டென்னிஸ்

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் - இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்

Published On 2023-04-22 14:21 GMT   |   Update On 2023-04-22 14:21 GMT
  • முதல் அரையிறுதியில் சிட்சிபாஸ் இத்தாலி வீரரை வென்றார்.
  • நாளை இரவு இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

பார்சிலோனா:

ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டியுடன் மோதினார்.

இதில் முதல் செட்டை சிட்சிபாஸ் 6-4 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை நீண்ட போராட்டத்துக்கு பின் முசெட்டி 7-5 என

கைப்பற்றினார்.

இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை சிட்சிபாஸ் 6-3 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். நாளை இரவு இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

Tags:    

Similar News