search icon
என் மலர்tooltip icon

    கார்

    திடீரென கார் வெளியீட்டை ஒத்திவைத்த ஹூண்டாய்!
    X

    திடீரென கார் வெளியீட்டை ஒத்திவைத்த ஹூண்டாய்!

    • ஹூண்டாய் நிறுவனம் தனது கார் மாடலின் இந்திய வெளியீட்டை திடீரென நிறுத்தி விட்டது.
    • இந்த காரின் புது வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய ஹூண்டாய் டக்சன் மாடல் வெளியீட்டை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு மாற்றி இருக்கிறது. முன்னதாக இந்த கார் இன்று (ஆகஸ்ட் 04) அறிமுகம் செய்யப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய ஹூண்டாய் டக்சன் மாடலுக்கான முன்பதிவு கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி தொடங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும்.

    இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் டக்சன் மாடல் பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. இவற்றுடன் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இதன் டீசல் என்ஜினுடன் ஆல் வீல் டிரைவ் வசதி வழங்கப்படுகிறது.


    இதன் பெட்ரோல் என்ஜின் 154 ஹெச்.பி. பவர், 192 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 184 ஹெச்.பி. பவர், 416 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டு இருக்கிறது. இந்த காரின் முன்புறம் பெரிய கிரில் மற்றும் பாராமெட்ரிக் ஜூவல் பேட்டன் உள்ளது. இத்துடன் எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள் உள்ளன.

    முன்புறம் செண்ட்ரல் ஏர் டேம் மற்றும் சில்வர் ஃபாக்ஸ் பாஷ் பிளேட் உள்ளது. புதிய டக்சன் மாடலின் இந்திய வேரியண்ட்டில் 18 இன்ச் அலாய் வீல்கள், டெயில் லைட்கள், வழங்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×