புதுச்சேரி

கோப்பு படம்.

தொழிலாளி ஏரியில் தவறி விழுந்து பலி

Published On 2023-08-14 14:24 IST   |   Update On 2023-08-14 14:24:00 IST
  • தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம்- டி. என். பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகப்பன்.
  • அம்பிகா என்ற மனைவியும் 2 பிள்ளைகள் உள்ளனர்.

புதுச்சேரி:

தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம்- டி. என். பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகப்பன். இவருக்கு அம்பிகா என்ற மனைவியும் 2 பிள்ளைகள் உள்ளனர்.

நாகப்பன் விவசாய கூலி வேலை செய்து வந்தார். நேற்று பிற்பகலில் அபிஷேகபாக்கம் ஏரிக்கு சென்று மீன் பிடித்து வருவதாக சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்ப வில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்தனர்.

அப்போது ஏரியில் பிணம் ஒன்று மிதப்பதாக தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு நாகப்பன் இறந்து கிடந்தது தெரிய வந்தது. ஏரியில் மீன் பிடிக்கும் போது நாகப்பன் தவறிவிழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

தகவல் அறிந்தவுடன் தவளக்குப்பம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக கதிர்காமம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது சம்பந்தமாக போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News