புதுச்சேரி

கோப்பு படம்.

சாராயக்கடையில் தொழிலாளி திடீர் சாவு

Published On 2023-04-14 10:22 IST   |   Update On 2023-04-14 10:22:00 IST
  • புதுவை அருகே விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
  • போதை காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி:

விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது41). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் புதுவை செட்டிபட்டில் உள்ள சாராயக்கடை பின்புறம் மது குடிக்க சென்றார். சாராயம் குடித்து கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

திருக்கனூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போதை காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News