search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மாருதி சுசுகி
    X
    மாருதி சுசுகி

    வாகனங்கள் உற்பத்தியை நிறுத்தி ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மாருதி சுசுகி

    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தியை துவங்குகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் ஹரியானாவில் செயல்படும் தனது உற்பத்தி ஆலையில் வாகன உற்பத்தி பணிகளை நிறுத்துகிறது. எனினும், ஆலையை மூடாமல் நோயாளிகளுக்கு பயன்தரும் வகையில் ஆக்சிஜன் உற்பத்தியை துவங்குகிறது. இதே பணிகளை குஜராத் ஆலையிலும் மேற்கொள்ள இருப்பதாக மாருதி தெரிவித்து இருக்கிறது.

     மாருதி சுசுகி

    `கார் உற்பததி பணிகளின் போது மாருதி சுசுகி குறைந்த அளவு ஆக்சிஜன் உற்பத்தி செய்து வருகிறது. தற்போதைய சூழலில் கிடைக்கும் ஆக்சிஜன் அனைத்தும் உயிர்களை காப்பாற்றவே பயன்படுத்தப்பட வேண்டும்.' என மாருதி சுசுகி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    ஆக்சிஜன் உற்பத்திக்காக மாருதி சுசுகி ஏற்கனவே திட்டமிட்டிருந்த வருடாந்திர பராமரிப்பு பணிகளை ஒத்திவைத்துள்ளது. முன்னதாக பராமரிப்பு பணிகளுக்காக மே 1 முதல் மே 9 வரை ஆலைகளை மூட மாருதி சுசுகி திட்டமிட்டு இருந்தது.
    Next Story
    ×