புதுச்சேரி

கோப்பு படம்.

2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

Published On 2023-04-21 09:09 GMT   |   Update On 2023-04-21 09:09 GMT
  • காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
  • மோட்டார் சைக்கிள் திருடியவர்களை தேடிவருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை குயவர் பாளையம் சுப்ரமணிய சிவா வீதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 47) பக்கத்து தெருவான சுந்தரமேஸ்திரி வீதியில் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார்.

சம்பவத்தன்று வேலை முடித்து 2 மோட்டார் சைக்கிளை கடை வாசலில் நிறுத்தி இரும்பு சங்கிலி இணைத்து பூட்டியுள்ளார், மறுநாள் காலை சென்று பார்த்தபோது 2 மோட்டார் சைக்கிளும் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடியவர்களை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News