வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 29 செப்டம்பர் 2025: சரஸ்வதி ஆவாஹனம்

Published On 2025-09-29 07:43 IST   |   Update On 2025-09-29 07:43:00 IST
  • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
  • திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு புரட்டாசி-13 (திங்கட்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சப்தமி நண்பகல் 1.41 மணி வரை பிறகு அஷ்டமி

நட்சத்திரம் : மூலம் மறுநாள் விடியற்காலை 4.22 மணி வரை பிறகு பூராடம்

யோகம் : அமிர்த, சித்தயோகம்

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்

இன்று சரஸ்வதி ஆவாஹனம், சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் வெள்ளி பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் ஸ்ரீ அனுமன் வாகனத்தில் வசந்த உற்சவம். குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் பூச்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்துடன் காட்சி.

திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். நத்தம் ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சனம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதருக்கு புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-சாந்தம்

ரிஷபம்-பணிவு

மிதுனம்-பெருமை

கடகம்-களிப்பு

சிம்மம்-உழைப்பு

கன்னி-விருத்தி

துலாம்- நன்மை

விருச்சிகம்-பக்தி

தனுசு- ஆசை

மகரம்-ஆக்கம்

கும்பம்-பயணம்

மீனம்-கடமை

Tags:    

Similar News