என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
புதுவித விற்பனை முறையில் டாடா நெக்சான் இவி
Byமாலை மலர்6 Aug 2020 12:16 PM GMT (Updated: 6 Aug 2020 12:16 PM GMT)
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் இவி மாடல் காரினை புதுவித முறையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
டாடா நெக்சான் இவி காரை வாங்க விருப்பம் இருந்தும் வாங்க தயக்கம் கொண்டவர்களை கவரும் வகையில் டாடா மோட்டார்ஸ் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது. அதன்படி புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் மாதாந்திர சந்தா அடிப்படையில் வழங்க டாடா மோட்டார்ஸ் முடிவு செய்து இருக்கிறது.
புதிய திட்டத்தை செயல்படுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆரிக்ஸ் இன்ஃபிராஸ்டிரக்ச்சர் சர்வீசஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. தற்சமயம் மாதாந்திர சலுகையில் டாடா நெக்சான் இவி எக்ஸ்இசட் பிளஸ் வேரியண்ட் கிடைக்கிறது. அதன்படி காரை 18 மாதங்களுக்கு பயன்படுத்துவோர் மாதம் ரூ. 47900 செலுத்தலாம்.
இதேபோன்று 24 மாதங்களுக்கு காரை பயன்படுத்த நினைப்போர் மாதம் 44900 ரூபாயையும் 36 மாதங்களுக்கு பயன்படுத்த விரும்புவோர் மாதம் ரூ. 41900 செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தில் வரிகளும் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
இந்த திட்டத்தில் காரை பயன்படுத்த அனைத்து வழிமுறைகளையும் நிறைவு செய்த பின், வாடிக்கையாளர் வீட்டில் சார்ஜர் பொருத்தப்பட்டு எலெக்ட்ரிக் கார் வீட்டிலேயே டெலிவரி செய்யப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X