டென்னிஸ்

மொராக்கோ ஓபன்: காலிறுதிக்கு முன்னேறியது யூகி பாம்ப்ரி ஜோடி

Published On 2024-04-04 09:20 GMT   |   Update On 2024-04-04 09:20 GMT
  • மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
  • ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

ரபாட்:

வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்போனோ ஒலிவெட்டி ஜோடி, கிரீசின் சிட்சிபாஸ், நெதர்லாந்தின் ஸ்டீவன்ஸ் ஜோடியுடன் மோதியது.

இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 6-3, 6-4 என எளிதில் கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News