புதுச்சேரி

எம்.ஐ.டி.கல்லூரியில் சி.ஐ.ஐ., ஒய் 20 அமைப்பின் சார்பில் இளம் தொழில் முனைவோர் மாநாடு நடந்த காட்சி.

இளம் தொழில் முனைவோர் மாநாடு

Published On 2023-07-11 11:45 IST   |   Update On 2023-07-11 11:45:00 IST
  • தொழில் முனைவுக்கான மாறுதல் என்ற தலைப்பில் உரையாற்றினர்.
  • கல்லுாரி முதல்வர் மலர்கண் வரவேற்றார்.

புதுச்சேரி:

சி.ஐ.ஐ., அங்கமான 'யங் இந்தியன்ஸ் ஜி 20' இளையோர் உச்சி மாநாடு டெல்லியில் நாளை மறுநாள் 13-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடக்கிறது. இதன் முன்னோட்டமாக எம்.ஐ.டி. கல்லுாரியில் மாநாடு நடத்தப்பட்டது. கல்லுாரி முதல்வர் மலர்கண் வரவேற்றார்.

ஸ்டார்ட் அப் இந்தியா குறித்து சி.ஐ.ஐ., தலைவர் ஜோசப் ரோஜாரியா, அடல் இன்குபேஷன். தலைமை நிர்வாக அதிகாரி விஷ்ணுவர்தன் ஆகியோர் பேசினர். ஹாப்ஸ்டிக் டெக்னலா ஜிஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ண பிரதாப், பல்ஸ்பே நிறுவன மேலாண் இயக்குநர் சிதம்பர ராஜா ஆகியோர், வேலை தேடுதலில் தொழில் முனைவுக்கான மாறுதல் என்ற தலைப்பில் உரையாற்றினர்.

இந்திய டிஜிட்டல் புரட்சி குறித்து ட்விலைட் ஐ.டி. சொல்யூஷன்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி திருவேங்கடம் கிருஷ்ணசாமி, செமூரியா இன்க் தலைமை நிர்வாக அதிகாரி ஜேசன் சாமுவேல் ஆகியோர் உரையாற்றினர். மணகுள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினர்.

துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளா ராஜராஜன் முன்னிலைவகித்தனர். பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த இளம் சாதனை யாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிறைவில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிகப்பட்டது.

ஏற்பாடுகளை சி.ஐ.ஐ., ஓய்20 சேர்மத் திலீப், இணை சேர்மன் ஆனந்த கிருஷ்ணன் எம்.ஐ.டி., கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார்,மேலாண்மை துறை தலைவர் பாஸ்கரன் மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News