புதுச்சேரி

தார் சாலை அமைக்கும் பணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்த காட்சி.

செம்மண் சாலை அமைக்கும் பணி-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்

Published On 2023-04-10 06:41 GMT   |   Update On 2023-04-10 06:41 GMT
  • ரூ.6 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பில் செம்மண் சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
  • இளநிலை பொறியாளர் சிவஞானம், ஊர் பிரமுகர்கள் சக்திபாலன் லட்சுமி காந்தன் ஆறுமுகம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

புதுவை அரசு அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் மணவெளி பூரணாங்குப்பத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் கிருஷ்ணசாமி நகரில் ரூ.3 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலும் மற்றும் ரங்கா கார்டன் நகரில் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.6 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பில் செம்மண் சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

இதற்கான பணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று காலை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரி சந்திரகுமார், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவஞானம், ஊர் பிரமுகர்கள் சக்திபாலன் லட்சுமி காந்தன் ஆறுமுகம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News