புதுச்சேரி

பயனாளிக்கு இஸ்திரி பெட்டியை செந்தில்குமார் எம்.எல்.ஏ வழங்கிய காட்சி.

பாகூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

Published On 2023-06-15 13:51 IST   |   Update On 2023-06-15 13:51:00 IST
  • செந்தில்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்
  • பயனாளிகளுக்கு 22 இஸ்திரி பெட்டி, 2 தவில் ஒரு சிகை திருத்தும் நாற்காலி வழங்கினார்.

புதுச்சேரி:

புதுச்சேரி அரசின் சமூக நலத்துறையின் மூலமாக நலிவடைந்த ஏழை சலவையாளர்கள் மற்றும் மருத்துவ இன மரபினர்களுக்கு இலவச தொழிற்கருவிகள் வழங்கும் விழா பாகூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் செந்தில் குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பயனாளிகளுக்கு 22 இஸ்திரி பெட்டி, 2 தவில் ஒரு சிகை திருத்தும் நாற்காலி வழங்கினார்.

இதில் சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையின் மூலமாக 5 பேருக்கு இலவச மனைப்பட்டா வழங்கப் பட்டது.

Tags:    

Similar News