என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
இணையத்தில் லீக் ஆன புது போர்டு எஸ்யுவி விவரங்கள்
Byமாலை மலர்8 Dec 2020 10:38 AM GMT (Updated: 8 Dec 2020 10:38 AM GMT)
போர்டு நிறுவனத்தின் புதிய எஸ்யுவி மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
போர்டு மற்றும் மஹிந்திரா நிறுவனங்களிடையே கடந்த ஆண்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி எதிர்கால போர்டு மாடல்கள் மஹிந்திரா நிறுவன கூட்டணியில் உருவாகிறது. மேலும் மஹிந்திரா நிறுவனம் உ்பத்தி பணிகளையும் மேற்கொள்ள இருக்கிறது.
அதன்படி மஹிந்திரா பிளாட்பார்மில் உருவாகும் புது எஸ்யுவி மிட்-சைஸ் மாடல் ஆகும். இந்த மாடல் மஹிந்திராவின் புதிய எக்ஸ்யுவி500 மாடலை தழுவி உருவாகிறது. இதன் விற்பனை அடுத்த ஆண்டு மத்தியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் புதிய போர்டு எஸ்யுவி மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. ஸ்பை படத்தில் உள்ள காரின் முன்புற கிரில் பகுதியில் போர்டு லோகோ இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் முன்புறம் ஏர்-இன்டேக் பம்ப்பரிலும், ஸ்ப்லிட் லைட்னிங் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த எஸ்யுவி மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் யூனிட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவை இரண்டும் 180 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட்கள் வழங்கப்படுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X