search icon
என் மலர்tooltip icon

    கார்

    பிப்ரவரியில் கார்களின் விலையை மாற்றும் டாடா மோட்டார்ஸ்
    X

    கோப்புப்படம் 

    பிப்ரவரியில் கார்களின் விலையை மாற்றும் டாடா மோட்டார்ஸ்

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 11 கார்களை விற்பனை செய்து வருகிறது.
    • கார்களின் விலை மாற்றம் பிப்ரவரியில் அமலுக்கு வருகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு பிப்ரவரி 1-ம் தேதி அமலுக்கு வருகிறது. ஐ.சி. என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் என அனைத்தின் விலையும் உயர்த்தப்படுகிறது. இந்த முறை கார்களின் விலை 0.7 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

    தற்போது ஏழு ஐ.சி. என்ஜின் கார்கள் மற்றும் நான்கு எலெக்ட்ரிக் கார்களை இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது. இதில் டியாகோ, டியாகோ EV, டிகோர், டிகோர் EV, பன்ச், பன்ச் EV, அல்ட்ரோஸ், நெக்சான், நெக்சான் EV, ஹேரியர் மற்றும் சஃபாரி உள்ளிட்டவை அடங்கும்.


    சமீபத்தில் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பன்ச் EV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 10 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நான்காவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்த எலெக்ட்ரிக் கார் நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    Next Story
    ×