என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
டீசல் வேரியண்டிற்கு இணையான வரவேற்பு பெறும் நெக்சான் இ.வி.
Byமாலை மலர்30 July 2021 9:17 AM GMT (Updated: 30 July 2021 9:17 AM GMT)
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பத்து எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இ.வி. மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பகுதிகளில் நெக்சான் இ.வி. மாடல் அதன் டீசல் வேரியண்டிற்கு இணையான வரவேற்பை பெற்று வருகிறது.
முன்னதாக ஜூன் மாத வாக்கில் நெக்சான் இ.வி. மாடல் 650 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இத்துடன் 2021 ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் நெக்சான் இ.வி. மொத்தத்தில் 1715 யூனிட்கள் விற்பனையானது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக பலர் எலெக்ட்ரிக் மாடல்களை வாங்க துவங்கி இருக்கின்றனர். மேலும் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பேம் 2 திட்டத்தின் கீழ் அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நெக்சான் இ.வி. மாடலுக்கான தட்டுப்பாடு மேலும் அதிகரித்து இருக்கிறது.
2025 வாக்கில் இந்திய சந்தையில் பத்து எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு இருக்கிறது. இத்துடன் சார்ஜிங் சார்ந்த உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X