங்கள் கழித்து சமந்தா, நாக சைதன்யா திருமணத்தை ஐதராபாத்தில் நடத்துவது என்றும் முடிவு செய்தார்கள். ஆனால் தற்போது அகில்-ஸ்ரேயா திருமணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை விருந்தினர்களிடம் போனில் தெரிவித்து இத்தாலி பயணத்துக்கு தயாராக வேண்டாம் என்று கூறி வருகிறார்கள். திருமணம் நின்றதற்கான காரணம் தெரியவில்லை.
அகில்-ஸ்ரேயா பூபால் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாலேயே திருமணம் நின்றுபோனதாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கப்படுகிறது. இது நடிகை சமந்தாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது திருமணத்தை திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே நடத்தி விட அவர் அவசரம் காட்டுவதாகவும், இதுகுறித்து நாகார்ஜுன் மற்றும் நாகசைதன்யாவிடம் அவர் வற்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
சமந்தா விருப்பப்படியே முன்கூட்டி திருமணத்தை நடத்த பெற்றோர்கள் முடிவு செய்து விட்டனர். விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது நினைவை போற்றும் வகையில் மெரினா கடற்கரையில் கம்பீரமான சிவாஜி சிலை நிறுவப்பட்டுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் சிவாஜிக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டது. இதன் பின்னர் மெரினா கடற்கரையில் சிவாஜி சிலை தனி அடையாளமாகவே மாறிப்போனது.

இந்நிலையில் சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை தொடர்ந்து சிவாஜி சிலையை அதற்றுவதற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு பதில் அளித்து அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டி முடித்த பின்னர் மெரினாவில் உள்ள சிவாஜி சிலையை அகற்றி அங்கு நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு கோர்ட்டும் அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் அடையாறில் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரில், 28 ஆயிரத்து 300 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான முறையில் மணிமண்டபம் கட்டும் பணி தொடங்கி வேகமாக நடந்து வருகிறது.
சிவாஜி கணேசனின் நினைவை போற்றும் வகையில், தமிழக அரசு சார்பில் அவருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து மணி மண்டபத்துக்காக 3 விதமான வரை படங்கள் உருவாக்கப்பட்டன. அதில் ஒன்றை ஜெயலலிதாவும், சிவாஜி கணேசன் குடும்பத்தினரும் தேர்வு செய்தனர்.
இதனையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந்தேதி மணி மண்டபம் கட்டும் பணி தொடங்கியது.
இதன் பின்னர் கடந்த 3 மாதங்களாக மணிமண்டபம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மணிமண்டபத்தில் பிரதான பெரிய கலசம் உள்ளிட்ட 4 கலசங்களும், 4 நுழைவு வாயில்களும் அமைக்கப்பட உள்ளன.
மணிமண்டபத்தின் உட்புறச் சுவர்களில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட உள்ளன. வெளிப்புறத்தில் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட உள்ளன.
மணிமண்டபத்தின் மேற்கூறை பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. மணிமண்டபத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டும் பணியும் நடந்து வருகிறது. கழிவறை வசதியும் செய்யப்படுகிறது. தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்படும் இப்பணிகள் அனைத்தும் முடிவடைய இன்னும் 3 மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிமண்டப கட்டுமான பணி முடிந்ததும் மே மாத இறுதியிலோ அல்லது ஜூன் மாத தொடக்கத்திலோ மணிமண்டபம் திறக்கப்படும் என்று தெரிகிறது.
அப்போது மெரினாவில் உள்ள சிவாஜி சிலை அகற்றப்பட்டு மணிமண்டபத்தில் வைக்கப்பட உள்ளது. இந்த மணிமண்டபத்தில் சிவாஜி கணேசனின் அறிய புகைப்படங்கள் மற்றும் அவரை பற்றிய தகவல்களும் இடம்பெற உள்ளது.
"தென்னங்கீற்று'' கதையின் நாயகி பெயர் வசுமதி. இருபத்தெட்டு வயது வரை பூப்படையாத பெண் அவள்.
ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, கோவி.மணிசேகரன் இந்த நாவலை எழுதியிருந்தார்.
தமிழ்ப் படத்துக்கு கதாநாயகியாக சுஜாதாவும், கதாநாயகனாக விஜயகுமாரும் ஒப்பந்தம் ஆனார்கள்.
கன்னடப்படத்துக்கு "நிரீக்ஷே'' (எதிர்பாராதது) என்று பெயரிடப்பட்டது. அப்போது கன்னடத்தில் மிகப்பிரபலமாக இருந்த கல்பனா, (கன்னட) மஞ்சுளா ஆகியோர் கன்னடப்படத்துக்கு ஒப்பந்தம் ஆனார்கள். தமிழில் இரண்டாவது கதாநாயகியாக (டாக்டர் வேடத்தில்) நடிக்கவும் கல்பனா சம்மதித்தார்.
கன்னடப் படவுலகில் நெம்பர் 1 இசை அமைப்பாளராக விளங்கிய ஜி.கே.வெங்கடேஷ், இரு படங்களுக்கு இசை அமைத்தார்.
"தென்னங்கீற்று'' படப்பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடந்தது. மணிசேகரன் கேட்டுக்கொண்டதன் பேரில், கே.பாலசந்தர் இந்த படப்பூஜையில் கலந்து கொண்டு, கேமராவை முடுக்கி வைத்து, படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
ஒரே நேரத்தில் இரு மொழிகளிலும் படத்தை இயக்கப் போகிறேன் என்று கோவி.மணிசேகரன் சொன்னதும், "என்ன கோவி! முதன் முதலாக டைரக்ட் செய்யப் போகிறீர்கள். எதற்கு இந்த விஷப்பரீட்சை?'' என்று கேட்டார்.
"ஒரு சோதனைதான்!'' என்றார், மணிசேகரன்.
"அதற்கில்லை. நானும் தென்னங்கீற்று நாவலைப் படித்திருக்கிறேன். படம் எடுக்க முடியுமா என்று பலநாள் யோசித்து, `முடியாது' என்று கைவிட்டேன். ஒரு பெண் பருவம் அடையவில்லை என்று, 13,000 அடி வரை எப்படி சொல்லப்போகிறீர்கள்? கத்தி மேல் நடப்பது போன்ற இந்தக் கதையை, ஒரே நேரத்தில் இரு மொழிகளில் தயாரிக்கிறீர்கள். இது விஷப்பரீட்சை. ஜாக்கிரதையாக இருங்கள்'' என்று
எச்சரித்தார்.படப்பிடிப்பை, இரு மொழிகளிலும், ஏக காலத்தில் வேகமாக நடத்தி, குறிப்பிட்ட காலத்தில் முடித்தார், மணிசேகரன்.
படத்தை வாங்க, விநியோகஸ்தர்கள் ஈபோல் மொய்த்தனர். இரு மொழிகளிலும் பட அதிபருக்கு கொள்ளை லாபம்.
"தென்னங்கீற்று'' 4-7-1975-ல் ரிலீஸ் ஆயிற்று. அதே சமயத்தில் கன்னடப்படமும் கர்நாடகத்தில் வெளியாயிற்று.
கன்னடப்படம் 75 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. தமிழ்ப்படம் 4 வாரம்தான்!
கதையின் மையக்கருத்தை பெண்கள் ஏற்காததால், தமிழ்ப்படம் பெண்களை கவரவில்லை. ஆனால், கர்நாடக ரசிகர்கள், புதுமையை ஏற்றுக்கொண்டார்கள்.
"தென்னங்கீற்று'' படத்தைப் பார்த்த டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், "இது விருதுக்கு உரிய படம். அனுப்பி வைக்கலாம்'' என்று யோசனை சொன்னார்.
அவர் கூறியபடியே, "தென்னங்கீற்று'' தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் சங்க விருதைப் பெற்றது. கன்னட "நிரீக்ஷே'', கர்நாடக அரசின் விருதைப் பெற்றது.
பட அதிபர் பாபாதேசாய் புத்திசாலி. நிறைய லாபத்தை சம்பாதித்தவர், மீண்டும் படம் எடுப்பதில்லை என்று முடிவு செய்து, வேறு வியாபாரத்துக்கு போய்விட்டார்.
"தென்னங்கீற்று'' படம் தயாராகி முடிந்திருந்தபோது, அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் தர பல பட அதிபர்கள் கோவி.மணிசேகரன் வீட்டுக்கு படையெடுத்தனர். அவற்றை மணிசேகரன் ஏற்கவில்லை. "படம் வரட்டும்; பிறகு பார்ப்போம்'' என்று கூறிவிட்டார்.
படம் வெளிவந்து, சரிவர ஓடாததால், அந்தப் பட அதிபர்களில் ஒருவர்கூட மணிசேகரனைத் தேடி வரவில்லை. மூலைக்கு ஒருவராக ஓடி மறைந்துவிட்டனர்!
"இலக்கியத் துறையில் வெற்றி மேல் வெற்றி பெற்றோம். கலைத்துறையில் மட்டும் ஏனிந்த தோல்வி?'' என்று எண்ணி வருந்தினார், மணிசேகரன்.
`இனி திரைப்படத்துறையே வேண்டாம்' என்று தீர்மானித்து, மீண்டும் இலக்கியப்பணியில் ஈடுபட்டார். பாதியில் நின்றிருந்த "யாகசாலை'' என்ற நாவலை எழுதி முடித்தார்.
இந்த சமயத்தில், சிவகாசியில் காலண்டர் வியாபாரம் செய்து வந்த சிதம்பரம் என்ற தொழில் அதிபர், மணிசேகரனை
சந்தித்தார்."தென்னங்கீற்று'' படத்தால் ஈர்க்கப்பட்டவர் அவர்.
மணிசேகரனிடம் சிதம்பரம் சொன்னார்:
"மணிசேகரன் அய்யா! தென்னங்கீற்றில், வயதுக்கு வராத ஒரு பெண்ணை கதாநாயகியாகப் படைத்தது பெரிதல்ல. அவள் வயதுக்கு வந்து விட்டாள் என்பதை உணர்த்த, திரையில் ரத்தச் சிதறலைக் காட்டினீர்களே... ஆ! அது அற்புதம். அதில் மயங்கியே, உங்களை வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறேன்'' என்றார்.
மணிசேகரன், தனது "யாகசாலை'', "மனோரஞ்சிதம்'' ஆகிய கதைகளைச் சொன்னார். "மனோரஞ்சிதம்'' அவருக்குப் பிடித்துப்போயிற்று. அதை படமாக்குவதாகச் சொன்னார்.
பட வேலைகள் தொடங்கின. டைரக்டர் துரையால் தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்ட சுமித்ராதான் கதாநாயகி. விஜயகுமார் கதாநாயகன். மற்றும் எஸ்.வி.சுப்பையா, மனோரமா, தேங்காய் சீனிவாசன், புதுமுகம் எம்.எஸ்.வசந்தி, எம்.என்.ராஜம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
திரைக்கதை, வசனத்தை எழுதி முடித்தார், மணிசேகரன்.
"மனோரஞ்சிதம்'' படத்தொடக்க விழா அமர்க்களமாக நடந்தது. விழாவுக்கு வந்த அனைவருக்கும் மனோரஞ்சித மலர்
வழங்கப்பட்டது!








