டென்னிஸ்

மியாமி ஓபன் டென்னிஸ்: சபலென்கா அதிர்ச்சி தோல்வி

Published On 2024-03-24 11:13 GMT   |   Update On 2024-03-24 11:13 GMT
  • 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா உக்ரைனின் அன்ஹெலினா கலினினா உடன் மோதினார்.
  • முதல் செட்டை 4-6 என்ற புள்ளி கணக்கில் இழந்த சபலென்கா அடுத்த செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

மியாமி:

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா உக்ரைனின் அன்ஹெலினா கலினினா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 4-6 என்ற புள்ளி கணக்கில் இழந்த சபலென்கா அடுத்த செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து 3-வது செட்டை கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட சபலென்கா 1-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்து அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

Tags:    

Similar News