மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
- சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
- மகாளய அமாவாசயை முன்னிட்டு சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு மகாளய அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேன், கார், பஸ்களில் வந்த பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள தோப்புகளில் தங்கினர். இன்று அதிகாலை 6 மணிக்கு அடிவார நுழைவு வாயில் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு காத்திருந்த பல்லாயிரக்கணக்கானோர் சுமார் 5 மணி நேரம் மலை பாதையில் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சதுரகிரிக்கு செல்ல மலை அடிவாரத்தில் காத்திருந்த பக்தர்கள் கூட்டம்.
கட்டுக்கடங்காத கூட்டத்தால் மலை பாதைகளில் நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் வனத்துறையினர் மற்றும் போலீசார் அதனை ஒழுங்குபடுத்தினர். மகாளய அமாவாசயை முன்னிட்டு சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.