பொதுப்பணித்துறை தலைமை அலுவலக நுழைவு வாயில் மீது ஏறி பணி நீக்க ஊழியர்கள் போராட்டம் நடத்திய காட்சி.
நுழைவு வாயில் மீது ஏறி பணி நீக்க ஊழியர்கள் போராட்டம்
- 50-க்கும் மேற்பட்டோர் பொதுப் பணித்துறை தலைமை பொறியளார் அலுவலகத்துக்கு வந்தனர்.
- அலுவலகத்தின் நுழைவு வாயில் ஆர்ச் மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினர்.
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித் துறையில் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் அறிவிப்புக்கு ஒரு சில நாட்கள் முன்பு வவுச்சர் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.
தேர்தல் கமிஷன் இந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. தேர்தலுக்கு பின் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என முதல அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார்.
ஆனால் அதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெறவில்லை. இதனால் சட்டசபையில் அறிவித்தபடி தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி கடந்தத 30-ந் தேதி தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அன்றைய தினம் ஏற்கனவே தலைமை பொறியாளராக இருந்த சத்தியமூர்த்தி பணி ஓய்வு பெற்றார்.
தற்போது புதிய தலைமை பொறியாளராக பழனிப்பன் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பொதுப் பணித்துறை தலைமை பொறியளார் அலுவல கத்துக்கு வந்தனர். அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை யிட்டனர்.
அதில் சிலர் அங்கிருந்த ஏணியை சுவற்றில் சாய்த்து அதன்வழி யாக ஏறி தலைமை பொறியாளர் அலுவலகத்தின் நுழைவு வாயில் ஆர்ச் மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினர். தொடர்ந்து ஊழியர்கள் ஏணியில் ஏறுவதை போலீசார் தடுத்தனர். இருப்பினும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் பாபு, பாரதி, தாரகேஷ் ஆகிய 3 பேர் மேலே அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்த போலீசார் அங்கு வந்து ஊழியர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.