டென்னிஸ்

துபாய் சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு முன்னேறினார் ரூப்லெவ்

Published On 2024-02-29 14:57 GMT   |   Update On 2024-02-29 14:57 GMT
  • துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
  • இன்று நடந்த போட்டியில் ரஷியாவின் ரூப்லெவ் வெற்றி பெற்றார்.

துபாய்:

துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவுடன் மோதினார்.

இதில் முதல் செட்டை ரூப்லெவ் 6-4 என வென்றார். 2வது செட்டில் ரூப்லெவ் 4-3 என முன்னிலை பெற்றபோது செபாஸ்டியன் காயத்தால் விலகினார். இதன்மூலம் ரூப்லெவ் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News