தொழில்நுட்பம்
மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 ஏ.எம்.டி.

ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-07-03 16:05 IST   |   Update On 2019-07-03 16:09:00 IST
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது எக்ஸ்.யு.வி.300 மாடலை ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் அறிமுகம் செய்துள்ளது.



மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது எக்ஸ்.யு.வி.300 ஏ.எம்.டி. காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய எக்ஸ்.யு.வி.300 ஏ.எம்.டி. காரின் விலை ஸ்டான்டர்டு வேரியண்ட்டை விட ரூ. 55,000 அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

ஏ.எம்.டி. டிரான்ஸமிஷன் கொண்ட எக்ஸ்.யு.வி.300 கார் ஆட்டோஷிஃப்ட் என அழைக்கப்படுகிறது. இது டீசல் பவர் டாப் எண்ட் மாடல்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த வகையில் டபுள்யூ8 மற்றும் டபுள்யூ8 (0) வேரியண்ட் விலை ரூ. 11.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் ரூ. 12.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


 
ஆட்டோஷிஃப்ட் வசதி கொண்ட எக்ஸ்.யு.வி.300 கார் இந்தியா முழுக்க அனைத்து விற்பனையகங்களிலும் கிடைக்கும். இதன் விநியோகம் உடனடியாக துவங்கும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. 

புதிய எக்ஸ்.யு.வி.300 ஏ.எம்.டி. மாடல்: அக்வாமரைன், பியல் வைட் மற்றும் ரேஜ் ரெட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இந்த காரில் 150 பி.ஹெச்.பி. மற்றும் 300 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

Similar News