புதுச்சேரி

கோப்பு படம்.

வீட்டு வாசலில் கோலம் போட சென்ற பெண் மாயம்

Published On 2023-08-18 08:36 GMT   |   Update On 2023-08-18 08:36 GMT
  • உறவினர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் ஆதிமலர் இல்லை.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி:

வில்லியனூர் பரசுராமபுரம் பாரதிதாசன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ஆதிமலர் (வயது 47) இவரது கணவர் இறந்து விட்டதால் தனது இளைய மகள் கல்பனா பராமரிப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை ஆதிமலர் வீட்டு வாசலில் கோலம் போடச்சென்றார். ஆனால் அதன் பிறகு அவரை காணவில்லை. உறவினர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் ஆதிமலர் இல்லை.

இதையடுத்து கல்பனா தனது தாய் மாயமானது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News