புதுச்சேரி

வ.உ.சி. சிலைக்கு மத்திய மந்திரி முருகன், முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.

null

வ.உ.சி. சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி, மத்திய மந்திரி முருகன் மாலை அணிவித்து மரியாதை

Published On 2023-11-18 08:30 GMT   |   Update On 2023-11-18 08:46 GMT
  • வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு நாள் அனுசரிப்பு
  • சமூக அமைப்பு மற்றும் இயக்க நிர்வாகிகள் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி அரசு சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி புதுச்சேரி பாரதிப் பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், மத்திய இணை மந்திரி முருகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ. ஜெயக்குமார், சாய்.ஜெ. சரவணன் குமார், செல்வ கணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிகாந்தன், ரிச்சர்ட் ஜான்குமார், வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் புதிய நீதி கட்சி தலைவர் பொன்னுரங்கம் மற்றும் பல்வேறு சமூக அமைப்பு மற்றும் இயக்க நிர்வாகிகள் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தனர்.

Tags:    

Similar News