என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
கார் மாடல்கள் விலையை திடீரென மாற்றியமைத்த போர்டு
Byமாலை மலர்24 April 2021 10:46 AM GMT (Updated: 24 April 2021 10:46 AM GMT)
போர்டு நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை அதிரடியாக மாற்றப்பட்டு விட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.
போர்டு இந்தியா நிறுவனம் பிகோ, ஆஸ்பையர், பிரீஸ்டைல், இகோஸ்போர்ட் மற்றும் என்டேவர் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. புதிய விலை ஏப்ரல் முதல் அமலாகி இருக்கிறது.
இகோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யுவி டைட்டானியம் பிளஸ், எஸ்இ மற்றும் எஸ் வேரியண்ட்கள் தவிர அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரூ. 20 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன்படி இகோஸ்போர்ட் பெட்ரோல் மாடல் விலை ரூ. 8.19 லட்சம் என்றும் டீசல் மாடல் விலை ரூ. 8.89 லட்சம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிகோ மற்றும் பிரீஸ்டைல் மாடல்கள் விலை ரூ. 18 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். இரு மாடல்களிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.
பிளாக்ஷிப் புல்-சைஸ் எஸ்யுவியான என்டேவர் மாடல் டைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி விலை ரூ. 70 ஆயிரமும், டைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி மற்றும் ஸ்போர்ட் 4x4 ஏடி வேரியண்ட்கள் விலை ரூ. 80 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஆஸ்பையர் மாடல் விலை ரூ. 3 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X