புதுச்சேரி

கோப்பு படம்.

பெண் அரசு ஊழியர்களுக்கு நேர சலுகை இந்துத்துவா கொள்கை திணிப்பு என காங்கிரஸ் கண்டனம்

Published On 2023-04-30 10:14 IST   |   Update On 2023-04-30 10:14:00 IST
  • முதலாளி வர்க்கத்திற்கு ஆதரவாக கவர்னர் தமிழிசை கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்திற்கு உரியது.
  • 2 மணி நேரம் வேலை சலுகை என்பது இந்துத்துவா கொள்கை திணிப்பு என்ப தால் கண்டிக்கின்றோம்.

புதுச்சேரி:

புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரெஞ்சு ஆட்சியில் 1936-ம் ஆண்டு நடந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் 12 பேர் உயிரிழந்து செய்த தியாகத்தால் இந்த 8 மணி நேர வேலை, ஆசியாவிலேயே முதன்முதலாக புதுவையில் சட்டமாக்கப்பட்டது.

புதுவையில் சென்ற ஆட்சியில் -மத்திய பா.ஜனதா அரசு தனது ஆர்.எஸ்.எஸ். கொள்கை கொண்ட அரசு அதிகாரி களைக் கொண்டு 12 மணி நேர வேலையை அமல்படுத்தும் தொழிலாளர் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டது. அதனை காங்கிரஸ் அரசு முறியடித்தது.

தொழிலாளர்கள் ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற கருத்தினை நியாயப்படுத்தி முதலாளி வர்க்கத்திற்கு ஆதரவாக கவர்னர் தமிழிசை கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்திற்கு உரியது. மேலும் சில அரசு துறைகளில், பெண் பணியாளர்களுக்கு, வெள்ளிக்கிழமைகளில் 2 மணி நேரம் வேலை சலுகை என்பது இந்துத்துவா கொள்கை திணிப்பு என்ப தால் கண்டிக்கின்றோம். இவ்வாறு ஏ.வி.சுப்ரமணியன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News