என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கார்
கொஞ்ச நாள் தான் இருக்கு.. அதுக்குள்ள வாங்கிடுங்க.. மஹிந்திராவின் சூசக அறிவிப்பு
- மஹிந்திரா நிறுவன கார் மாடல்கள் விலை மாற்றம்.
- மஹிந்திரா கார்களின் விலை மாற்றம் அடுத்த ஆண்டு அமலுக்கு வருகிறது.
மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி மஹிந்திரா எஸ்.யு.வி. மாடல்கள் விலை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படுகிறது. எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு விலை உயர்த்தப்படும் என்ற தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
பணவீக்கம் காரணமாக உதிரி பாகங்கள் விலை உயர்ந்துள்ளதே விலை உயர்வுக்கு காரணம் என்று தெரிகிறது. பணவீக்க சூழலிலும் முடிந்தவரை விலையை கட்டுப்படுத்த முயற்சித்ததாகவும், வேறு வழியின்றிதான் கார்களின் விலையை உயர்த்தும் முடிவை எடுத்ததாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு மூலம் இந்தியாவில் தனது வாகனங்கள் விலையை உயர்த்தும் புதிய நிறுவனமாக மஹிந்திரா இணைந்துள்ளது. முன்னதாக மாருதி சுசுகி, ஹூண்டாய், எம்.ஜி. மோட்டார்ஸ், ஆடி மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது வாகனங்கள் விலை அடுத்த மாதத்தில் இருந்து உயர்த்தப்படும் என அறிவித்தன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்