என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கார்
X
எதிர்காலத்தில் வாகனங்களால் இந்த பிரச்சனை வரும்- எச்சரித்த எலான் மஸ்க்
Byமாலை மலர்7 March 2022 10:36 AM GMT (Updated: 7 March 2022 10:36 AM GMT)
எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனமே தானியங்கி கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் அவர் பேசியுள்ளார்.
ஓட்டுநர்கள் இல்லாத தானியங்கி கார்களால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனம் தானியங்கி கார் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருந்து வருகிறது. அந்த நிறுவனம் தற்போது செமி-ஆட்டோனமஸ் டிரைவிங் மென்பொருளை மின்சார வாகன நிறுவனங்களுக்கு அளித்து வருகிறது. இது தவிர் தற்போது எஃப்.எஸ்.டி எனப்படும் முழுதாக தானியங்கி முறையில் ஓடும் கார்களையும் உருவாக்கி வருகிறது.
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கூறியதாவது:-
எதிர்காலத்தில் தானியங்கி வாகனங்கள் மக்கள் பயனிப்பதை எளிதாக்கும் என்பதால், மக்கள் கூடுதலாக வாகனங்களை வாங்க முற்படுவர். இதனால் சாலையில் செல்லும் வாகனங்களும் அதிகரிக்கும். போக்குவரத்து நெரிசலும் அதிகமாகும். இதை தவிர்க்க முடியாது. ஆனால் தானியங்கி கார்கள் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் வேதனையை குறைக்கும்.
இவ்வாறு எலான் மஸ்க் கூறியுள்ளார்.
எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனமே தானியங்கி கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளை அவர் பேசியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X