search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஆட்டோ ஆம்புலன்ஸ்
    X
    ஆட்டோ ஆம்புலன்ஸ்

    ஆட்டோவை மினி ஆம்புலன்ஸ் ஆக மாற்றி நோயாளிகளுக்கு உதவும் ஓட்டுனர்

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆட்டோ ஓட்டுனர் தனது ஆட்டோவை மினி ஆம்புலன்ஸ் ஆக மாற்றி இருக்கிறார்.


    கொரோனாவைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்து வருகிறது. மறுபக்கம் மனித நேயமும் ஓங்கி ஒலிக்கிறது. தொற்றை எதிர்கொள்ள பல நிறுவனங்கள், பிரபலங்கள் உள்பட பலதரப்பட்டோர் அரசுக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த 51 வயதான பிரேமசந்திரன் தனது ஆட்டோவை மினி ஆம்புலன்ஸ் ஆக மாற்றி கொரோனா தொற்று அறிகுறி இருப்பவர்களுக்கு உதவி வருகிறார். ஆட்டோ ஓட்டுனரான இவர் இதுவரை தொற்று அறிகுறிகள் இருந்த சுமார் 500-க்கும் அதிகமானோரை தனது மினி ஆம்புலன்சில் அழைத்து சென்று இருக்கிறார்.

     ஆட்டோ ஆம்புலன்ஸ்

    ஒவ்வொரு முறை மருத்துமனைக்கு செல்லும் போது, ஆட்டோவை முழுமையாக சுத்தப்படுத்திய பின்னரே அடுத்த பயணத்திற்கு பிரேமசந்திரன் தயாராகிறார். இவரது ஆட்டோ மூன்று புறங்களிலும் பிளெக்சி-கிளாஸ் தடுப்புகளை கொண்டுள்ளது. இதனால் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் மிகவும் குறைவு. இவருக்கும் தொற்று ஏற்படாமல் இருக்கும். 

    `வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு தொற்று அறிகுறிகள் இருந்தது. அவரை மருத்துவமனை கொண்டு சென்றதும், எனக்கு பலர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அழைப்புகளை மேற்கொள்ள துவங்கினர். இந்த பயணங்கள் மூலம் மக்களுக்கு உதவ முடிகிறது,' என அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×