என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
வாகனங்கள் உற்பத்தியை நிறுத்தி ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மாருதி சுசுகி
Byமாலை மலர்29 April 2021 11:47 AM GMT (Updated: 29 April 2021 11:47 AM GMT)
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தியை துவங்குகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் ஹரியானாவில் செயல்படும் தனது உற்பத்தி ஆலையில் வாகன உற்பத்தி பணிகளை நிறுத்துகிறது. எனினும், ஆலையை மூடாமல் நோயாளிகளுக்கு பயன்தரும் வகையில் ஆக்சிஜன் உற்பத்தியை துவங்குகிறது. இதே பணிகளை குஜராத் ஆலையிலும் மேற்கொள்ள இருப்பதாக மாருதி தெரிவித்து இருக்கிறது.
`கார் உற்பததி பணிகளின் போது மாருதி சுசுகி குறைந்த அளவு ஆக்சிஜன் உற்பத்தி செய்து வருகிறது. தற்போதைய சூழலில் கிடைக்கும் ஆக்சிஜன் அனைத்தும் உயிர்களை காப்பாற்றவே பயன்படுத்தப்பட வேண்டும்.' என மாருதி சுசுகி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆக்சிஜன் உற்பத்திக்காக மாருதி சுசுகி ஏற்கனவே திட்டமிட்டிருந்த வருடாந்திர பராமரிப்பு பணிகளை ஒத்திவைத்துள்ளது. முன்னதாக பராமரிப்பு பணிகளுக்காக மே 1 முதல் மே 9 வரை ஆலைகளை மூட மாருதி சுசுகி திட்டமிட்டு இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X