புதுச்சேரி

மரத்துக்கு பெயர்சூட்டும் விழா மற்றும் கைவினை கண்காட்சி நடைபெற்ற காட்சி. 

null

மரங்களுக்கு பெயர்சூட்டு விழா

Published On 2023-04-20 10:38 IST   |   Update On 2023-04-20 10:39:00 IST
  • பாகூர் ஆல்பா இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது.
  • பல்வேறு தலைப்புகளில் மாணவர்களின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன.

புதுச்சேரி:

பாகூர் ஆல்பா இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாணவர்களிடையே சுற்றுச் சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் மரத்துக்கு பெயர்சூட்டும் விழா மற்றும் கை வினை கண்காட்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் இயக்குனர் தனதியாகு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக செந்தில்குமார் எம்.எல்.ஏ., புதுவை மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் டாக்டர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு, பள்ளி வளாகத்தில் இருந்த மரங்களுக்கு மாணவர்களின் பெயர்களை சூட்டினர்.

இதனை தொடர்ந்து கை வினை கண்காட்சியை தொடங்கி வைத்தனர். கண்காட்சியில் சுற்றுச்சூழல், இயற்கை என பல்வேறு தலைப்புகளில் மாணவர்களின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. இதனை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பார்வையிட்டனர்.

Tags:    

Similar News