search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மஹிந்திரா கார்
    X
    மஹிந்திரா கார்

    ஏழு நாட்களுக்கு உற்பத்தி பணிகள் நிறுத்தம் - மஹிந்திரா அறிவிப்பு

    மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்கள் உற்பத்தி பணிகள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.


    மஹிந்திரா நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் ஏழு நாட்களுக்கு வாகனங்கள் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. ஆட்டோமொபைல் சந்தையில் செமிகண்டக்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட இருக்கின்றன.

    செமிகண்டக்டர் சிப்களுக்கான தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி ஆலைகள் மூடப்படுகின்றன. சந்தையில் செமிகண்டக்டர் தட்டுப்பாடு மேலும் மோசமடையும் என தெரிகிறது. கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி மட்டுமே நடைபெற்று வந்தது.

     மஹிந்திரா கார்

    ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது முதல் வாகனங்கள் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனினும், செமிகண்டக்டர் உற்பத்தி தற்போதைய தேவைக்கு ஏற்ப நடைபெறவில்லை. செமிகண்டக்டர் சிப் குறைபாடு காரணமாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளன.

    Next Story
    ×