டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறிய போபண்ணா ஜோடி

Published On 2023-07-12 06:07 GMT   |   Update On 2023-07-12 06:07 GMT
  • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
  • போபண்ணா- மேத்யூ எப்டென் ஜோடி 7-5, 4-6, 7-6 (10-5) என்ற செட் கணக்கில் அமெரிக்கா இணையை தோற்கடித்தது.

லண்டன்:

கிராண்ட்சிலாம் தொடர்களில் ஒன்றாகவும், மிக உயரியதாக மதிப்பிடப்படும் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் கூட்டணி டேவிட் பெல் (நெதர்லாந்து)-ரீஸ் ஸ்டால்டெர் (அமெரிக்கா) இணையை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் போபண்ணா- மேத்யூ எப்டென் கூட்டணி 7-5, 4-6, 7-6 (10-5) என்ற செட் கணக்கில் டேவிட் பெல் - (அமெரிக்கா) இணையை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

Tags:    

Similar News