என் மலர்

    ஆட்டோ டிப்ஸ்

    டொயோட்டா கிளான்சா
    X
    டொயோட்டா கிளான்சா

    நாளை முதல் புது விலை - ஷாக் கொடுத்த டொயோட்டொ!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டொயோட்டா நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்கள் விலையை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கிளான்சா ஹேச்பேக் மற்றும் அர்பன் குரூயிசர் சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்கள் விலையை நாளை (மே 1) முதல் உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. உற்பத்தி செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து கார்களின் விலை உயர்த்தப்படுவதாக டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    இரு மாடல்களின் விலை உயர்த்தப்படுவது உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், இவற்றின் விலை எத்தனை சதவீதம் உயர்த்தப்பட இருக்கிறது என்பது பற்றி டொயோட்டா நிறுவனம் இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இம்முறை இரு கார்களின் விலை அதன் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப அதிகபட்சம் 2 சதவீதம் வரை உயர்த்தப்படும் என தெரிகிறது.

    கடந்த இரு மாதங்களில் டொயோட்டா நிறுவன கார்களின் விலை உயர்த்தப்படுவது இது இரண்டாவது முறை ஆகும். முன்னதாக இந்த நிதியாண்டு துவக்கத்தில் டொயோட்டா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை 4 சதவீதம் வரை உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    "டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் டொயோட்டா அர்பன் குரூயிசர் மற்றும் டொயோட்டா கிளான்சா மாடல்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. விலை உயர்வு மே 1, 2022 முதல் அமலுக்கு வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி செலவீனங்களை ஈடு செய்யும் நோக்கிலேயே விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது." என டொயோட்டா நிறுவனம் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளது.

    Next Story
    ×