search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    யமஹா மோட்டார்சைக்கிள்
    X
    யமஹா மோட்டார்சைக்கிள்

    ஆலை பணிகளை தற்காலிகமாக நிறுத்திய யமஹா

    யமஹா நிறுவனம் தனது உற்பத்தி ஆலை பணிகள் நிறுத்தப்படுவதாக அறிவித்து இருக்கிறது.


    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஆலை பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. இதனால் காஞ்சிபுரம் மற்றும் உத்திர பிரதேச மாநிலத்தின் சூரஜ்பூர் ஆலை பணிகள் மே 15 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட இருக்கிறது.

     யமஹா மோட்டார்சைக்கிள்

    உற்பத்தி பணிகள் இம்மாத இறுதி வரை நிறுத்தப்பட இருக்கிறது. நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து ஆலை பணிகள் நிறுத்தப்படுவதாக யமஹா தெரிவித்து உள்ளது. கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் பகுதி அலுவலக பணிகளை மேற்கொள்வோர் தொடர்ந்து வீட்டில் இருந்தபடி பணியாற்றுவர்.

    தற்போதைய சூழலில் ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மட்டுமே நிறுவனத்திற்கு முக்கியமான ஒன்று. வினியோகஸ்தர்கள் மற்றும் டீலர்களுடன் இணைந்து பணியாற்றி, இதன் மூலம் ஏற்படும் பாதிப்பை முடிந்தளவு குறைக்க யமஹா முயற்சித்து வருகிறது என யமஹா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
    Next Story
    ×